Shuru
Apke Nagar Ki App…
கம்பம் பகுதிகளில் பேஷன் புரூட் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர் கம்பம் பகுதிகளில் அதிக அளவில் திராட்சை சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் தற்போது திராட்சைக்கு அதிக விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததாலும் இதனால் செலவு செய்த பணத்தை கூடும் விவசாயிகள் எடுக்கும் இல்லை என்பதால் திராட்சைக்கு மாறுதலாக தற்போது பேஷன் புரூட் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
Shakthi
கம்பம் பகுதிகளில் பேஷன் புரூட் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர் கம்பம் பகுதிகளில் அதிக அளவில் திராட்சை சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் தற்போது திராட்சைக்கு அதிக விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததாலும் இதனால் செலவு செய்த பணத்தை கூடும் விவசாயிகள் எடுக்கும் இல்லை என்பதால் திராட்சைக்கு மாறுதலாக தற்போது பேஷன் புரூட் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .1
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.1
- தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முல்லை ஆற்றில் குளிப்பதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினருடன் வந்த காமாட்சி என்பவரின் மகன் தவசி (13) என்ற சிறுவன் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டான். அவனின் உடலை சுமார் 7 மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். சிறுவனின் உடலை தண்ணீரை நிறுத்திவிட்டு விரைவாக மீட்க கோரி பெற்றோர்கள் உறவினர்களுடன் தேனி மாவட்டம் சுருளிஅருவி கம்பம் மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்து காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து உடனடியாக தண்ணீரை நிறுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம், இந்த நேரம் பள்ளி குழந்தைகள் சென்றுவரும் நேரம் என்பதால் சாலை மறியலை கைவிடுங்கள் என கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கவைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தேடும் பணியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.1
- மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.1
- திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் , '94987 94987' என்ற TNEB Customer Care எண்ணை தொடர்பு கொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!1