logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைப் பகுதியான தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேச மாநில எல்லை தகரகுப்பம் வாகன சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதித்தபோது, வாணியம்பாடி வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (30) என்பவர் கொண்டு வந்திருந்த 15 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மதன்குமாரிடம் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது நீதிமன்ற காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த தலைமைக் காவலர் திரு. முருகானந்தம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் திரு. வினோத் குமார் மற்றும் திரு. ஏழுமலை ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.

16 hrs ago
user_Flower
Flower
Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
16 hrs ago
37363dca-cfbd-4f40-abdc-a1957d73fec7

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைப் பகுதியான தமிழ்நாடு–ஆந்திரப் பிரதேச மாநில எல்லை தகரகுப்பம் வாகன சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதித்தபோது, வாணியம்பாடி வெள்ளகுட்டை பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (30) என்பவர் கொண்டு வந்திருந்த 15 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மதன்குமாரிடம் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது நீதிமன்ற காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த தலைமைக் காவலர் திரு. முருகானந்தம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் திரு. வினோத் குமார் மற்றும் திரு. ஏழுமலை ஆகியோரை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி சோலையூர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் நவகிரக மூர்த்திகள் ஆலய அஷ்டபந்த மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் போது காலையில் சுவாமிக்கு மகா அஷ்டபந்த ஹோமம் மற்றும் திருமாங்கல்யதாரணம் ஆகிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த ஆன்மீக வழிபாட்டு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி சோலையூர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் நவகிரக மூர்த்திகள் ஆலய அஷ்டபந்த மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவின் போது காலையில் சுவாமிக்கு மகா அஷ்டபந்த ஹோமம் மற்றும் திருமாங்கல்யதாரணம் ஆகிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த ஆன்மீக வழிபாட்டு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், நன்கொடை பணியாகப் புதிதாகக் கட்டப்பட்ட அறநிலையத்துறை அலுவலகம், ஆலய அர்ச்சகர் வீடு மற்றும் திருமணங்கள் அல்லது பொதுவான சிறிய சுப நிகழ்ச்சிகளுக்கான சிறிய மண்டபம் ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் கணபதி பூஜை ஜூலை 12 அன்று அதிகாலை நடைபெற்றது. இந்த புதிய கட்டிடங்களைக் கட்டப் பொறுப்பேற்றுச் சிறப்பாகக் கட்டி முடித்த சேகர் ரெட்டியார் மற்றும் ஆலய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த கீதா சேகர் ஆகியோர் தலைமையில் இன்று இந்த திறப்பு விழா நடைபெற்றது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில், நன்கொடை பணியாகப் புதிதாகக் கட்டப்பட்ட அறநிலையத்துறை அலுவலகம், ஆலய அர்ச்சகர் வீடு மற்றும் திருமணங்கள் அல்லது பொதுவான சிறிய சுப நிகழ்ச்சிகளுக்கான சிறிய மண்டபம் ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் கணபதி பூஜை ஜூலை 12 அன்று அதிகாலை நடைபெற்றது. இந்த புதிய கட்டிடங்களைக் கட்டப் பொறுப்பேற்றுச் சிறப்பாகக் கட்டி முடித்த சேகர் ரெட்டியார் மற்றும் ஆலய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த கீதா சேகர் ஆகியோர் தலைமையில் இன்று இந்த திறப்பு விழா நடைபெற்றது.
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாலம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக மொரப்பூர் நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தற்போது இக்கோயில் சிதிலமடைந்து, விளக்கேற்றக் கூட பணம் இல்லாமல், மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து சமய அறநிலையத்துறை கட்டிடம்' என்பதற்கான பெயர்ப்பலகை இல்லாதது குறித்து இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், கோயில் நிலத்தில் உள்ள கட்டிடங்களுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படுகிறதா என்றும், புதிய கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்றும் அவர் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை, நிலப் பிரச்சனை எனக் கூறி போலீசார் நிராகரித்துள்ளனர். இந்த புகாரை உதாசீனம் செய்யும் வகையில் மனு நிராகரிக்கப்பட்டதால், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரிமங்கலம் காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 53-வது வருட திருத்தல தேர்திருவிழா கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னையின் திருத்தேர் பவனியை, தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் மந்திரித்து முறைப்படி துவக்கி வைத்தார்.
    1
    கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 53-வது வருட திருத்தல தேர்திருவிழா கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னையின் திருத்தேர் பவனியை, தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் மந்திரித்து முறைப்படி துவக்கி வைத்தார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாளம்மன் திருக்கோவில் சிதலமடைந்து, விளக்கு ஏற்றக்கூட பணம் இல்லாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொரப்பூர் நெடுஞ்சாலையில் இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து அறநிலைத்துறை கட்டிடம்' என்ற பெயர் பலகை இல்லாதது, கட்டிடங்களுக்கு வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார், நிலப் பிரச்சனை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அறங்காவலர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.
    1
    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோடாளம்மன் திருக்கோவில் சிதலமடைந்து, விளக்கு ஏற்றக்கூட பணம் இல்லாமல் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொரப்பூர் நெடுஞ்சாலையில் இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது.

