திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான 38ஆவது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், வணிக மேலாண்மைத் துறையில் (M.B.A) 162 மாணவர்களும், கணினி பயன்பாட்டியல் துறையில் (M.C.A) 107 மாணவர்களும் என மொத்தம் 262 மாணவ, மாணவிகள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். வணிக மேலாண்மைத் துறையில் ஆறு மாணவர்களும், கணினி பயன்பாட்டியல் துறையில் ஆறு மாணவர்களும் என மொத்தம் 12 மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பெற்றனர். 2022-24 எம்.பி.ஏ பிரிவில் ஜெயஜோதி.M முதல் இடத்தையும், சௌந்தர்யா.S இரண்டாம் இடத்தையும், சௌபர்ணிகா.P மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2023-25 எம்.பி.ஏ பிரிவில் பூர்ணிமா.T முதல் இடத்தையும், மஹேஸ்வரி.R இரண்டாம் இடத்தையும், சௌமியா.G மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அதேபோல், 2022-24 எம்.சி.ஏ பிரிவில் அனிதா.A முதல் இடத்தையும், தனுஷா.V இரண்டாம் இடத்தையும், சக்தி பிரியா.R மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2023-25 எம்.சி.ஏ பிரிவில் ஐஸ்வர்யா.M முதல் இடத்தையும், ஸ்வேதா.D இரண்டாம் இடத்தையும், ஜெசிமா யாஸ்மின்.A மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனையை எட்டினர். அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சென்னை HCL Tech நிறுவனத்தின் Head of Campus Relations மற்றும் SHRM – Senior Certified Professional ஆகிய பொறுப்புகளை வகிக்கும் பிரசாத்.P சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழா கல்லூரியின் தலைவர் K. தனலட்சுமி அம்மாள், முதன்மைத் தலைவர் R.S.K. ரகுராம் மற்றும் டிரஸ்டி சூர்யா ரகுராம் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் D. வாசுதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் S. மணிமாறன், கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் P. ஜெகநாதன், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினர். இறுதியாக, பி.எஸ்.என்.ஏ கல்லூரி நிர்வாகம் பட்டங்களைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டது.
திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான 38ஆவது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், வணிக மேலாண்மைத் துறையில் (M.B.A) 162 மாணவர்களும், கணினி பயன்பாட்டியல் துறையில் (M.C.A) 107 மாணவர்களும் என மொத்தம் 262 மாணவ, மாணவிகள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். வணிக மேலாண்மைத் துறையில் ஆறு மாணவர்களும், கணினி பயன்பாட்டியல் துறையில் ஆறு மாணவர்களும் என மொத்தம் 12 மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பெற்றனர். 2022-24 எம்.பி.ஏ பிரிவில் ஜெயஜோதி.M முதல் இடத்தையும், சௌந்தர்யா.S இரண்டாம் இடத்தையும், சௌபர்ணிகா.P மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2023-25 எம்.பி.ஏ பிரிவில் பூர்ணிமா.T முதல் இடத்தையும், மஹேஸ்வரி.R இரண்டாம் இடத்தையும், சௌமியா.G மூன்றாம் இடத்தையும் பெற்றனர். அதேபோல், 2022-24 எம்.சி.ஏ பிரிவில் அனிதா.A முதல் இடத்தையும், தனுஷா.V இரண்டாம் இடத்தையும், சக்தி பிரியா.R மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2023-25 எம்.சி.ஏ பிரிவில் ஐஸ்வர்யா.M முதல் இடத்தையும், ஸ்வேதா.D இரண்டாம் இடத்தையும், ஜெசிமா யாஸ்மின்.A மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனையை எட்டினர். அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சென்னை HCL Tech நிறுவனத்தின் Head of Campus Relations மற்றும் SHRM – Senior Certified Professional ஆகிய பொறுப்புகளை வகிக்கும் பிரசாத்.P சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழா கல்லூரியின் தலைவர் K. தனலட்சுமி அம்மாள், முதன்மைத் தலைவர் R.S.K. ரகுராம் மற்றும் டிரஸ்டி சூர்யா ரகுராம் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் D. வாசுதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் S. மணிமாறன், கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் P. ஜெகநாதன், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினர். இறுதியாக, பி.எஸ்.என்.ஏ கல்லூரி நிர்வாகம் பட்டங்களைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டது.
