Shuru
Apke Nagar Ki App…
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 12-ந் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் போலீசார் தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ரோந்து பணியின் போது பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அசாம்பாவிதம் நேரிட்டால் உடனடியாக 94210 39195 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NAGAI BABU
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 12-ந் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் போலீசார் தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ரோந்து பணியின் போது பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அசாம்பாவிதம் நேரிட்டால் உடனடியாக 94210 39195 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More news from Nagapattinam and nearby areas
- நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழக்கண்ணாப்பூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ பர்வத வர்த்தினி உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா கடந்த ஜூலை 10ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, இரண்டு கால யாக பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிவவாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்ட கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற பின், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர் அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.1
- தமிழகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள் யாரும் அரசுப் பள்ளிகளுக்குள் நுழைந்து ஆய்வு செய்யக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகனின் கடுமையான உத்தரவை மீறி, திருவிடைமருதூர் அருகே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அரசுப் பள்ளிக்குள் புகுந்து ஆய்வு நடத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருமலைராஜபுரம் ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்பள்ளியில் உள்ள கழிவறைகள் பழுதடைந்து, மாணவர்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகத்தின் திருவிடைமருதூர் மத்திய கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்னவேல் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அங்கு நேரில் சென்று பழுதடைந்த கழிவறைகளை ஆய்வு செய்தனர். மேலும், திருவிடைமருதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO) உடனடியாக பள்ளிக்கு வரவழைத்து, கழிவறைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என உத்தரவு போடும் பாணியில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு நடத்தியது மட்டுமின்றி, தாங்கள் ஆய்வு செய்த புகைப்படங்களை தவெக நிர்வாகிகள் தங்களது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்துள்ளனர். அமைச்சரின் தடையையும் மீறி தவெக நிர்வாகிகள் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட இச்சம்பவம், அரசுத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் குளத்தை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன், அங்கு வளர்ந்துள்ள வேலிக் கருவை மரங்களை வெட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிதாக திறக்கப்பட்ட கண்ணன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தீவிர சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கண்ணன், இதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பொது மருத்துவம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், பரிசோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு இலவசமாக இசிஜி எடுக்கப்பட்டு, 10 நாட்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடலைப் பரிசோதனை செய்து கொண்டனர்.1
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் எம். புதூரில் உள்ள தமிழக அரசின் வாழைப்பழம் பதப்படுத்தும் குடோனை உடனடியாக திறக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குடோன் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வந்துள்ள தமிழக அரசு போர்க்கள அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ராஜிவ் நகரில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த வழிபாட்டின் போது நத்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பிரதோஷ விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் உலா நடைபெற்றதோடு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில், ஷுரு (Shuru) செயலியில் தனது கணக்கிலிருந்து தனக்கே தெரியாமல் பணம் திருடப்பட்டதாகப் பயனர் ஒருவர் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார். தனது கணக்கிலிருந்து பணம் எடுத்தவனின் UPI ID `kabila615050.rzprec@rxairtel/upi/618802657993/MANDATE` என்பதைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், அவனது செல்போன் எண் தனக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இத்திருட்டுச் சம்பவம் குறித்து க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.2