Shuru
Apke Nagar Ki App…
நாகை சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்த தொகுதி மக்கள் நாகை சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜவாஹிருல்லா அவர்களை நாகை தொகுதி மக்கள் சந்தித்தார்கள். தொகுதி குறித்த குறை நிறைகளை சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார்கள். மேலும், அதனை கேட்ட அவர், உடன் தொகுதி பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு காணப்படும் என்றார்.
J. Nazeer Khan
நாகை சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்த தொகுதி மக்கள் நாகை சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜவாஹிருல்லா அவர்களை நாகை தொகுதி மக்கள் சந்தித்தார்கள். தொகுதி குறித்த குறை நிறைகளை சட்ட மன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார்கள். மேலும், அதனை கேட்ட அவர், உடன் தொகுதி பிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு காணப்படும் என்றார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கும்பகோணத்தில் திடீரென மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெயிலின் கொடுமை அதிகளவு தாக்கி வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வீசுவது பொதுமக்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை நான்கு மணி அளவில் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீச தொடங்கியது அதனைத் தொடர்ந்து ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மலை வெள்ளத்தால் மற்றும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குழந்தைகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்1
- திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், காவிரி கிளை கால்வாய்களிலுள்ள குறுவை சாகுபடிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மலர் செடிகள் மற்றும் கோரை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை. திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடி நிவர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகளால் கிராமப்புறங்களில் 10 முதல் 15 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். கடும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பது அரிதாகி, கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளைப் பாதுகாக்க அரசு குறைந்த விலையில் தீவனங்களை வழங்க வேண்டும். வரவிருக்கும் வடகிழக்க பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.1
- திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது1
- கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் சுவாமி வெள்ளி நகை திருட்டு மேல்பனையூர் கிராமத்தில் அருள்மிகு புலிக்குட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் சுவாமியின் கழுத்தில் இருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் பூசாரி அறையில் இருந்த பீரோ உடைத்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாடானை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் Kபுதுக்குடி கிராமத்தில் திருவிழாவை முன்னிட்டு கும்மி திருவிழா நடைபெற்றது1
- அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க1
- கோவில் திருவிழாவை முன்னிட்டு பூத்தட்டு வீதி உலா நடைபெற்றது திருவாடானை கிழக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு பக்தர்கள் விரதம் இருந்து பூத்தட்டு எடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தனர் அவரை தொடர்ந்து பூத்தட்டு ஏண்டி பக்தர்கள் வந்தனர் வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்து அருள் பெற்று சென்றனர்1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- நேற்றைய தினம் K புதுக்குடி வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன வீரர்கள் கலந்து கொண்டார்கள்1