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக, பத்மகிரீஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்பம் குளத்தை சுற்றி வந்தபோது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்ற இந்த தெப்பத் திருவிழா பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.1
- மே 28 அன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் CM விஜய் அவர்களின் கட்டளைப்படியும், மதுரை அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்களின் வலியுறுத்தலின்படியும் ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. மதுரையின் அண்ணன் மருதுபாண்டி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பரங்குன்றம் பகுதி TVK தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர். இவர்களின் இந்த சிறப்பான சேவை மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை உழவர் சந்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டார். தன் உடன் பிறந்த சகோதரியின் மகளுக்கான இந்த இல்ல விழாவிற்கு, அமைச்சர் கீர்த்தனா தனது உறவினர்களுடன் இணைந்து மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசைகளை சுமந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று பங்கேற்றார். விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவிற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து அமைச்சரை வரவேற்றனர். திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவின்போது, அமைச்சர் தனது சகோதரியின் மகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பங்கேற்றுவிட்டு புறப்பட்ட அமைச்சர் கீர்த்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, அவர் அவர்களைத் தவிர்த்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புது மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.1
- தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை உழவர் சந்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது உடன் பிறந்த சகோதரியின் இல்ல விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவுக்கு, வெடி வெடித்து, மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசைகளுடன் ஓர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவை, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். அவரது உறவினர்கள் மேளதாளத்துடன் சீர்வரிசைகளைச் சுமந்து வந்தபோது, அமைச்சர் கீர்த்தனாவும் அவர்களுடன் இணைந்து சீர் சுமந்து ஊர்வலமாக வந்து விழாவில் பங்கேற்றார். திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் தனது சகோதரியின் மகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். விழாவில் கலந்துகொண்டு புறப்படத் தயாரான அமைச்சர் கீர்த்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்ப முயன்றனர். ஆனால், அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நல்லாண்டவர் கோவில் அருகே உள்ள செக்போஸ்ட்டில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசவிருப்பதாகத் தகவல் பரவியது. இதனால், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காலை 7:30 மணியளவில் வந்து சுமார் ஒன்றரை மணி நேரமாக காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப்பின் மேடைக்கு வந்த அமைச்சர் ரமேஷ் பேசத் தொடங்கினார். தனது உரையில், தான் மன்னர் பரம்பரையில் பிறந்தவன் அல்ல என்றும், எளிமையான குடும்பத்தில் பிறந்தவன் என்றும் அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார். மேலும், தான் ஒரு எம்.எல்.ஏ ஆவேனா என்பதே தனக்குத் தெரியாது எனக் கூறி, தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தற்போது எம்.எல்.ஏவாக இருப்பதற்கு வாய்ப்பளித்த ஆனந்த் அண்ணன் மற்றும் தங்கள் தளபதிக்கு மனமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்தார். பேச்சு முடிந்ததும், தொண்டர்களிடமிருந்து மனுக்களைப் பெறுவதற்கு தனக்கு நேரமில்லை என்று கூறி, ஒருவரிடம் அவற்றை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். எந்தவித மேலதிக பதிலையும் அளிக்காமல், அமைச்சர் ரமேஷ் திடீரென காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.1
- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட கெஜ்ஜிலியபொம்மன்பட்டியில் இன்று வரமாலை மாலை திருவிழா பக்தி பரவசத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, கோப்பா நாயக்கர் மந்தை சந்திப்பு பகுதியில் திரளான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசித்து வழிபட்டனர். விழாவையொட்டி பல ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினரும், ஊர் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.1