logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் புத்துக்கோவில் பகுதியில், முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் அழகு முத்து கோன் அவர்களின் 269-வது ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய யாதவர் மகா சபை திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கேப்டன் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட யாதவர் மகாசபை தலைவர் கங்காதரன் மற்றும் குணசேகரன் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொருளாளர் பாபு ராஜா மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். அவர்கள் மாமன்னர் அழகு முத்து கோன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, பங்கேற்ற அனைவருக்கும் கேப்டன் தினகரன் ஏற்பாட்டில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய யாதவர் மகாசபை நிர்வாகிகள் கனகராஜ், ராஜா, சங்கர், ராஜேந்திரன், ரஜினி, தின மகேந்திரன், ஆதி, முருகன் உள்ளிட்ட பலரும், திருப்பத்தூர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

12 hrs ago
user_KALAI REPORTER
KALAI REPORTER
Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
12 hrs ago
fc6c5671-d032-42a3-8077-586fdeb961ac

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் புத்துக்கோவில் பகுதியில், முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் அழகு முத்து கோன் அவர்களின் 269-வது ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய யாதவர் மகா சபை திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கேப்டன் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட யாதவர் மகாசபை தலைவர் கங்காதரன் மற்றும் குணசேகரன் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் பொருளாளர் பாபு ராஜா மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். அவர்கள் மாமன்னர் அழகு முத்து கோன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, பங்கேற்ற அனைவருக்கும் கேப்டன் தினகரன் ஏற்பாட்டில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய யாதவர் மகாசபை நிர்வாகிகள் கனகராஜ், ராஜா, சங்கர், ராஜேந்திரன், ரஜினி, தின மகேந்திரன், ஆதி, முருகன் உள்ளிட்ட பலரும், திருப்பத்தூர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 53-வது வருட திருத்தல தேர்திருவிழா கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னையின் திருத்தேர் பவனியை, தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் மந்திரித்து முறைப்படி துவக்கி வைத்தார்.
    1
    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 53-வது வருட திருத்தல தேர்திருவிழா கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னையின் திருத்தேர் பவனியை, தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் மந்திரித்து முறைப்படி துவக்கி வைத்தார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாளம்மன் திருக்கோவில் சிதலமடைந்து, விளக்கு ஏற்றக்கூட பணம் இல்லாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொரப்பூர் நெடுஞ்சாலையில் இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து அறநிலைத்துறை கட்டிடம்' என்ற பெயர் பலகை இல்லாதது, கட்டிடங்களுக்கு வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார், நிலப் பிரச்சனை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அறங்காவலர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாளம்மன் திருக்கோவில் சிதலமடைந்து, விளக்கு ஏற்றக்கூட பணம் இல்லாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொரப்பூர் நெடுஞ்சாலையில் இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து அறநிலைத்துறை கட்டிடம்' என்ற பெயர் பலகை இல்லாதது, கட்டிடங்களுக்கு வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார், நிலப் பிரச்சனை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அறங்காவலர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார். இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    1
    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார்.

இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் பாலாற்றில், இன்று காலை 11 மணியளவில் பாலாறு நீர்நிலை பாதுகாப்பு தடுப்பு சுவர் மீது பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், உயிரிழந்தவரின் உடலை மீட்டதுடன், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    2
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் பாலாற்றில், இன்று காலை 11 மணியளவில் பாலாறு நீர்நிலை பாதுகாப்பு தடுப்பு சுவர் மீது பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், உயிரிழந்தவரின் உடலை மீட்டதுடன், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.