மணப்பாறை அருகே வளநாட்டில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே பாலக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் மற்றும் வளநாடு போலீசார் பாலக்குறிச்சி பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாலக்குறிச்சி டாஸ்மாக் பார் பின்புறம் சட்டவிரோதமாக 2பேர் மது விற்று கொண்டிருந்தனர். அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 36) மற்றும் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த கதிரேசன் (26) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து முருகேசன், கதிரேசன் ஆகிய 2 பேர் மீது வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 135 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.4 ஆயிரத்து 890-ஐ பறிமுதல் செய்தனர்.
மணப்பாறை அருகே வளநாட்டில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே பாலக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் மற்றும் வளநாடு போலீசார் பாலக்குறிச்சி பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாலக்குறிச்சி டாஸ்மாக் பார் பின்புறம் சட்டவிரோதமாக 2பேர் மது விற்று கொண்டிருந்தனர். அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 36) மற்றும் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த கதிரேசன் (26) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து முருகேசன், கதிரேசன் ஆகிய 2 பேர் மீது வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 135 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.4 ஆயிரத்து 890-ஐ பறிமுதல் செய்தனர்.
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுநல ஆர்வலர் காளிராஜ் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில்:- திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். இக்கோயிலில் உள்ள சிலையை பற்றிய வரலாற்றின் உண்மைத் தன்மையை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்திடவும், மேலும் தவறான வரலாற்று செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கோவிலை நடத்தி வருகின்றனர். மேலும் கருங்காலி மாலை என்று சொல்லி ஒரு மாலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை விற்று பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாலையை அணிந்தால் பணம், புகழும் கிடைக்கும் பிரச்சனைகள் தீரும் என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- Post by RAJA news1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மணப்பாறை தெற்கு ஒன்றியத்தில், அதிமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது.1