logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் கடலூா் மாவட்டம், சிதம்பரம் விளங்கி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த கோபால் (80). இவா் அப்பகுதியில் பிப்ரவரி 20 ஆம் தேதி சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் பின்னா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கோபாலுக்கு திங்கள்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடா்பாக அவரது மகன்கள் மணி, மகேஷ், மருமகன் செந்தில்குமாா் ஆகியோரிடம் மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். இதற்கு அவா்கள் ஒப்புதல் அளித்ததால், கோபாலின் உடலில் இருந்த 2 சிறுநீரகங்கள், தோல் ஆகியவை அறுவைச் சிகிச்சை மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. இதில், 2சிறுநீரகங்களும் திருச்சி தனியாா் மருத்துவமனைகளுக்கும், தோல் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இந்த உறுப்புகள் தஞ்சாவூா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறை உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்ட மூலம் 3போ் பயனடைந்தனா். இதையடுத்து கோபால் உடலுக்கு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் எம். பூவதி உள்ளிட்டோா் அரசு சாா்பில் இறுதி மரியாதை செய்தனா்.

1 hr ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
1 hr ago
e9ac4027-aa49-4102-8335-3fbae66c5055

தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் கடலூா் மாவட்டம், சிதம்பரம் விளங்கி அம்மன் கோயில் தெருவை சோ்ந்த கோபால் (80). இவா் அப்பகுதியில் பிப்ரவரி 20 ஆம் தேதி சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா் பின்னா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கோபாலுக்கு திங்கள்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடா்பாக அவரது மகன்கள் மணி, மகேஷ், மருமகன் செந்தில்குமாா் ஆகியோரிடம் மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். இதற்கு அவா்கள் ஒப்புதல் அளித்ததால், கோபாலின் உடலில் இருந்த 2 சிறுநீரகங்கள், தோல் ஆகியவை அறுவைச் சிகிச்சை மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. இதில், 2சிறுநீரகங்களும் திருச்சி தனியாா் மருத்துவமனைகளுக்கும், தோல் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இந்த உறுப்புகள் தஞ்சாவூா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறை உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்ட மூலம் 3போ் பயனடைந்தனா். இதையடுத்து கோபால் உடலுக்கு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் எம். பூவதி உள்ளிட்டோா் அரசு சாா்பில் இறுதி மரியாதை செய்தனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர்  அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு  பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல்  இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.  ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
    1
    வணக்கம் நண்பர்களே,
என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by ℬᴀʟᴀ ŧέcԩ
    1
    Post by ℬᴀʟᴀ ŧέcԩ
    user_ℬᴀʟᴀ ŧέcԩ
    ℬᴀʟᴀ ŧέcԩ
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.
    1
    திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற  உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள்  S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • Post by Lingaraju mc
    6
    Post by Lingaraju mc
    user_Lingaraju mc
    Lingaraju mc
    துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    37 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை. மதுரை, மார். 10 - சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு.  அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு இந்த அச்சநிலையைத் தொடர்ந்து கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில், “சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார். மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு. மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500  ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார். கருப்புச் சந்தை குற்றச்சாட்டு சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம். வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம் மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர். பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெ. பொன்மாறன்.
    2
    வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை.
மதுரை, மார். 10 -
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென
உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு. 
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு
இந்த அச்சநிலையைத் தொடர்ந்து
கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில்,
“சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார்.
மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு.
மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன.
வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில்,
“சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500  ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
கருப்புச் சந்தை குற்றச்சாட்டு
சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம்.
வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம்
மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை
சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது.
போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்
எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெ. பொன்மாறன்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் , '94987 94987' என்ற TNEB Customer Care எண்ணை தொடர்பு கொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
    1
    திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள்  , '94987 94987' என்ற TNEB Customer Care எண்ணை தொடர்பு கொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.