சுசீந்திரம் அருகே பூதத்தார் இசக்கியம்மன் கோயிலில் திருட்டு குமரி: சுசீந்திரம் அருகே பூதத்தார் இசக்கியம்மன் கோயிலில் திருட்டு: 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது சுசீந்திரம் அருகேயுள்ள ஆசிரமம் பகுதியில் உள்ள வடிவீஸ்வரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதத்தார் இசக்கியம்மன் கோயிலின் கதவை உடைத்து திருட்டு நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோயிலுக்கு வந்த பூசாரி, ரூ.1500 மதிப்புள்ள பித்தளை சூலாயுதம் காணாமல் போனதை கவனித்து நிர்வாகத்திடம் தகவல் அளித்தார். இதுகுறித்து அஞ்சன மெழுதிய கண்டன் சாஸ்தா கோயில் செயல் அலுவலர் கொம்பு குமார் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மருங்கூர் அமராவதி விளையை சேர்ந்த மரிய சேவியர் (37) கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
சுசீந்திரம் அருகே பூதத்தார் இசக்கியம்மன் கோயிலில் திருட்டு குமரி: சுசீந்திரம் அருகே பூதத்தார் இசக்கியம்மன் கோயிலில் திருட்டு: 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது சுசீந்திரம் அருகேயுள்ள ஆசிரமம் பகுதியில் உள்ள வடிவீஸ்வரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதத்தார் இசக்கியம்மன் கோயிலின் கதவை உடைத்து திருட்டு நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோயிலுக்கு வந்த பூசாரி, ரூ.1500 மதிப்புள்ள பித்தளை சூலாயுதம் காணாமல் போனதை கவனித்து நிர்வாகத்திடம் தகவல் அளித்தார். இதுகுறித்து அஞ்சன மெழுதிய கண்டன் சாஸ்தா கோயில் செயல் அலுவலர் கொம்பு குமார் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மருங்கூர் அமராவதி விளையை சேர்ந்த மரிய சேவியர் (37) கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி காளீஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், முன்னாள் எம்,பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இருந்தனர்.1
- சங்கரன்கோவில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது1
- திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.1
- கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,4
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- Post by மா.கணேஷ்1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக குமரியில் இருந்து நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார்.அப்போது பறக்கை விளக்கு பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.3வது முறையாக அவரது வாகனத்தை அதிகாரிகளால் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.1