logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குமரி மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய கல்குவாரிகள் மீது வழக்கு பதிவு *குமரி.மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய கல்குவாரிகள் மீது வழக்கு பாய்ந்தது.* *இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொன்றிலும் கடுமையான சட்ட பிரிவுகள் கீழ் மூன்று குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு* கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் 30-03-2026 நேற்று தோட்டியோடு அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரிகளில் திடீர் ஆய்வு செய்து அதில் இரண்டு கல்குவாரிகளுக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்திருப்பது குமரி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கல்குவாரிகளுக்கும் இரண்டு குற்ற வழக்குகள் இரணியல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு பல்வேறு சட்ட பிரிவுகளில் மூவர் மீதும் இரண்டு குற்ற வழக்குகளிலும் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சட்ட விரோதமாக கனிம வளம் வெட்டி எடுத்த வழக்கில் இரணியல் காவல் நிலையத்தில் இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்ற எண் 167/2026 என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்ட பிரிவில் 223,289,303(2) மற்றும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை சட்டம் 1957 பிரிவு 4(1)(a), 21(1),25 மற்றும் வெடிபொருள் சட்டம் 1908 பிரிவு 3, 5 ஆகிய எட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர்களான 1.ஜெகன், த/பெ. தானு தாஸ், சக்தி பவன், மெயின் ரோடு, பரசேரி 2.ஆல்பர்ட் த/பெ. ஜோசப், பனவிளை, சுங்கான் கடை, மற்றும் 3.கனரக வாகன ஆப்ரேட்டர் மற்றும் உரிமையாளர் தங்கராஜ் அவரது இரண்டு ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கம்ப்ரஸர் மற்றும் வெடி மருந்தை வெடிக்க வைக்க பயன்படும் பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இரணியல் காவல் நிலைய குற்ற எண் 168/2026 . அதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்ட பிரிவில் 223,289,303(2) மற்றும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை சட்டம் 1957 பிரிவு 4(1)(a), 21(1),25 மற்றும் வெடிபொருள் சட்டம் 1908 பிரிவு 3, 4, 5 ஆகிய ஒன்பது சட்டப்பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர்கள் மீதும் கனரக வாகன ஆப்ரேட்டர் மற்றும் உரிமையாளர் மீதும் அவரது இரண்டு ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கம்ப்ரஸர் மற்றும் வெடி மருந்தை வெடிக்க வைக்க பயன்படும் பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் குமாரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயக்குபவர்கள் மற்றும் அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுத்து கடத்தி வரும் கனிமவள மாபியா கும்பல்கள் பெரும் கலக்கமடைந்து உள்ளனர். *மேலும் சட்ட விரோதமாக கல்குவாரிகள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டாலோ சட்டவிரோதமாக கனிம வளம் கொண்டு செல்ல பாஸ் கண்டுபிடிக்கப்பட்டாலோ சட்டவிரோத கல்குவாரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் அதற்கு சட்டவிரோதமாக பாஸ் வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அவர்களையும் குற்ற வழக்கில் சேர்த்து கைது செய்யும் நிலை ஏற்படும் என்றும் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.* இதன் மூலம் தற்போதைய மாவட்ட எஸ்பி யால் குமரி மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் செயல்படுவது தடுக்கப்படும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக கல்குவாரிகளில் எஸ்பி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கனிமவள கும்பல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் எஸ் பி யின் அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட மக்களுக்கு பெரும் வர பிரசாதமாகவே உள்ளது. கனிம வள கும்பல்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளும் தற்போது மாவட்ட எஸ்பியின் நடவடிக்கையால் பெரும் கலக்கத்தில் உள்ளனர். வரும் நாட்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என்பதும் கனிம வள கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை கடமையாக கொண்டு செயல்படுபவர் குமரி மாவட்ட எஸ்பி தான் என்பது தான் தற்போது ஹைலைட்டான செய்தியாக உள்ளது.

