திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top class education in schools விண்ணப்பங்கள் வரவேற்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top class education in schools விண்ணப்பங்கள் வரவேற்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoalrship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top Class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சிபெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்,புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/ மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.125,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிபந்தனைகள் மாணவ,மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC). பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். வருமான வரம்பு: குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். புதுப்பித்தல் (Renewal): இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவமாணவியர்கள் நடப்பாண்டி (202827) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பித்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Schoalrship Portal (Renewal) உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 3108.2026 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான புதுபித்தல் for Renewal) கடைசி நாள்: 15.09.2026 புதியது (Fresh): (2026-27) புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal httpsதுறையின் இணையதளத்தினை அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top class education in schools விண்ணப்பங்கள் வரவேற்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top class education in schools விண்ணப்பங்கள் வரவேற்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoalrship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top Class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சிபெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்,புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/ மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.125,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிபந்தனைகள் மாணவ,மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC). பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். வருமான வரம்பு: குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். புதுப்பித்தல் (Renewal): இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவமாணவியர்கள் நடப்பாண்டி (202827) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பித்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Schoalrship Portal (Renewal) உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 3108.2026 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான புதுபித்தல் for Renewal) கடைசி நாள்: 15.09.2026 புதியது (Fresh): (2026-27) புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal httpsதுறையின் இணையதளத்தினை அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம். நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன. நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். “இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.1
- கோவிலூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது. பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 28, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது.1
- கிருஷ்ணகிரி பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அருகே பாரிஸ் நகரில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி திருமதி குமுதா தலைமையில் நடைப்பெற்றது1
- விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக விவசாய அணி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கண்டன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் மற்றும் பாமக தருமபுரி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி ஆகியோர் குரல் கொடுத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும், ஆனால் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் வட்டி உள்ளிட்டவற்றுடன் கடன் சுமை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பாஜகவினர், தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.1
- திருவண்ணாமலை சூனியம் பருவதமலை கடலாடி என்ற ஊர் சுடிதார் பை சூனியம் மினாடி பண்டிகை சூனியத்துக்காக வந்ததா இந்த மதத்தை எவரும் நம்பாதீர்கள் திருவண்ணாமலையில் சூனியம் பருவதமலை பக்கம் கடல் அலைகின்ற ஊர் சுவிதா பாய் சூனியக்காரன் இவரால் முற்படும்பம் அளிக்கிறது குடும்பத் தலைவன் அழிகிறான் பணம் கட்டுமரட்டுகிறான் காதுக்குள்ளே வந்து பேசிகிட்டு எரிச்சல் கொடுத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டுறான் மதம் மாற சொல்றான் முடியல ரொம்ப முடியாம தான் வருது சீக்கிரமா உள்ள தள்ற வரைக்கும் கொடுத்துட்டே இருப்பான் வீடியோ1
- கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.1
- நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி1
- காணாமல் போன மலைகள் குறித்து அமைச்சர் பேச்சு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் என குறிப்பிட்டது மக்களிடையே அதிர்ச்சி காணாமல் போன மலைகள்” ,மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சர் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி விளக்கமாகப் பேசினார். அப்போது, மலைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான புகைப்படங்களை சட்டசபையில் காண்பித்து, அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தது சமூக வலைத்தளங்களில் பரவியது . இதில், #திருப்பத்தூர் மாவட்டம் – #ஆம்பூர் எனக் குறிப்பிட்டு அமைச்சர் பேசியது திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பகுதியில் மலை வளங்கள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக அமைச்சர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது கவனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் குறிப்பிட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.1