logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை மாநகராட்சியில் நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி, மாநகராட்சியின் பொறுப்பு மேயர் தி.நாகராஜன், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் விரிவான மனுவைச் சமர்ப்பித்துள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மதுரை மாநகராட்சியின் நிர்வாகம், சுகாதாரம், வருவாய், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமைச் செயலாளர் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவில், அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள 125 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தாலும், அதன் முழுத் திறன் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாதந்தோறும் சுமார் 15 லட்சம் ரூபாய் மின்சாரச் செலவு செய்யப்படும் நிலையில், கழிவுநீரின் ஒரு பகுதி நேரடியாக கீரைத் தோட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுவதாகவும், குறைந்த அளவே சுத்திகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்துக் கழிவுநீரையும் முழுமையாகச் சுத்திகரித்து மாற்றுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, மீதமுள்ள நீரை அருகிலுள்ள கண்மாய்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிக்காகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தும், இயந்திரங்கள் செயல்படாமல் கிடப்பில் இருப்பதாகவும், தொழிலாளர்கள் கைகளால் குப்பைகளைப் பிரிக்கும் நிலை தொடர்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதாகவும், இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தவும் கோரப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்திற்கு முன்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 13 முக்கிய கால்வாய்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் மற்றும் உபரிநீர் தடையின்றி வெளியேற இது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் சத்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அருகிலிருந்த கருப்பட்டி சத்திரம் முறையான அனுமதியின்றி இடிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான வரலாற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில், மாநகராட்சியே பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாடகைதாரர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாமல் உள்ள தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பரிந்துரைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசுத் துறைகளின் குடியிருப்புகள், நீதிமன்ற வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், மத்திய கிடங்கு கழகக் கட்டிடங்கள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்குச் சேவை வரி மற்றும் பிற கட்டணங்கள் முறையாக விதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2015 முதல் 2022 வரை கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்குச் சொத்து வரி விதிக்கப்படாமல் இருப்பதாகவும், குடிசை மாற்றுத் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற பல கட்டிடங்கள் இன்னும் வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், நட்சத்திர ஓட்டல்கள், குளிரூட்டப்பட்ட திருமண மண்டபங்கள் மற்றும் உயர்தர மருத்துவமனைகளுக்கு அரசாணைப்படி விதிக்கப்பட வேண்டிய அதிகபட்ச வரி வசூலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் அறிக்கையின்படி, மதுரை மாநகராட்சியில் 12,689 தணிக்கைத் தடைகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 3,922.72 கோடி ரூபாய் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தணிக்கைத் தடைகளை விரைந்து தீர்த்தால் மாநகராட்சிக்குக் கணிசமான வருவாய் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி, நிர்வாக மேம்பாடு மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பொறுப்பு மேயர் தி.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

3 hrs ago
user_N-KIPSRA
N-KIPSRA
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
3 hrs ago
216cac56-e2c0-4d5d-81e2-d1a8b5e4bcd6

மதுரை மாநகராட்சியில் நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி, மாநகராட்சியின் பொறுப்பு மேயர் தி.நாகராஜன், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் விரிவான மனுவைச் சமர்ப்பித்துள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மதுரை மாநகராட்சியின் நிர்வாகம், சுகாதாரம், வருவாய், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் தலைமைச் செயலாளர் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவில், அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள 125 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தாலும், அதன் முழுத் திறன் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாதந்தோறும் சுமார் 15 லட்சம் ரூபாய் மின்சாரச் செலவு செய்யப்படும் நிலையில், கழிவுநீரின் ஒரு பகுதி நேரடியாக கீரைத் தோட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுவதாகவும், குறைந்த அளவே சுத்திகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்துக் கழிவுநீரையும் முழுமையாகச் சுத்திகரித்து மாற்றுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து, மீதமுள்ள நீரை அருகிலுள்ள கண்மாய்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிக்காகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்தும், இயந்திரங்கள் செயல்படாமல் கிடப்பில் இருப்பதாகவும், தொழிலாளர்கள் கைகளால் குப்பைகளைப் பிரிக்கும் நிலை தொடர்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதாகவும், இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தவும் கோரப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்திற்கு முன்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட 13 முக்கிய கால்வாய்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் மற்றும் உபரிநீர் தடையின்றி வெளியேற இது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் சத்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அருகிலிருந்த கருப்பட்டி சத்திரம் முறையான அனுமதியின்றி இடிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான வரலாற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில், மாநகராட்சியே பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாடகைதாரர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாமல் உள்ள தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பரிந்துரைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசுத் துறைகளின் குடியிருப்புகள், நீதிமன்ற வளாகங்கள், விளையாட்டு அரங்குகள், மத்திய கிடங்கு கழகக் கட்டிடங்கள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்குச் சேவை வரி மற்றும் பிற கட்டணங்கள் முறையாக விதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2015 முதல் 2022 வரை கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்குச் சொத்து வரி விதிக்கப்படாமல் இருப்பதாகவும், குடிசை மாற்றுத் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற பல கட்டிடங்கள் இன்னும் வரி வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், நட்சத்திர ஓட்டல்கள், குளிரூட்டப்பட்ட திருமண மண்டபங்கள் மற்றும் உயர்தர மருத்துவமனைகளுக்கு அரசாணைப்படி விதிக்கப்பட வேண்டிய அதிகபட்ச வரி வசூலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் அறிக்கையின்படி, மதுரை மாநகராட்சியில் 12,689 தணிக்கைத் தடைகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 3,922.72 கோடி ரூபாய் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தணிக்கைத் தடைகளை விரைந்து தீர்த்தால் மாநகராட்சிக்குக் கணிசமான வருவாய் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி, நிர்வாக மேம்பாடு மற்றும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பொறுப்பு மேயர் தி.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 31) காலை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா”, “கோபாலா” என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறே தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
    1
    மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 31) காலை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா”, “கோபாலா” என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறே தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    2 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில், இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஓம் என்ற வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. யாகசாலையில் வைக்கப்பட்ட சங்குகளில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு வண்ணப் பட்டுத் துணிகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு "அரோகரா அரோகரா" எனக் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில், இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஓம் என்ற வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. யாகசாலையில் வைக்கப்பட்ட சங்குகளில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு வண்ணப் பட்டுத் துணிகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.

பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு "அரோகரா அரோகரா" எனக் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசி (34) என்பவர், தனது மனைவி தனலட்சுமி மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தனலட்சுமி தன்னை ஏமாற்றி, நகைகளை அபகரித்து, தற்போது வேறொருவருடன் நான்காவது திருமணம் செய்துகொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சன்னாசி குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுனராகப் பணிபுரியும் சன்னாசி, 2024 ஆம் ஆண்டு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்த சமயத்தில், சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது, தனலட்சுமி வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய சன்னாசி நகைகள் குறித்து கேட்டபோது, அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும், மீட்டுத் தருவதாகவும் தனலட்சுமி கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். தனலட்சுமி வீட்டிற்கு வராமலும், நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும், தனது மனைவியும் அவரது தாயாரும் தன்னை ஏமாற்றி வந்ததாகவும் சன்னாசி குறிப்பிட்டுள்ளார். நேரில் சென்று கேட்க முயன்றபோது, தனது மனைவி கோயம்புத்தூர் சென்றுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் விசாரித்ததில், தனலட்சுமி கோயம்புத்தூரில் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக சன்னாசி கூறியுள்ளார். தனக்கு முன்னால் தனலட்சுமி இரண்டு நபர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இப்போது தன்னிடமும் நகைகளை அபகரித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நான்காவது திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் சன்னாசி புகார் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மோசடி செய்த தனது மனைவி மற்றும் அவரது தாயார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் சன்னாசி கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசி (34) என்பவர், தனது மனைவி தனலட்சுமி மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தனலட்சுமி தன்னை ஏமாற்றி, நகைகளை அபகரித்து, தற்போது வேறொருவருடன் நான்காவது திருமணம் செய்துகொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சன்னாசி குற்றம்சாட்டியுள்ளார்.

ஓட்டுனராகப் பணிபுரியும் சன்னாசி, 2024 ஆம் ஆண்டு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்த சமயத்தில், சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது, தனலட்சுமி வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய சன்னாசி நகைகள் குறித்து கேட்டபோது, அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும், மீட்டுத் தருவதாகவும் தனலட்சுமி கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். தனலட்சுமி வீட்டிற்கு வராமலும், நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும், தனது மனைவியும் அவரது தாயாரும் தன்னை ஏமாற்றி வந்ததாகவும் சன்னாசி குறிப்பிட்டுள்ளார். நேரில் சென்று கேட்க முயன்றபோது, தனது மனைவி கோயம்புத்தூர் சென்றுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் விசாரித்ததில், தனலட்சுமி கோயம்புத்தூரில் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக சன்னாசி கூறியுள்ளார். தனக்கு முன்னால் தனலட்சுமி இரண்டு நபர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இப்போது தன்னிடமும் நகைகளை அபகரித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நான்காவது திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் சன்னாசி புகார் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மோசடி செய்த தனது மனைவி மற்றும் அவரது தாயார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் சன்னாசி கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி. அழகாபுரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த ஒரு வெடி விபத்தில், அதன் உரிமையாளர் கருப்பையா (எ) கணேசன் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் விபத்தில் உயிரிழந்த கணேசனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பி. அழகாபுரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த ஒரு வெடி விபத்தில், அதன் உரிமையாளர் கருப்பையா (எ) கணேசன் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் விபத்தில் உயிரிழந்த கணேசனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் கனமழையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் கனமழையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    21 hrs ago
  • மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு இன்று (மே.30) மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உதவி ஆணையர் செல்வின் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் பாராட்டுக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
    1
    மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு இன்று (மே.30) மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உதவி ஆணையர் செல்வின் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் பாராட்டுக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.