logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வரும் வெற்றித் தலைவருமான தளபதி விஜய் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இத்துடன், தளபதி ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் புகைப்படங்களும் விநியோகிக்கப்பட்டன. மேலும், பட்டணம் பஸ் ஸ்டாப் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டு, அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

10 hrs ago
user_Udhayaa
Udhayaa
ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
10 hrs ago

தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வரும் வெற்றித் தலைவருமான தளபதி விஜய் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இத்துடன், தளபதி ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் புகைப்படங்களும் விநியோகிக்கப்பட்டன. மேலும், பட்டணம் பஸ் ஸ்டாப் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டு, அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீர்வளத்துரை மற்றும் ஊகவளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸிஆனந்த் அவர்களின் ஆணைப்படியும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நகர கழக செயலாளர் அழகர் மற்றும் வடக்கு நகர செயலாளர் திருப்பதி ஆகியோரின் தலைமையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக, மணப்பாறையில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் 108 சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மறுவாழ்வு மையம், அரசு போக்குவரத்து பணிமனை முன்புறம் உட்பட மணப்பாறையின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டு, கழக கொடிகள் ஏற்றப்பட்டன. இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீர்வளத்துரை மற்றும் ஊகவளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸிஆனந்த் அவர்களின் ஆணைப்படியும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நகர கழக செயலாளர் அழகர் மற்றும் வடக்கு நகர செயலாளர் திருப்பதி ஆகியோரின் தலைமையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

விழாவின் ஒரு பகுதியாக, மணப்பாறையில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் 108 சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, மறுவாழ்வு மையம், அரசு போக்குவரத்து பணிமனை முன்புறம் உட்பட மணப்பாறையின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள லூர்து அன்னை ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டு, கழக கொடிகள் ஏற்றப்பட்டன.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த அய்யனார் கோவில் பட்டியில் இன்று தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மணப்பாறை எம்எல்ஏ ர.கதிரவன் ஆகியோரின் ஆலோசனைப்படி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை அய்யனார் கோவில் பட்டி 1வது வார்டு இளைஞர் அணி மற்றும் தவெக நிர்வாகிகள், மகளிர் அணி சார்பாக மேற்கொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த அய்யனார் கோவில் பட்டியில் இன்று தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மணப்பாறை எம்எல்ஏ ர.கதிரவன் ஆகியோரின் ஆலோசனைப்படி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும், நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை அய்யனார் கோவில் பட்டி 1வது வார்டு இளைஞர் அணி மற்றும் தவெக நிர்வாகிகள், மகளிர் அணி சார்பாக மேற்கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இன்று வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, தனியார் துணிக்கடை உரிமையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை அகற்றினர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் இன்று வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, தனியார் துணிக்கடை உரிமையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலத்தை அகற்றினர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    15 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மேலும், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் சசிலாபானுசாதிக் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடற்கல்வி ஆசிரியர் சரவணன், யோகா செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் பலம் பெறுவதாகவும், நினைவுத்திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார். அத்துடன், யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தி, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும், கவனச்சிதறல் ஏற்படாது என்றும், உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விழிப்புணர்வு அளித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். இதில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மேலும், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் சசிலாபானுசாதிக் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடற்கல்வி ஆசிரியர் சரவணன், யோகா செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் பலம் பெறுவதாகவும், நினைவுத்திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார். அத்துடன், யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தி, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும், கவனச்சிதறல் ஏற்படாது என்றும், உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விழிப்புணர்வு அளித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். இதில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சித்திரைப்பட்டி கிராமத்தில் இன்று தர்மராஜன் சுவாமி மற்றும் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே தர்மராஜா, திரெளபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரைப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய இத்திருவிழாவில், ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினால் மழை பொழிந்து, விவசாயம் செழித்து, நோய் நொடி இன்றி வாழ தெய்வம் அருள் புரியும் என்பது ஐதீகமாகப் பின்பற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது. தர்மராஜா கோயில் தொடங்கி கடை வீதி, பேருந்து நிலையம், தக்காளி மார்க்கெட், பைபாஸ் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, திரெளபதி அம்மன் கோயிலை அடைந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சித்திரைப்பட்டி கிராமத்தில் இன்று தர்மராஜன் சுவாமி மற்றும் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே தர்மராஜா, திரெளபதி அம்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சித்திரைப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய இத்திருவிழாவில், ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினால் மழை பொழிந்து, விவசாயம் செழித்து, நோய் நொடி இன்றி வாழ தெய்வம் அருள் புரியும் என்பது ஐதீகமாகப் பின்பற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது. தர்மராஜா கோயில் தொடங்கி கடை வீதி, பேருந்து நிலையம், தக்காளி மார்க்கெட், பைபாஸ் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, திரெளபதி அம்மன் கோயிலை அடைந்தது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஒரு அடிக்கு ஒரு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தர்மகர்த்தா, ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Dharmapuri, Tamil Nadu•
    14 hrs ago
  • பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட மாணவரணி ரியான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், கந்திகுப்பம் பஞ்சாயத்து செயலாளர் ஜான் போஸ்கோ, ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் சந்தோஷ் குமார், பஞ்சாயத்து பொருளாளர் ஜான்பால், துணைச் செயலாளர் தாமஸ், கழக நிர்வாகிகள் கெவின், சுகேல், சுரேஷ் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    1
    பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட மாணவரணி ரியான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், கந்திகுப்பம் பஞ்சாயத்து செயலாளர் ஜான் போஸ்கோ, ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர் சந்தோஷ் குமார், பஞ்சாயத்து பொருளாளர் ஜான்பால், துணைச் செயலாளர் தாமஸ், கழக நிர்வாகிகள் கெவின், சுகேல், சுரேஷ் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என மகப்பேறு மாநில மருத்துவர் தலைவர் அமலா தேவி அவர்கள் இன்று திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
    1
    தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என மகப்பேறு மாநில மருத்துவர் தலைவர் அமலா தேவி அவர்கள் இன்று திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    15 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், வரதட்சணை கேட்டு தன்னைத் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுஜி என்ற பெண் மனு அளித்துள்ளார். ஊத்தங்கரை அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் பகவத்சிங் என்பவரின் மனைவி சுஜி, தனது மனுவில், தனது மாமியார் வனிதா, மாமனார் வெங்கடாசலம், நாத்தனார் ஜீவா, கொழுந்தனார் சுபா சந்திரபோஸ், மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், திருமணத்தின்போது தனக்கு அளித்த 15 பவுன் மற்றும் தனது கணவருக்கு அளித்த 1 பவுன் என மொத்தம் 16 பவுன் தங்க நகைகளையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், வரதட்சணை கேட்டு தன்னைத் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுஜி என்ற பெண் மனு அளித்துள்ளார்.

ஊத்தங்கரை அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் பகவத்சிங் என்பவரின் மனைவி சுஜி, தனது மனுவில், தனது மாமியார் வனிதா, மாமனார் வெங்கடாசலம், நாத்தனார் ஜீவா, கொழுந்தனார் சுபா சந்திரபோஸ், மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், திருமணத்தின்போது தனக்கு அளித்த 15 பவுன் மற்றும் தனது கணவருக்கு அளித்த 1 பவுன் என மொத்தம் 16 பவுன் தங்க நகைகளையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.