இக்கோயிலை நேரில் பார்வையிட்ட திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கட்டுமானங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலரிடம் எந்தவொரு கட்டிடத்திலும் 'இந்து அறநிலைத்துறை கட்டிடம்' என்ற பெயர் பலகை இல்லாதது, கட்டிடங்களுக்கு வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது மற்றும் புதிய கட்டுமான பணிகளுக்கு எவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக முன்னதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார், நிலப் பிரச்சனை எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் ₹2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, காரிமங்கலம் காவல் நிலையத்தில் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி அறங்காவலர் ராதாகிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார். இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    1
    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார்.

இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • சேலம் அம்மாபேட்டை அடுத்த உரையாப்பட்டி பகுதியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் புறவழிச் சாலையில் உள்ள குமரகிரி மலை ஒட்டிய பகுதி கிராம மக்கள், அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க அங்கு மேம்பாலம் அமைக்கக் கோரி இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் சாலை கடக்கும் போது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மேம்பாலம் கட்டக் கோரி பொதுமக்கள் பலமுறை அரசிடம் வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொறுமையிழந்த அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் சேலம் - சென்னை புறவழிச்சாலையின் நடுவே அமர்ந்து தங்களுக்கு உடனடியாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரதான சாலை என்பதால் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டது.
    1
    சேலம் அம்மாபேட்டை அடுத்த உரையாப்பட்டி பகுதியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் புறவழிச் சாலையில் உள்ள குமரகிரி மலை ஒட்டிய பகுதி கிராம மக்கள், அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க அங்கு மேம்பாலம் அமைக்கக் கோரி இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் சாலை கடக்கும் போது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மேம்பாலம் கட்டக் கோரி பொதுமக்கள் பலமுறை அரசிடம் வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொறுமையிழந்த அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் சேலம் - சென்னை புறவழிச்சாலையின் நடுவே அமர்ந்து தங்களுக்கு உடனடியாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரதான சாலை என்பதால் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டது.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    53 min ago
  • தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாமலை துவக்கியுள்ள "We The Leaders" அமைப்பின் சார்பில், போதை இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. டெல்லி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கரு நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அங்குள்ள பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்மணி, வேலுமணி, சிவகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சாய்சத்யன், ராஜா, கிருஷ்ணாசாய், சிமோன் கிறிஸ்டி, கார்த்திக், பிரபு, கடத்தூர் குமார், சுக்ரி, சத்திவேல், மணி கல்பனா, வடபழனி ராஜா, சிவன், ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    1
    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அண்ணாமலை துவக்கியுள்ள "We The Leaders" அமைப்பின் சார்பில், போதை இல்லாத தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. டெல்லி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கரு நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அங்குள்ள பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்மணி, வேலுமணி, சிவகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் சாய்சத்யன், ராஜா, கிருஷ்ணாசாய், சிமோன் கிறிஸ்டி, கார்த்திக், பிரபு, கடத்தூர் குமார், சுக்ரி, சத்திவேல், மணி கல்பனா, வடபழனி ராஜா, சிவன், ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, போதை இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.