Shuru
Apke Nagar Ki App…
தர்மபுரியில் பாரதியஜனதா கட்சி சார்பல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
Periyasamy
தர்மபுரியில் பாரதியஜனதா கட்சி சார்பல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
More news from Tamil Nadu and nearby areas
- தருமபுரி அரசு கலைக்கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா - பாரம்பரிய உடையில் மாணவர்கள் கொண்டாட்டம் தருமபுரி அரசு கலைக்கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோ. கண்ணன் முன்னிலையில், 22 துறைகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கல்லூரி வளாகத்தில் வண்ண கோலமிட்டு கரும்பு, வாழை, மஞ்சளுடன் புதுப்பாணையில் பொங்கலிட்டு பொங்கலோ , பொங்கலோ என்று ஆராவரத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். அதனை தொடர்ந்து உரி அடித்தல், கோலப் போட்டிகள், கிராமிய பாடல், நடனம், கும்மி, இசை நிகழ்ச்சி, கோலப்போட்டி, உறியடி மற்றும் கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். மேலும் மாணவர்கள் பல குழுவாகவும் ஒரே வண்ணத்தில் ஆடைகளை அணிந்து வந்தது பார்ப்போரின் கண்களை கவரும் வகையில் இருந்தது. இவ்விழாவில் துறை தலைவர்கள் , பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்1
- தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை நண்பர்கள் உதவியுடன் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய, மருமகன் உட்பட ஆறு பேர் கைது. தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம் இருப்பதாக, நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலத்தில் பல்வேறு இடங்களில் வெட்டி காயங்களும், இருசக்கர வாகனமும் தண்ணீரில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சடலமாக கிடந்தவர், எறங்காட்டு கொட்டாயை சார்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆறுமுகம் மனைவி ஜோதி மற்றும் மருமகன் சீதாராமன் இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சீதாராமனும் ஜோதியும் இருவரும் இணைந்து காரணிஓனி பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீதாராமன் மனைவி பிரிந்து சென்ற நிலையில், ஜோதி தனது மகள் சந்தியாவை சீதாராமனுக்கு, கட்டாயப்படுத்தி 2-வது திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தில் விருப்பமில்லாத சந்தியா ஓசூர் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். சீதாராமன் மனைவி வீட்டிற்கு வராததால் ஜோதியும், சீதாராமனும் ஓசூருக்கு சென்று, சந்தியாவை வீட்டிற்கு அழைத்து தாக்கியுள்ளனர். சந்தியா தனது தந்தை ஆறுமுகத்திடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தங்களது பழக்கத்திற்கு இடையூறாக மாமனார் ஆறுமுகம் இருப்பதால், அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்ட சீதாராமன், தனது நண்பர்களுடன் மாமனாரை ஆறுமுகத்தை பின் தொடர்ந்து சென்று கல்லால் தாக்கி, இருசக்கர வாகனத்துடன் காரில் எடுத்துச் சென்று மதிக்கோன்பாளையம் ஏரியில் வீசிவிட்டு சென்றதாக சீதாராமன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தை திட்டமிட்டு கொலை செய்த சீதாராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆறுமுகம் மனைவி ஜோதி, முருகன், சரவணன், சங்கர் கணேஷ், பிரவீன் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.1
- அரசு அதிகாரிகளை எச்சரித்த தர்மபுரி எம்எல்ஏ தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார் அப்போது எம்எல்ஏவிடம் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் புழுக்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். உடனே நகராட்சி ஆணையரைத் தொலைபேசியில் அழைத்த எம்எல்ஏ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தம் செய்யாவிட்டால் நானே இறங்கிச் சுத்தம் செய்வேன்" என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.1
- திருச்செங்கோடு தோக்கவாடி ஊராட்சி கே.எஸ். ஆர். கல்வி நகர் பகுதியில் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மயில்சாமி என்பவரது வீட்டிலும்,ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வரும் முத்துவேல் என்பவரது வீட்டிலும் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இரு குடும்பத்தினரும் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை ஒரு வீட்டில் ஐந்து பவுன் நகை ரொக்கம் மற்றும் மயில்சாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை 60 ஆயிரம் பணம் உண்டியல் காசுகள் வெள்ளிப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் திருட்டு. ஊரக போலீசார் தீவிர விசாரணை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தீவிர சோதனை2
- பனிப்பாறையில் காதலன் குடிக்க பனி நீரை குடிக்க கொடுத்தான் அவள் குடித்ததும் மறுநாள் மிக மோசமான நிலைமையில் மருத்துவ மனையில் சேர்க்க பட்டால் பின்பு குணமாகிறாளா என்பதுதான் இந்த பாடல் வரிகள் மூலம் செய்திகள் சொல்கிறது..1
- Post by Firojali Sk1
- Post by Deoprasad Say2
- தர்மபுரி எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தலைவர் எஸ்.எம்.ஏ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குனர் ஏ.எஸ். சதீஸ்ஆறுமுகம் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் சர்க்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன், கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீதரன், கல்லூரி நிர்வாக அலுவலர் விஜய் கார்த்திக் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்1