கோவையின் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் 'ஆரோக்கியமான கோவை' என்ற சுகாதார விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த சமூகநல முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், வரவிருக்கும் 2026–27 ரோட்டரி ஆண்டில் கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இலவச உடல்நலப் பரிசோதனை முகாம்களை நடத்துவதாகும். இதன் மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனைகளை எளிதில் கிடைக்கச் செய்யவும், வாழ்க்கை முறை நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, உடல் நிறை குறியீடு, இடுப்பு சுற்றளவு, நாடித்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, 'கேலக்ஸி ஹெல்த் ஸ்கோர்' மூலம் அவர்களின் உடல்நல நிலை மதிப்பீடு செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி. ஸ்ரீனிவாசன், தலைமை விற்பனை அதிகாரி எஸ். குருபிரகாஷ், மனித வளம் மற்றும் நிர்வாகப் பிரிவுத் தலைவர் பி.எஸ்.டி. ஷா, மற்றும் மண்டலத் தலைவர் ஏ.வி.எம். ஜான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ரோட்டரி மாவட்டம் 3206 சார்பில் 2026–27 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர். எஸ். மாருதி மற்றும் உதவி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் சார்பில் தலைவர் ரோட்டேரியன் வி. வினோத்குமார், செயலாளர் ரோட்டேரியன் என். புருஷோத்தமன், ரோட்டேரியன் சதீஷ் எம்.எம்.எஸ் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை சார்பில் அஜய் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர். நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, நோய் வராமல் தடுப்பதே சிறந்த மருத்துவம் என்பதை வலியுறுத்திய சிறப்பு விருந்தினர்கள், ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த தினசரி இலவச சுகாதார முகாம்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்குப் பயனளிக்கும் என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதில் இது முக்கியப் பங்காற்றும் என்றும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கோவையின் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் 'ஆரோக்கியமான கோவை' என்ற சுகாதார விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த சமூகநல முயற்சியை மேற்கொண்டுள்ளன. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், வரவிருக்கும் 2026–27 ரோட்டரி ஆண்டில் கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இலவச உடல்நலப் பரிசோதனை முகாம்களை நடத்துவதாகும். இதன் மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை மருத்துவ பரிசோதனைகளை எளிதில் கிடைக்கச் செய்யவும், வாழ்க்கை முறை நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் இரத்த அழுத்தம்,
இரத்த சர்க்கரை அளவு, உடல் நிறை குறியீடு, இடுப்பு சுற்றளவு, நாடித்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, 'கேலக்ஸி ஹெல்த் ஸ்கோர்' மூலம் அவர்களின் உடல்நல நிலை மதிப்பீடு செய்யப்படும். இந்நிகழ்ச்சியில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி. ஸ்ரீனிவாசன், தலைமை விற்பனை அதிகாரி எஸ். குருபிரகாஷ், மனித வளம் மற்றும் நிர்வாகப் பிரிவுத் தலைவர் பி.எஸ்.டி. ஷா, மற்றும் மண்டலத் தலைவர் ஏ.வி.எம். ஜான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ரோட்டரி மாவட்டம் 3206 சார்பில் 2026–27 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் ஆர். எஸ். மாருதி மற்றும் உதவி மாவட்ட ஆளுநர்
ரோட்டேரியன் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் சார்பில் தலைவர் ரோட்டேரியன் வி. வினோத்குமார், செயலாளர் ரோட்டேரியன் என். புருஷோத்தமன், ரோட்டேரியன் சதீஷ் எம்.எம்.எஸ் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை சார்பில் அஜய் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர். நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, நோய் வராமல் தடுப்பதே சிறந்த மருத்துவம் என்பதை வலியுறுத்திய சிறப்பு விருந்தினர்கள், ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த தினசரி இலவச சுகாதார முகாம்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்குப் பயனளிக்கும் என்றும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதில் இது முக்கியப் பங்காற்றும் என்றும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
- கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தனது தாயுடன் இருந்த குட்டி அதன் பாதுகாவலருடன் விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.1
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் வடக்குப்பேட்டை பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலிகள் காப்பக வனப்பகுதி சத்தியமங்கலத்திற்கு அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து உணவு தேடி வரும் குரங்குகள் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக மரத்தில் முகாமிட்டுள்ளன. இந்தக் குரங்குகள் காலை வேளைகளில் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களுக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கடைகளில் இருக்கும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகள், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுகின்றன. மாலை நேரங்களில் மீண்டும் அந்த மரத்திற்கே திரும்பிச் சென்று தங்கும் இந்த குரங்குகளின் அட்டகாசத்தால், மக்கள் வீட்டின் கதவுகளைத் திறக்கவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட, வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து அவற்றைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.1
- ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பவானி நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பவானி நகரின் பிரதான சாலைகள் வழியாக பவானி பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.1
- கோவை மாவட்டம் எட்டிமடை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அந்த வனப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.1
- கோயம்புத்தூர் தடாகம் சாலையில் ஓரமாக பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் பைக் மீது அரசு பேருந்து மோதிய போதிலும், பைக்கில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.1