Shuru
Apke Nagar Ki App…
திமுக பண பலத்தை பயன்படுத்தும் : மதுரை மேற்கு எம்எல்ஏ ஆதங்கம் மதுரை.. திமுக பணபலத்தைப் பயன்படுத்தும் என மதுரை மேற்கு எம்.எல்.ஏ செல்லூர் கே.ராஜு நேற்று (பிப்.16) ஆதங்கப்பட்டார். தொகுதிப் பணிகளால் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பரவை பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய செல்லூர் ராஜு, வைகோவிற்கு பம்பரம் சின்னம் கிடைத்தது அதிமுகவால்தான் என்றார். திருமாவளவனை திமுக புலம்ப வைத்துள்ளதாகவும், காங்கிரசுக்கு அங்கீகாரம் இல்லை என்றும் விமர்சித்தார். சமீபத்தில் ஹாட்பாக்ஸ் வழங்கி மினி தேர்தல் சுற்றுப்பயணம் நடத்திய அவர், இன்று (பிப்.17) பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். தமக்கு எதிராக திமுக பணபலத்தைப் பயன்படுத்தும் எனக் கூறியது அவருக்குள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.
Nallendran
திமுக பண பலத்தை பயன்படுத்தும் : மதுரை மேற்கு எம்எல்ஏ ஆதங்கம் மதுரை.. திமுக பணபலத்தைப் பயன்படுத்தும் என மதுரை மேற்கு எம்.எல்.ஏ செல்லூர் கே.ராஜு நேற்று (பிப்.16) ஆதங்கப்பட்டார். தொகுதிப் பணிகளால் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பரவை பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய செல்லூர் ராஜு, வைகோவிற்கு பம்பரம் சின்னம் கிடைத்தது அதிமுகவால்தான் என்றார். திருமாவளவனை திமுக புலம்ப வைத்துள்ளதாகவும், காங்கிரசுக்கு அங்கீகாரம் இல்லை என்றும் விமர்சித்தார். சமீபத்தில் ஹாட்பாக்ஸ் வழங்கி மினி தேர்தல் சுற்றுப்பயணம் நடத்திய அவர், இன்று (பிப்.17) பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். தமக்கு எதிராக திமுக பணபலத்தைப் பயன்படுத்தும் எனக் கூறியது அவருக்குள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.
More news from தமிழ்நாடு and nearby areas
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.1
- இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா2
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு திட்டம் மூலம் 52 புதிய குடியிருப்புகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசும் போது, ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ 22 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக 480 வீடுகள் கட்டப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார், இதனை மனித நேயத்தில் அடையாளமாக நமது தொப்புள் கொடி உறவுகறக்கு தரும் ஆதரவாக கருத வேண்டும் என்றவர், வாக்கு அரசியலுக்காக திட்டங்களை அறிவிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், வாக்குரிமை இல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு குடியிருப்புகள் வழங்கியதின் மூலம் முதல்வர் மனித நேயத்துடன் கூடிய திட்டங்களை அறிவிக்கின்றார் என்பனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், மகளீர் உரிமை தொகையை 1.31 கோடி பேருக்கு ரூ 5 ஆயிரம் வழங்கி முதல்வர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக கூறியவர், பெரும்பாலான நடவடிக்கைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். ஆனால் மகளிர் உரிமை திட்டம் மூலம் ரூ 5,000 வழங்கியது, போர்க்கால அடிப்படையில் ரகசியம் காக்கப்பட்டு வெற்றிகரமாக முதல்வர் அறிவித்துள்ளார் என்றும், ஆயிரம் ரூபாய் வழங்குவதை தடுப்பதற்கு ஒரு கூட்டம் கிளம்பிச் சென்றது. ஆனால் முடிந்தால் தடுத்துப் பார் என சகோதரிகளுக்கு ரூ 5 ஆயிரத்தை வழங்கி நிர்வாக திறமை மிக்க முதல்வராக ஸ்டாலின் திகழ்கின்றார் என புகழாரம் சூட்டினார்.ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் எப்படி தர முடியும் என்று கூறியவர்கள், இன்று ரூ 2 ஆயிரம் தருவதாக கூறுகின்றனர். அவர்கள் 10 ஆயிரம் தருவதாகக் கூறினாலும் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள் என அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.1