ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. லோகிராஜன் கோவில்பட்டியில் தீவிர வாக்குச் சேகரிப்பு! தேனி: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முறுக்கு கோடை ராமர் (BA) முன்னிலையில், ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. லோகிராஜன் நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஊர் பெரியவர்களிடம் ஆதரவு கோரல் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவரான வேட்பாளர் ஏ. லோகிராஜன், நேற்று (29-03-2026) கோவில்பட்டி பகுதி கிராமங்களில் உள்ள ஊர் நாட்டாமைகள் மற்றும் முக்கியப் பெரியவர்களைச் சந்தித்துப் பேசினார். தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்குக் கேட்டு ஆதரவு திரட்டினார். வாக்குச் சேகரித்த முக்கியப் பகுதிகள்: கோவில்பட்டி, முத்தனம்பட்டி கரட்டுப்பட்டி, குரும்பபட்டி குருவியம்மாள்புரம், ரங்கசமுத்திரம் அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி நரசிங்கபுரம், ஸ்ரீரங்கபுரம் ஜம்புலிபுத்தூர், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு இந்தப் பிரச்சாரத்தின் போது ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் T.R.N. வரதராஜன் மற்றும் பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. லோகிராஜன் கோவில்பட்டியில் தீவிர வாக்குச் சேகரிப்பு! தேனி: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்ட ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முறுக்கு கோடை ராமர் (BA) முன்னிலையில், ஆண்டிபட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. லோகிராஜன் நேற்று கோவில்பட்டி மற்றும்
அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஊர் பெரியவர்களிடம் ஆதரவு கோரல் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவரான வேட்பாளர் ஏ. லோகிராஜன், நேற்று (29-03-2026) கோவில்பட்டி பகுதி கிராமங்களில் உள்ள ஊர் நாட்டாமைகள் மற்றும் முக்கியப் பெரியவர்களைச் சந்தித்துப் பேசினார். தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்குக் கேட்டு ஆதரவு
திரட்டினார். வாக்குச் சேகரித்த முக்கியப் பகுதிகள்: கோவில்பட்டி, முத்தனம்பட்டி கரட்டுப்பட்டி, குரும்பபட்டி குருவியம்மாள்புரம், ரங்கசமுத்திரம் அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி நரசிங்கபுரம், ஸ்ரீரங்கபுரம் ஜம்புலிபுத்தூர், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு இந்தப் பிரச்சாரத்தின் போது ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் T.R.N. வரதராஜன் மற்றும் பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
- தங்கையைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்ட அண்ணன் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில், பள்ளி செல்லும் தனது தங்கையைக் கேலி செய்தவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சூர்யாவின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்குச் செல்லும் போது சில சிறுவர்கள் தனது தங்கையைக் கேலி செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துப் பள்ளிக்குச் சென்ற சூர்யா, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்துள்ளார். இந்த மோதல் காரணமாக, இன்று ஊரின் மையப்பகுதியான கனரா வங்கி அருகே சூர்யா மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த சின்னமனூர் காவல்துறையினர், சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, சூர்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சின்னமனூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து எங்கள் முன் நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சின்னமனூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.1
- *ஆண்டிப்பட்டி மற்றும் கம்பம் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆண்டிப்பட்டியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள மகாராஜன் தொடர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு வருகை புரிந்த இருவருக்கும் ஆண்டிபட்டி நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் கிரேன் வாகனம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது தொடர்ந்து ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு கலர் பலூன்களை கட்டி வேட்பாளர்களிடம் தொண்டர்கள் ஆர்வமாக கொடுக்க அதனை வாங்கிய வேட்பாளர்கள் மேலே பறக்க விட்டனர் இதையடுத்து தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்ப உற்சாக வெள்ளத்தில் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி(190) வேட்புமனு தாக்கல் தொடங்கியது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நாகலெட்சுமி திருமாறன் வாடிப்பட்டியில் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் பிறகு ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.1
- மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.1
- காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கும், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திரு உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். *அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது* ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் 2026 தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தல் முன்னிட்டு தமிழகத்தினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக எதிர் கட்சித் தலைவர் , தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராக அமரக்கூடிய எடப்பாடி யார் அவர்கள் என்னை திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக என்னை அறிவித்தார்கள். அறிவித்தவுடன் அவர்களை நேற்று தினம் தூத்துக்குடியில் சந்தித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் களப்பணி பற்றிகளையும், ஏழு சட்டமன்ற தொகுதி வெற்றி பெறுவது பற்றியும் ஆலோசனை வழங்கினார். இன்றைய தினம் ஆவியூரில் எனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து தற்போது காரியாபட்டியில் உள்ளேன். இந்த தொகுதியிலே பல நிலவரங்கள் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் கள நிலவரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் 35 ஆண்டு காலம் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதாரண கூலி வேலை பார்த்து டிரைவராக இருந்து. இன்றைக்கு ஒரு சட்டப்பேரவையின் உறுப்பினராகி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் அந்த இரண்டு ஆண்டு காலத்திலும் சாத்தூர் மக்களிடையே என்னை எப்படி பார்த்தார்கள் நான் எப்படி அவர்களிடம் நடந்து கொண்டேன் என்பது அந்த தொகுதி மக்களுக்கு தெரியும். உங்களை எதிர்த்து நிதி அமைச்சர் போட்டியிடுகிறார் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் நிற்கிறார், ஸ்டாலின் நிற்கிறார், உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அண்ணா திமுகவில் சாதாரண தொண்டரும் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற வரலாற்றை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மாவும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நான் வெற்றியை வந்து. நான் எப்படி களப்பணி ஆற்றுவேன் என்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள், உள்ளத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், உயரத்தைப் பார்த்து எடை போடாதீர்கள், நான் களத்தில் மோதணும் நினைத்தால் வெற்றி ஒன்று இலக்காகதான் இருக்கும். நான் எல்லாத்தையும் சந்தித்து எல்லாத்தையும் பார்த்து எல்லாரிடமும் ஆலோசனை நடத்தி விட்டு தொகுதி நிலவரம் அனைத்தும் எனக்கு தெரியும் 1996 -ல் ஐயா தங்கபாண்டியன் அவர்கள் வேட்பாளராக இருக்கும்போது, அண்ணாச்சி சுந்தரபாண்டியன் அவர்கள் இருக்கும்போது இந்த தொகுதியும் எனது கால் படாத இடங்கள் கிடையாது. எதுவென்றாலும் நான் ஓப்பனாக பேசுவேன், எதிலும் நேர்மையாக இருப்பேன், யாரை எதிர்த்தாலும் நேர்மையாக தான் எதிர்ப்பேன், யாரை ஆதரித்தாலும் நேர்மையாக தான் ஆதரிப்பேன், திருச்சுழி சட்டமன்றத் தொகுதி அதிமுக தொண்டர்கள் உண்மையிலேயே எந்தவித பிரதிபலனும் அடையவில்லை ஒரு சில பேர் அவர்களுடைய சுய லாபத்திற்காக 24 ஆண்டுகள் இந்த கட்சியை வந்து பாழாக்கி பந்தகாடாக்கி வைத்துள்ளார்கள். நான் முன்னாள் நிர்வாகிகள் அனைவருடன் பேசி திருச்சுழி தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு தேவையானது செய்வேன். ஒரு சில புல்லுருவிகள் இருந்து கட்சியை வாலாக்கனும் , பாலக்கனும் என்று நினைக்கிறார்கள் நான் அதை விடவே மாட்டேன் அதற்கு ஒரு முடிவு காலம் கட்டி தான் இந்த திருச்சுழி தொகுதியில் இருந்து வெளியேறுவேன்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,1
- ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆண்டிபட்டியில் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலை கையில் ஏந்தி, தப்பாட்டம் முழங்க ஊர்வலமாக வந்து முதல் ஆளாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாநிலம் முழுவதும் துவங்கியது அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன்.ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாவிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக ஆண்டிபட்டி - பாலக்கோம்பை பிரிவில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி அன்பரசன் மலரால் அலங்கரிக்கப்பட்ட முருகன் வேலுடன் தப்பாட்டம் முழங்க தனது கட்சியினருடன் ஊர்வலமாக வந்த நிலையில் தேனி சாலையில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஊர்வலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் முன்பாகவே நிறுத்தப்பட்டது.பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி, அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று தனது வேட்பு மனுவை கோமதி அன்பரசன் தாக்கல் செய்தார்.தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான பெண்மணி கோமதி.மென்பொருள் பட்டதாரியான இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.இவரது கணவர் அன்பரசன், நாம் தமிழர் கட்சியின் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1