logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

Looking to Buy Brand : vivo Budget : 4000 City / Locality : thottiyam Device Category : Smartphone Variant (RAM / Storage) : 6GB / 128GB Body Condition : Like new Network Connectivity : 5G no

6 hrs ago
user_BHARTH A
BHARTH A
முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
6 hrs ago

Looking to Buy Brand : vivo Budget : 4000 City / Locality : thottiyam Device Category : Smartphone Variant (RAM / Storage) : 6GB / 128GB Body Condition : Like new Network Connectivity : 5G no

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே போடுவார்பட்டியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அதை அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. கடந்த சம்பா பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது போடுவார்பட்டியில் சுமார் 15,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ள நிலையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல்லை மூடி பாதுகாக்க போதிய தார்ப்பாய்கள் இல்லை என்றும், சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து நெல் கருகி வீணானது. அண்மையில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயியும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் பேசுகையில், நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும் அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது என்றும், ஆரம்ப காலத்தில் இருந்தே தார்ப்பாய் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் மூடப்படாமல் விடப்பட்டு பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்துவிட்டன என்றும் கூறினார். இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாகப் பிரித்து சீரமைத்து வருவதாகவும், தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தொடர் கோரிக்கையாகும்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி அருகே போடுவார்பட்டியில் உள்ள திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த 50,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, அதை அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றி ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது. கடந்த சம்பா பருவத்தில் திருச்சி மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது போடுவார்பட்டியில் சுமார் 15,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ள நிலையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல்லை மூடி பாதுகாக்க போதிய தார்ப்பாய்கள் இல்லை என்றும், சில இடங்களில் முறையாக மூடப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, வெயிலில் நெல் மூட்டைகள் கிழிந்து நெல் கருகி வீணானது. அண்மையில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான கிலோ நெல் வீணாகியுள்ளது. இதற்கு வாணிபக் கழக அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயியும், சமூக ஆர்வலருமான வெங்கடேசன் பேசுகையில், நெல் மூட்டைகள் பாதுகாப்பில் ஒவ்வொரு அரசும் அதிகாரிகளும் தவறி வருவது வேதனையானது என்றும், ஆரம்ப காலத்தில் இருந்தே தார்ப்பாய் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் மூடப்படாமல் விடப்பட்டு பெரும்பாலான நெல் மூட்டைகள் கருப்பாகி முளைத்துவிட்டன என்றும் கூறினார்.

இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், பாதிக்கப்பட்ட மூட்டைகளை உடனடியாகப் பிரித்து சீரமைத்து வருவதாகவும், தார்ப்பாய்கள் இருப்பில் உள்ளதாகவும், மழைநீர் தேங்காத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தொடர் கோரிக்கையாகும்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த அய்யனார் கோவில் பட்டியில் இன்று தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மணப்பாறை எம்எல்ஏ ர.கதிரவன் ஆகியோரின் ஆலோசனைப்படி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை அய்யனார் கோவில் பட்டி 1வது வார்டு இளைஞர் அணி மற்றும் தவெக நிர்வாகிகள், மகளிர் அணி சார்பாக மேற்கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த அய்யனார் கோவில் பட்டியில் இன்று தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மணப்பாறை எம்எல்ஏ ர.கதிரவன் ஆகியோரின் ஆலோசனைப்படி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை அய்யனார் கோவில் பட்டி 1வது வார்டு இளைஞர் அணி மற்றும் தவெக நிர்வாகிகள், மகளிர் அணி சார்பாக மேற்கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அத்துடன், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை விவசாயப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அத்துடன், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மேலும், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் சசிலாபானுசாதிக் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடற்கல்வி ஆசிரியர் சரவணன், யோகா செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் பலம் பெறுவதாகவும், நினைவுத்திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார். அத்துடன், யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தி, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும், கவனச்சிதறல் ஏற்படாது என்றும், உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விழிப்புணர்வு அளித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். இதில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மேலும், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் சசிலாபானுசாதிக் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடற்கல்வி ஆசிரியர் சரவணன், யோகா செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் பலம் பெறுவதாகவும், நினைவுத்திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார். அத்துடன், யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தி, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும், கவனச்சிதறல் ஏற்படாது என்றும், உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விழிப்புணர்வு அளித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். இதில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன் ஓட்டுநர் முகமது யாஷின், 25 மாணவர்களை ஏற்றிச் சென்றபோது மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த ஓட்டுநர், கிரிக்கெட் போட்டிக்காக 25 மாணவர்களை தஞ்சாவூர் அரண்மனை மைதானத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். மீண்டும் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில்தான் குடிபோதையில் அதிவேகமாகச் சென்றதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் வேனை நிறுத்திச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், ஓட்டுநர் முகமது யாஷின் மதுபோதையில் இருந்தது உறுதியானதால், போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
    1
    தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன் ஓட்டுநர் முகமது யாஷின், 25 மாணவர்களை ஏற்றிச் சென்றபோது மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய புகாரில் கைது செய்யப்பட்டார்.

