Shuru
Apke Nagar Ki App…
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமிழக சட்டமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சியில் காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்களியும் மையத்திற்கு வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆர்வமுடன் பொதுமக்கள் வாக்களித்து வருகிறார்கள்
S.Maria selvam
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமிழக சட்டமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இன்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சியில் காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்களியும் மையத்திற்கு வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆர்வமுடன் பொதுமக்கள் வாக்களித்து வருகிறார்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பூத் எண் 271ல் வாக்களிக்கச் சென்ற பொதுமக்கள் மிகுந்த ஆபத்தான முறையிலேயே வாக்களிக்க சென்றனர். வாக்கு சாவடி அருகே ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதால் ரயில்வே கேட் பின்புறம் வசிக்கும் உள்ள பொதுமக்கள் 4 கிலோ மீட்டர் சுற்றி வந்து வாக்களிக்க வேண்டிய சூழலில் ஆபத்தான முறையில் ரயில்வே கேட்டை கடந்து வந்து இன்று வாக்களித்துவிட்டு சென்றனர்2
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..2
- ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நாதக வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் ராமசாமி அவரது வாக்கினை செலுத்தினார்1
- தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் கணேஷ் நகரில் உள்ள வேட்பாளரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணம் பதுக்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தென்பாகம் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டிலும் பெரிய அளவிலான தொகை சிக்கியிருப்பது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- MH 🌐 ONLINE.....1
- கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயதரணி. இவர் திருப்பதி சாரம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 118 இன்று தனது வாக்கினை பொதுமக்களுடன் வரிசையில் நின்று பதிவு செய்தார்.வாக்காளர்கள் அனைவரும் இன்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.1
- Post by மா.சுடலைமணி1
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்க சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..2