2 hrs ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer Vilavancode, Kanniyakumari•
2 hrs ago
c0800e82-07f7-41be-bcde-cbb17592030b

குமரி மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய கல்குவாரிகள் மீது வழக்கு பதிவு *குமரி.மாவட்ட எஸ்பியின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய கல்குவாரிகள் மீது வழக்கு பாய்ந்தது.* *இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொன்றிலும் கடுமையான சட்ட பிரிவுகள் கீழ் மூன்று குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு* கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் 30-03-2026 நேற்று தோட்டியோடு அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரிகளில் திடீர் ஆய்வு செய்து அதில் இரண்டு கல்குவாரிகளுக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்திருப்பது குமரி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு கல்குவாரிகளுக்கும் இரண்டு குற்ற வழக்குகள் இரணியல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு பல்வேறு சட்ட பிரிவுகளில் மூவர் மீதும் இரண்டு குற்ற வழக்குகளிலும் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சட்ட விரோதமாக கனிம வளம் வெட்டி எடுத்த வழக்கில் இரணியல் காவல் நிலையத்தில் இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்ற எண் 167/2026 என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்ட பிரிவில் 223,289,303(2) மற்றும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை சட்டம் 1957 பிரிவு 4(1)(a), 21(1),25 மற்றும் வெடிபொருள் சட்டம் 1908 பிரிவு 3, 5 ஆகிய எட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர்களான 1.ஜெகன், த/பெ. தானு தாஸ், சக்தி பவன், மெயின் ரோடு, பரசேரி 2.ஆல்பர்ட் த/பெ. ஜோசப், பனவிளை, சுங்கான் கடை, மற்றும் 3.கனரக வாகன ஆப்ரேட்டர் மற்றும் உரிமையாளர் தங்கராஜ் அவரது இரண்டு ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கம்ப்ரஸர் மற்றும் வெடி மருந்தை வெடிக்க வைக்க பயன்படும் பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இரணியல் காவல் நிலைய குற்ற எண் 168/2026 . அதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்ட பிரிவில் 223,289,303(2) மற்றும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை சட்டம் 1957 பிரிவு 4(1)(a), 21(1),25 மற்றும் வெடிபொருள் சட்டம் 1908 பிரிவு 3, 4, 5 ஆகிய ஒன்பது சட்டப்பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர்கள் மீதும் கனரக வாகன ஆப்ரேட்டர் மற்றும் உரிமையாளர் மீதும் அவரது இரண்டு ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கம்ப்ரஸர் மற்றும் வெடி மருந்தை வெடிக்க வைக்க பயன்படும் பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் குமாரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயக்குபவர்கள் மற்றும் அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுத்து கடத்தி வரும் கனிமவள மாபியா கும்பல்கள் பெரும் கலக்கமடைந்து உள்ளனர். *மேலும் சட்ட விரோதமாக கல்குவாரிகள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டாலோ சட்டவிரோதமாக கனிம வளம் கொண்டு செல்ல பாஸ் கண்டுபிடிக்கப்பட்டாலோ சட்டவிரோத கல்குவாரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் அதற்கு சட்டவிரோதமாக பாஸ் வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு அவர்களையும் குற்ற வழக்கில் சேர்த்து கைது செய்யும் நிலை ஏற்படும் என்றும் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.* இதன் மூலம் தற்போதைய மாவட்ட எஸ்பி யால் குமரி மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் செயல்படுவது தடுக்கப்படும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக கல்குவாரிகளில் எஸ்பி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கனிமவள கும்பல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் எஸ் பி யின் அதிரடி நடவடிக்கை குமரி மாவட்ட மக்களுக்கு பெரும் வர பிரசாதமாகவே உள்ளது. கனிம வள கும்பல்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளும் தற்போது மாவட்ட எஸ்பியின் நடவடிக்கையால் பெரும் கலக்கத்தில் உள்ளனர். வரும் நாட்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என்பதும் கனிம வள கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை கடமையாக கொண்டு செயல்படுபவர் குமரி மாவட்ட எஸ்பி தான் என்பது தான் தற்போது ஹைலைட்டான செய்தியாக உள்ளது.

