Shuru
Apke Nagar Ki App…
வேளச்சேரி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு: மின்சார வாரியம் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வேளச்சேரி பேபி நகர், தரமணி 100 அடி பிரதான சாலை, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மின்சாரம் சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Basakaran
வேளச்சேரி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு: மின்சார வாரியம் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வேளச்சேரி பேபி நகர், தரமணி 100 அடி பிரதான சாலை, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், மின்சாரம் சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இசை மழை இரவு வணக்கம் இரவு இன்னிசை இரவு வணக்கம்.........1
- திருச்சியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ₹5 லட்சம் மதிப்புள்ள பொம்மைகள், பாத்திரங்கள் பறிமுதல்: BIS அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!1
- தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல அச்சப்படும் பொதுமக்கள். சென்னை ஆர்.கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நாய் ஒன்று அலுவலகம் முழுவதும் சுற்றித் தெரிகிறது. இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு ஆதார் பிறப்பு இறப்பு வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.1
- காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள். *காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்* ------------------------------- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவகால பணியாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும் பணி மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும், கொள்முதல் பணிக்குத் தேவையான சாக்கு உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும், "இன்சார்ஜ்" முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.கூட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டுமென கூறி பணியாளர் மண்டியிட்டு கையேந்தி பிச்சையாக கோரிக்கை வைத்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இக்கூட்டத்தின் மூலம் உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் எஸ்பி அதிரடி சோதனை நடத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியில் திருப்பத்தூர் எஸ்பி அக்ஷயா அணில் வகாரே தலைமையில் (நேற்று ஜூலை.31.இரவு)ஆம்பூர் பஸ் நிலையம் முதல் கஸ்பா பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது சாலையில் உள்ள கடைகள் மற்றும் பங்கு கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, போன்ற பொருட்கள் உள்ளதா என சோதனையிட்டனர் இது சோதனையில் ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.1
- விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் மதுபோதையில் காரை அதிவேகமாக இயக்கி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நபரைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்த நிலையில், காவல்துறையினர் அவரை விசாரணை செய்கின்றனர்1