logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பொங்கல் திருவிழா பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் குத்தாட்டங்களுடன் நடைபெற்றது தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் குத்தாட்டங்களுடன் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தனியார் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடன போட்டி கயிறு இழுக்கும் போட்டிகள் உள்ளிட்டவைகளுடன் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகள் வண்ண வண்ண உடை அணிந்து பொங்கல் வைத்து குத்தாட்டங்கள் ஆடியும் சிறப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடினர் தொடர்ந்து கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தும் வாழை கரும்பு உள்ளிட்டவைகளால் அலங்காரங்கள் செய்து பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கயிறு இழுக்கும் போட்டி உறியடிக்கும் போட்டி மியூசிக்கல் சேர் நாற்காலி போட்டி உள்ளிட்டவைகளை வைத்து மாணவ மாணவிகளை உற்சாகமடைய செய்தனர் தொடர்ந்து இசைக்கு ஏற்ப மாணவ மாணவிகள் குத்தாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்

2 hrs ago
user_G Krishnan
G Krishnan
Journalist Dharmapuri, Tamil Nadu•
2 hrs ago

பொங்கல் திருவிழா பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் குத்தாட்டங்களுடன் நடைபெற்றது தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் குத்தாட்டங்களுடன் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தனியார் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடன போட்டி கயிறு இழுக்கும் போட்டிகள் உள்ளிட்டவைகளுடன் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகள் வண்ண வண்ண உடை அணிந்து பொங்கல் வைத்து குத்தாட்டங்கள் ஆடியும் சிறப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடினர் தொடர்ந்து கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தும் வாழை கரும்பு உள்ளிட்டவைகளால் அலங்காரங்கள் செய்து பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கயிறு இழுக்கும் போட்டி உறியடிக்கும் போட்டி மியூசிக்கல் சேர் நாற்காலி போட்டி உள்ளிட்டவைகளை வைத்து மாணவ மாணவிகளை உற்சாகமடைய செய்தனர் தொடர்ந்து இசைக்கு ஏற்ப மாணவ மாணவிகள் குத்தாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்

