தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்பி மாரியப்பன் தலைமையில் பனை மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வைத்து கருப்புக்கொடி போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பு =============== தூத்துக்குடி, ஆகஸ்ட் 4, பெருந்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது பல்வேறு தரப்பினர் திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் திருச்சி சிவா தனது பேச்சுக்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் திருச்சி சிவா மீது திராவிட மாடல் ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது இல்லை என்றால் தூத்துக்குடி வரும் திராவிட மாடல் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என தமிழக பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதைதொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிட மாடல் முதல்வர் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.அவருக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த பெருந்தலைவர் மக்கள் நல சங்கத்தினருக்கு காவல்துறை சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. முதல்வர் வரும் பாதைகள், மற்றும் நிகழ்ச்சியில் நடைபெறும் இடங்கள், நகரின் முக்கிய வீதிகள் எங்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம் என எதுவும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது இதை அடுத்து திராவிட மாடல் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டும் வகையில் தூத்துக்குடி கிராம சுற்றுப்பகுதியில் உள்ள பனை மரங்கள் நிறைந்து காணப்படும் காட்டுப் பகுதியில் வைத்து நூதன முறையில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு பனையேறி இளைஞர் சங்கம் காமராஜர் லட்சிய பேரவை ஆகிய அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் காமராஜர் உருவப் படத்தை தாங்கியபடி தங்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி, பனை மரங்களில் கருப்பு கொடிகளை கட்டி திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய படி திமுக அரசை கண்டித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்பி மாரியப்பன் தலைமையில் பனை மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வைத்து கருப்புக்கொடி போராட்டம் தூத்துக்குடியில் பரபரப்பு =============== தூத்துக்குடி, ஆகஸ்ட் 4, பெருந்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் குறித்து திமுக எம்பி திருச்சி சிவா அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது பல்வேறு தரப்பினர் திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் திருச்சி சிவா தனது பேச்சுக்கு பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் திருச்சி சிவா மீது திராவிட மாடல் ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது இல்லை என்றால் தூத்துக்குடி வரும் திராவிட மாடல் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என தமிழக பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதைதொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிட மாடல் முதல்வர் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.அவருக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த பெருந்தலைவர் மக்கள் நல சங்கத்தினருக்கு காவல்துறை சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. முதல்வர் வரும் பாதைகள், மற்றும் நிகழ்ச்சியில் நடைபெறும் இடங்கள், நகரின் முக்கிய வீதிகள் எங்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம் என எதுவும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது இதை அடுத்து திராவிட மாடல் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டும் வகையில் தூத்துக்குடி கிராம சுற்றுப்பகுதியில் உள்ள பனை மரங்கள் நிறைந்து காணப்படும் காட்டுப் பகுதியில் வைத்து நூதன முறையில் பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு பனையேறி இளைஞர் சங்கம் காமராஜர் லட்சிய பேரவை ஆகிய அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் காமராஜர் உருவப் படத்தை தாங்கியபடி தங்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி, பனை மரங்களில் கருப்பு கொடிகளை கட்டி திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய படி திமுக அரசை கண்டித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.1
- NGM கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் மூலிகை தாவரங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுவது மிகவும் பயனுள்ள முயற்சி; இது கல்வியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஒரே நேரத்தில் ஊக்குவிக்கிறது.இயற்கை விவசாயத்தின் அடிப்படை கொள்கைகள் (ரசாயனம் இன்றி மண்ணின் வளம் பேணுதல், பசுந்தழை உரம், ஜீவாமிர்தம், முதலியன). வீட்டுத் தோட்டம் / கல்லூரி வளாகத்தில் காய்கறி, கீரை, மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகள். நீர் சேமிப்பு, மண் சரிவு கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நல்ல நடைமுறைகள். மூலிகை தாவரங்கள் பற்றிய முக்கிய அம்சங்கள்கல்லூரி போடனி துறைகளில் மருத்துவ மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைத்து, மாணவர்களுக்கு தாவரத்தை நேரில் கண்டு கற்பிக்கும் நடைமுறை உள்ளது. மாணவர்கள் மூலிகை மருந்துகள், மூலிகை சார்ந்த தயாரிப்புகள் (காஸ்மெடிக், பவுடர், கஷாயம் போன்றவை) தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். NGM கல்லூரியில் ஏற்கனவே நடைபெறும் செயல்பாடுகள்போடனி துறையில் medicinal & herbal garden, MEDIPLAP போன்ற கிளப்புகள் மூலம் மூலிகை தாவர விழிப்புணர்வு, காட்சிகள், தினமும் “ஒரு மூலிகை” பற்றிய தகவல் பகிர்வு போன்றவை நடக்கின்றன.Green Society, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள், மூலிகை தாவரங்கள் நடுவது போன்ற செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது.மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?கல்லூரி medicinal garden மற்றும் related clubs (MEDIPLAP, Green Society) இல் இணைந்து செயல்படுதல்.தங்கள் வீட்டில் / ஹாஸ்டல் சுற்றுவட்டாரத்தில் சிறிய இயற்கை / மூலிகை தோட்டம் அமைத்து, கல்லூரி اஆசிரியர்களிடம் இருந்து விதை, தளவாட ஆலோசனைகளைப் பெறுதல். ஒரு சிறிய ஊக்கச் செய்திஇப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பிடித்து செயல்படும் மாணவர்கள், எதிர்காலத்தில் இயற்கை விவசாய yritt entrepreneur, மூலிகை தயாரிப்பு நிபுணர், சுற்றுச்சூழல் ஆலோசகர் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.1
- சிரிக்க மற்றும் சிந்திக்க.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- (24-12-2025) புதன்கிழமை பெரியாரின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1