logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கடத்திய வரப்பட்ட லாரி பறிமுதல் *திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட கூழாங்கல் மணல் - வாணியம்பாடியில் டிப்பர் லாரியுடன் பறிமுதல்* திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பைபாஸ் சாலையில் திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட விலை உயர்ந்த கூழாங்கல் மணல் டிப்பர் லாரியுடன் போலீசாரால் இன்று (ஆகஸ்ட் 25) பறிமுதல் செய்யப்பட்டது. நியூடவுன் பகுதியை சேர்ந்த சோனி என்பவர் இந்த மணலை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே லாரியில் மேலே எம்-சாண்ட் போட்டு உள்ளே கூழாங்கல் மணல் மற்றும் மண் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

12 hrs ago
user_Yuvaraj Tirupattur Dist News R
Yuvaraj Tirupattur Dist News R
Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
12 hrs ago
a90f0917-05ec-4e5d-ab8c-1ca57ca5199d
1415540f-e562-49dd-8e4d-d1fef84046ca

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கடத்திய வரப்பட்ட லாரி பறிமுதல் *திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட கூழாங்கல் மணல் - வாணியம்பாடியில் டிப்பர் லாரியுடன் பறிமுதல்* திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பைபாஸ் சாலையில் திருச்சியில் இருந்து கடத்தி வரப்பட்ட விலை உயர்ந்த கூழாங்கல் மணல் டிப்பர் லாரியுடன் போலீசாரால் இன்று (ஆகஸ்ட் 25) பறிமுதல் செய்யப்பட்டது. நியூடவுன் பகுதியை சேர்ந்த சோனி என்பவர் இந்த மணலை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே லாரியில் மேலே எம்-சாண்ட் போட்டு உள்ளே கூழாங்கல் மணல் மற்றும் மண் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாரியாரின் 122 ஆண்டு பிறந்தநாள் விழா *திருப்பத்தூர் கஸ்பா சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்தநாள் விழா* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கஸ்பா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 25) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சீடர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாரியாரின் 122 ஆண்டு பிறந்தநாள் விழா 
*திருப்பத்தூர் கஸ்பா சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்தநாள் விழா*
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கஸ்பா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 25) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சீடர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
    1
    ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
    user_Gopi
    Gopi
    Local Politician வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    3
    25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம்  ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர்  மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்  திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும்  மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு  மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால்  பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய  " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    1
    பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • பாலக்கோடு அருகே கெயில் குழாயிலிருந்து வெளியேறிய நச்சுநீர் – விவசாய நிலத்தில் கலந்ததால் பசுமாடு உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது ஆயில் கலந்த நச்சுநீர் விவசாய நிலத்தில் விடப்பட்டதால் நச்சு நீர் கலந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிற்கு கொச்சி முதல் பெங்களூரு வரை செல்லும் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமப் பகுதியில் கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது குழாயில் இருந்து வெளியேறிய ஆயில் கலந்த கழிவுநீர் அதிக அளவில் விவசாய நிலப்பகுதியில் விடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலும், அப்பகுதியில் வளர்ந்திருந்த புல் மற்றும் பயிர்களிலும் நச்சுத்தன்மை கலந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள், அந்த நிலத்தில் இருந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்துள்ளன. இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வாந்தி, சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்த நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாய நிலங்களிலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் பகுதிகளிலும் விடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மற்ற கால்நடைகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் ஆயில் கலந்த கழிவுநீரால் விவசாய நிலமும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
    1
    பாலக்கோடு அருகே கெயில் குழாயிலிருந்து வெளியேறிய நச்சுநீர் – விவசாய நிலத்தில் கலந்ததால் பசுமாடு உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது ஆயில் கலந்த நச்சுநீர் விவசாய நிலத்தில் விடப்பட்டதால்  நச்சு நீர் கலந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிற்கு கொச்சி முதல் பெங்களூரு வரை செல்லும் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த குழாய்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமப் பகுதியில் கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது குழாயில் இருந்து வெளியேறிய ஆயில் கலந்த கழிவுநீர் அதிக அளவில் விவசாய நிலப்பகுதியில் விடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலும், அப்பகுதியில் வளர்ந்திருந்த புல் மற்றும் பயிர்களிலும் நச்சுத்தன்மை கலந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள், அந்த நிலத்தில் இருந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்துள்ளன.
இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வாந்தி, சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்த நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாய நிலங்களிலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் பகுதிகளிலும் விடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மற்ற கால்நடைகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் ஆயில் கலந்த கழிவுநீரால் விவசாய நிலமும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    43 min ago
  • தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
    1
    தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா:  கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர்
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில்  பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.
விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 min ago
  • அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    4
    அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம்  ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர்  மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்  திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக   விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும்  மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு  மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால்  பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய  " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு.
ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி  திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 
அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.