இந்த ஓட்டுநர், கிரிக்கெட் போட்டிக்காக 25 மாணவர்களை தஞ்சாவூர் அரண்மனை மைதானத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். மீண்டும் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில்தான் குடிபோதையில் அதிவேகமாகச் சென்றதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் வேனை நிறுத்திச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், ஓட்டுநர் முகமது யாஷின் மதுபோதையில் இருந்தது உறுதியானதால், போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
    user_Thanjavurnews
    Thanjavurnews
    Local News Reporter தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துர்வாசபுரத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருமஞ்சனம் திருவிழா வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துர்வாசபுரத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருமஞ்சனம் திருவிழா வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீர்வளத்துரை மற்றும் ஊகவளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸிஆனந்த் அவர்களின் ஆணைப்படியும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நகர கழக செயலாளர் அழகர் மற்றும் வடக்கு நகர செயலாளர் திருப்பதி ஆகியோரின் தலைமையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக, மணப்பாறையில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் 108 சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மறுவாழ்வு மையம், அரசு போக்குவரத்து பணிமனை முன்புறம் உட்பட மணப்பாறையின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டு, கழக கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீர்வளத்துரை மற்றும் ஊகவளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸிஆனந்த் அவர்களின் ஆணைப்படியும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நகர கழக செயலாளர் அழகர் மற்றும் வடக்கு நகர செயலாளர் திருப்பதி ஆகியோரின் தலைமையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

விழாவின் ஒரு பகுதியாக, மணப்பாறையில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் 108 சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மறுவாழ்வு மையம், அரசு போக்குவரத்து பணிமனை முன்புறம் உட்பட மணப்பாறையின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டு, கழக கொடிகள் ஏற்றப்பட்டன.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. மேழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தனது மனைவி பழனியம்மாள் மற்றும் மகன் ஹரிகிருஷ்ணனுடன், பள்ளி மாணவரின் ஆதார் விவரங்களில் பெயர் இணைப்பு பணிக்காக நெட் சென்டருக்குச் சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. கருமந்துறை பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து கொண்டிருந்த பழனியம்மாள் மீது மோதியது. இந்த வாகனத்தை நடுதொரடிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கதிர்வேல் (20) ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பழனியம்மாள், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் சில இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதிவேக வாகன ஓட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. மேழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தனது மனைவி பழனியம்மாள் மற்றும் மகன் ஹரிகிருஷ்ணனுடன், பள்ளி மாணவரின் ஆதார் விவரங்களில் பெயர் இணைப்பு பணிக்காக நெட் சென்டருக்குச் சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. கருமந்துறை பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து கொண்டிருந்த பழனியம்மாள் மீது மோதியது. இந்த வாகனத்தை நடுதொரடிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கதிர்வேல் (20) ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பழனியம்மாள், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் சில இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதிவேக வாகன ஓட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.