More news from Kanniyakumari and nearby areas
  • கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் காவல்துறை தடுப்பை மீறி கடலில் குதித்த போதை ஆசாமி. * மக்கள் அதிகம் கூடி இருந்த மாலை நேரத்தில் கடலில் உள்ளே சென்ற நபரால் அரைமணிநேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது, * கடலோர காவல்துறை சார்ந்த வீரர்களுக்கு போக்கு காட்டிய நபர் வட மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. * போராடி கரைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
    1
    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் காவல்துறை தடுப்பை மீறி கடலில் குதித்த போதை ஆசாமி.
* மக்கள் அதிகம் கூடி இருந்த மாலை நேரத்தில் கடலில் உள்ளே சென்ற நபரால் அரைமணிநேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது, 
* கடலோர காவல்துறை சார்ந்த வீரர்களுக்கு போக்கு காட்டிய நபர் வட மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 
* போராடி கரைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    2 hrs ago
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை முன்பாக இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் தருகின்றன. இவை சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று சண்டையை இடுவதால் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை முன்பாக இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் தருகின்றன. இவை சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று சண்டையை இடுவதால்  இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்
    1
    தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    4
    கயத்தாறு யூனியனைச் சேர்ந்த  செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    2
    வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    user_SATHISHKUMAR SK
    SATHISHKUMAR SK
    Video editing service சங்கரன்கோவில், தென்காசி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் பேச்சு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் களம் இறக்கப்பட்டுள்ளார் இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் கூறும் பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர் இதுவரை தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் நான்காவது பைப் லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வந்தது அதிமுக காலத்தில் அதே போன்று திருச்செந்தூர் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அமைத்தது தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஆனால் தற்பொழுது திமுக விண்கார்ந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் உதயநிதி சபரீசன் உள்ளிட்டவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்த வருகின்றனர் அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் நேதாஜிவன் மேயர் ஜெகன், கனிமொழி அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்து வரு என்றனர் என்ற அவர் மத்தியில் உள்ள பிஜேபி அரசு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சாலை வசதிகள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது தொழிற்சாலைகள் பெரியதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தியுள்ளது ஆனால் இதில் எதையுமே செய்யாத திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக கூறி வருகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தெருவோரங்களில் வட இந்தியர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளதை கடுமையாக சாடிய அவர் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைந்தத பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உறுதி கூறினார்
    1
    தூத்துக்குடி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் பேச்சு
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் களம் இறக்கப்பட்டுள்ளார் இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் கூறும் பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர் இதுவரை தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் நான்காவது பைப் லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வந்தது அதிமுக காலத்தில் அதே போன்று திருச்செந்தூர் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அமைத்தது தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஆனால் தற்பொழுது திமுக விண்கார்ந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் உதயநிதி சபரீசன் உள்ளிட்டவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்த வருகின்றனர் அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் நேதாஜிவன் மேயர் ஜெகன், கனிமொழி அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்து வரு என்றனர் என்ற அவர் மத்தியில் உள்ள பிஜேபி அரசு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சாலை வசதிகள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது தொழிற்சாலைகள் பெரியதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தியுள்ளது ஆனால் இதில் எதையுமே செய்யாத திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக கூறி வருகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தெருவோரங்களில் வட இந்தியர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளதை கடுமையாக சாடிய அவர் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைந்தத பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உறுதி கூறினார்
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    25 min ago
  • இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ
    1
    இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறை காற்றில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் உழவர் சந்தை மேற் கூறை காற்றில் பறந்தது. பகலில் பலத்த வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது
    1
    நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறை காற்றில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் உழவர் சந்தை மேற் கூறை காற்றில் பறந்தது. பகலில் பலத்த வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.