Shuru
Apke Nagar Ki App…
ஆக்கிரமிப்பு தொண்டாமுத்தூர் பேரூராட்சி கெம்பனூர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்
K செல்வராஜ்
ஆக்கிரமிப்பு தொண்டாமுத்தூர் பேரூராட்சி கெம்பனூர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்
- K செல்வராஜ்கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு😤on 16 March
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் திமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றன வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்புகள் கேட்டும் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை பற்றியும் மகளிர் காண ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன நிகழ்வில் திமுக நிர்வாகிகள் செயலாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- மணப்பாறை தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். கதிரவன் நேற்று இரவு மணப்பாறை அடுத்த அனியாப்பூர் அருகே என்.பூலாம்பட்டியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பரப்புரை ஆற்றி வாக்குகள் சேகரித்தனர். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தவெகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.1
- சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நிறைவுபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் தங்கள் சுழன்று சுழன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர். விஜயகுமார், இன்று மாலை மணப்பாறை நகர பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், அண்ணாவிநகர், எட்டுத் தெரு, காமராஜர்சிலை, காந்திநகர், சேதுரெத்தினபுரம், ராஜீவ் நகர், முத்தன் தெரு பாத்திமா மலை, சந்தியாகுபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளுக்கும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் பேசுகையில், மணப்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சுற்றுசாலை, காவிரி குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை, விபத்துகளை குறைக்க பறக்கும் சாலை, நகரில் பாதாள சாக்கடை அமைத்து சுகாதாரத்தை பேணி காப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.1
- சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.1
- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதியில் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் ஆசியுடன் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி வேட்பாளர் எம். விஜய் அவர்கள் குப்பனம்பட்டி வடுகபட்டி ராமநாதபுரம் கண்ணியம் பட்டி கட்ட தேவன் பட்டி ஈச்சம்பட்டி தும் கொண்டு திடியன் சிந்துபட்டி வேப்பனூத்து மற்றும் கிராமம் கிராமமாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது விஜய் பேசியது தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் முதலமைச்சராக பதவி ஏற்ற உடன் மக்கள் உரிமைத் தொகை மாதத்திற்கு 2500 ரூபாயும் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் மேலும் . சேடபட்டி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை உசிலை சட்டமன்ற தொகுதியில் இரண்டு தொழிற்சாலை கட்டப்படும் .மகளீர் அரசு கலைக் கல்லூரி கட்டப்படும் என்று தெரிவித்தார் . ஆகையால் மக்களே விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்குகளை சேகரித்தார்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.19) காலை கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் , குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர். கதிரவனுக்கு ஆதரவாக பண்ணப்பட்டி ஊராட்சியில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரமானது நேற்று மாலை இரவு வரை பண்ணப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை என்று குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு இதுகுறித்த ரூல்ஸ் தெரியவில்லை. விவரம் தெரியாமல் ஏதும் சொல்லக்கூடாது. ரூல்ஸ் தெரிந்த பின்பு அதற்கான விளக்கத்தை அளிப்பதாக கூறி கோயிலுக்குள் சென்றார்.1
- Post by Periyasamy1