More news from Tamil Nadu and nearby areas
  • பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாள் உள்ள நிலையில் நல்லம்பள்ளி வார சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் குவிந்தது சுமார் 8 கோடிக்கு மேல் விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி
    1
    பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாள் உள்ள நிலையில் நல்லம்பள்ளி வார சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் குவிந்தது சுமார் 8 கோடிக்கு மேல் விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    28 min ago
  • தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை நண்பர்கள் உதவியுடன் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய, மருமகன் உட்பட ஆறு பேர் கைது. தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம் இருப்பதாக, நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலத்தில் பல்வேறு இடங்களில் வெட்டி காயங்களும், இருசக்கர வாகனமும் தண்ணீரில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சடலமாக கிடந்தவர், எறங்காட்டு கொட்டாயை சார்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆறுமுகம் மனைவி ஜோதி மற்றும் மருமகன் சீதாராமன் இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சீதாராமனும் ஜோதியும் இருவரும் இணைந்து காரணிஓனி பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீதாராமன் மனைவி பிரிந்து சென்ற நிலையில், ஜோதி தனது மகள் சந்தியாவை சீதாராமனுக்கு, கட்டாயப்படுத்தி 2-வது திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தில் விருப்பமில்லாத சந்தியா ஓசூர் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். சீதாராமன் மனைவி வீட்டிற்கு வராததால் ஜோதியும், சீதாராமனும் ஓசூருக்கு சென்று, சந்தியாவை வீட்டிற்கு அழைத்து தாக்கியுள்ளனர். சந்தியா தனது தந்தை ஆறுமுகத்திடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தங்களது பழக்கத்திற்கு இடையூறாக மாமனார் ஆறுமுகம் இருப்பதால், அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்ட சீதாராமன், தனது நண்பர்களுடன் மாமனாரை ஆறுமுகத்தை பின் தொடர்ந்து சென்று கல்லால் தாக்கி, இருசக்கர வாகனத்துடன் காரில் எடுத்துச் சென்று மதிக்கோன்பாளையம் ஏரியில் வீசிவிட்டு சென்றதாக சீதாராமன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தை திட்டமிட்டு கொலை செய்த சீதாராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆறுமுகம் மனைவி ஜோதி, முருகன், சரவணன், சங்கர் கணேஷ், பிரவீன் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
    1
    தருமபுரியில் மாமியாருடனான கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை நண்பர்கள் உதவியுடன் அடித்து கொலை செய்து ஏரியில் வீசிய, மருமகன் உட்பட ஆறு பேர் கைது. 
தருமபுரி அடுத்த மதிக்கோண்பாளையம் ஏரியில் ஆண் சடலம் இருப்பதாக, நகர காவல் துறையினருக்கு  தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தண்ணீரில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலத்தில் பல்வேறு இடங்களில் வெட்டி காயங்களும், இருசக்கர வாகனமும் தண்ணீரில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சடலமாக கிடந்தவர், எறங்காட்டு கொட்டாயை சார்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஆறுமுகம் மனைவி ஜோதி மற்றும் மருமகன் சீதாராமன் இருவரையும் காவல் துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சீதாராமனும் ஜோதியும் இருவரும் இணைந்து காரணிஓனி பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீதாராமன் மனைவி பிரிந்து சென்ற நிலையில், ஜோதி தனது மகள் சந்தியாவை சீதாராமனுக்கு, கட்டாயப்படுத்தி 2-வது  திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தில்  விருப்பமில்லாத சந்தியா ஓசூர் தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். சீதாராமன் மனைவி  வீட்டிற்கு வராததால் ஜோதியும், சீதாராமனும் ஓசூருக்கு சென்று, சந்தியாவை வீட்டிற்கு அழைத்து  தாக்கியுள்ளனர். சந்தியா தனது தந்தை ஆறுமுகத்திடம், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் ஜோதியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தங்களது பழக்கத்திற்கு இடையூறாக மாமனார் ஆறுமுகம் இருப்பதால், அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்ட சீதாராமன், தனது நண்பர்களுடன் மாமனாரை ஆறுமுகத்தை பின் தொடர்ந்து சென்று கல்லால் தாக்கி, இருசக்கர வாகனத்துடன் காரில் எடுத்துச் சென்று மதிக்கோன்பாளையம் ஏரியில் வீசிவிட்டு சென்றதாக சீதாராமன் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தை திட்டமிட்டு கொலை செய்த சீதாராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஆறுமுகம் மனைவி ஜோதி, முருகன், சரவணன், சங்கர் கணேஷ், பிரவீன் குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    41 min ago
  • அரசு அதிகாரிகளை எச்சரித்த தர்மபுரி எம்எல்ஏ தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார் அப்போது எம்எல்ஏவிடம் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் புழுக்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். உடனே நகராட்சி ஆணையரைத் தொலைபேசியில் அழைத்த எம்எல்ஏ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தம் செய்யாவிட்டால் நானே இறங்கிச் சுத்தம் செய்வேன்" என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    1
    அரசு அதிகாரிகளை எச்சரித்த தர்மபுரி எம்எல்ஏ
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார் அப்போது எம்எல்ஏவிடம் அப்பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் புழுக்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். உடனே நகராட்சி ஆணையரைத் தொலைபேசியில் அழைத்த எம்எல்ஏ மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுத்தம் செய்யாவிட்டால் நானே இறங்கிச் சுத்தம் செய்வேன்" என  பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் உடனடியாக அங்கு வந்த நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருச்செங்கோடு தோக்கவாடி ஊராட்சி கே.எஸ். ஆர். கல்வி நகர் பகுதியில் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மயில்சாமி என்பவரது வீட்டிலும்,ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வரும் முத்துவேல் என்பவரது வீட்டிலும் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இரு குடும்பத்தினரும் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை ஒரு வீட்டில் ஐந்து பவுன் நகை ரொக்கம் மற்றும் மயில்சாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை 60 ஆயிரம் பணம் உண்டியல் காசுகள் வெள்ளிப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் திருட்டு. ஊரக போலீசார் தீவிர விசாரணை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தீவிர சோதனை
    2
    திருச்செங்கோடு தோக்கவாடி ஊராட்சி கே.எஸ். ஆர். கல்வி நகர் பகுதியில் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மயில்சாமி என்பவரது வீட்டிலும்,ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வரும் முத்துவேல் என்பவரது வீட்டிலும் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இரு குடும்பத்தினரும் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை ஒரு வீட்டில் ஐந்து பவுன் நகை ரொக்கம் மற்றும் மயில்சாமி என்பவரது வீட்டில் 20 பவுன் நகை 60 ஆயிரம் பணம் உண்டியல் காசுகள் வெள்ளிப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் திருட்டு. ஊரக போலீசார் தீவிர விசாரணை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தீவிர சோதனை
    user_Balaji studio
    Balaji studio
    Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • பனிப்பாறையில் காதலன் குடிக்க பனி நீரை குடிக்க கொடுத்தான் அவள் குடித்ததும் மறுநாள் மிக மோசமான நிலைமையில் மருத்துவ மனையில் சேர்க்க பட்டால் பின்பு குணமாகிறாளா என்பதுதான் இந்த பாடல் வரிகள் மூலம் செய்திகள் சொல்கிறது..
    1
    பனிப்பாறையில் காதலன் குடிக்க பனி நீரை குடிக்க கொடுத்தான் அவள் குடித்ததும் மறுநாள் மிக மோசமான நிலைமையில் மருத்துவ மனையில் சேர்க்க பட்டால் பின்பு குணமாகிறாளா என்பதுதான் இந்த பாடல் வரிகள் மூலம் செய்திகள் சொல்கிறது..
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by Firojali Sk
    1
    Post by Firojali Sk
    user_Firojali Sk
    Firojali Sk
    துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Deoprasad Say
    2
    Post by Deoprasad Say
    user_Deoprasad Say
    Deoprasad Say
    துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தருமபுரி அருகே மாமியாருடன் தகாத உறவுக்கு தடையால் மருந்து கடை ஊழியரை கொன்று ஏரியில் உடல் வீச்சு மருமகன், மனைவி உள்பட 6 பேர் கைது
    1
    தருமபுரி அருகே மாமியாருடன் தகாத உறவுக்கு தடையால்
மருந்து கடை ஊழியரை கொன்று ஏரியில் உடல் வீச்சு
மருமகன், மனைவி உள்பட 6 பேர் கைது
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    31 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.