Shuru
Apke Nagar Ki App…
ஓசூரில் உள்ள ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை ஓசூரில் உள்ள ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் ( ஏப்-21 ) இன்று செவ்வாய்க்கிழமை முன்னிட்டு காலையில் 6:00 மணியிலிருந்து 7:00 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்து தூபதீபா காட்டி வணங்கினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து பிரசாதம் வழங்கினார்கள்.
USHA INDU
ஓசூரில் உள்ள ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை ஓசூரில் உள்ள ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் ( ஏப்-21 ) இன்று செவ்வாய்க்கிழமை முன்னிட்டு காலையில் 6:00 மணியிலிருந்து 7:00 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்து தூபதீபா காட்டி வணங்கினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து பிரசாதம் வழங்கினார்கள்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமிக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.குப்புசாமி அவர்களை ஆதரித்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களுக்கு மத்தியில் முதலமைச்சர் திமுக ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் அவரைப் போல கர்நாடகாவிலும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் குப்புசாமிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் அதனால் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் தே.மதியழகன் ஒய் பிரகாஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரகு, திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்ந்த ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.1
- கிருஷ்ணகிரிபுதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் செல்லக்குமாருக்கு ஆதரவு கேட்டு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கேசிவக்குமார் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் இந்தபிரச்சாரத்தின் போதுகிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பருகூர் வேட்பாளர் மதியழகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ,கூட்டணிக் கட்சிபலர் கலந்து கொண்டனர்1
- தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டி டிக்கியில் சோதனை. தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.1
- மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா. ராகேஷ், மலைப்பகுதி கிராமங்களில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்களை சந்தித்து பேசிய ராகேஷ், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வன உரிமைச் சான்று தொடர்பாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தச் சான்றுகளை வழங்கும் பெயரில், ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை பணம் வசூலிக்கப்பட்டதாக மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வழங்கப்பட்டுள்ள வன உரிமைச் சான்றுகள் முறையான பட்டாவாக இல்லாமல், மக்களை ஏமாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதனால் மலைப்பகுதி மக்கள் உரிய நில உரிமையை பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னை மக்கள் தேர்வு செய்து வெற்றி பெறச் செய்தால், தற்போதைய வன உரிமைச் சான்றுகளை சரிபார்த்து, வருவாய்த் துறை மூலம் சட்டப்படி நில பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மக்களின் நில உரிமை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த பிரச்சாரம் மலைப்பகுதி மக்களிடையே கவனம் ஈர்த்ததுடன், தேர்தல் களத்தில் புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.1
- மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியோ அல்லது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவோ கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வித்யா ராணியை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.1
- தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாமக ராமதாஸ் அணி வாணியம்பாடி வேட்பாளர் அன்பரசு இன்று (ஏப்ரல் 20) வாக்கு சேகரிக்கும் பணிகள் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் பூக்கள் தூவி பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1