Shuru
Apke Nagar Ki App…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறுவள்ளூர் கைலாசநாதர் ஆலயத்தில் இன்று வைகாசி பிரதோஷ சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீபாராதனை கண்டுகளித்தனர்.
Agarva manickam
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறுவள்ளூர் கைலாசநாதர் ஆலயத்தில் இன்று வைகாசி பிரதோஷ சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீபாராதனை கண்டுகளித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் தண்டலம் அருகே உள்ள பிரபல பாண்டியன் ஹோட்டலில் ஓட்டுநர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட தோசையில் பாத்திரம் கழுவும் இரும்பு கம்பி சிக்கி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கேட்டதற்கு, ஹோட்டல் ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்த நிலையில், அவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- Post by Arun Kumar1
- தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பள்ளிக்கூடத்தின் அருகில் டாஸ்மாக் கடை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2020 முதல் செயல்பட்டு வரும் இந்த கடையை அகற்றக்கோரி நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.1
- எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பிரபாகர் மற்றும் செயலாளர் சீனிவாசனை சந்தித்தனர். இந்த முக்கிய சந்திப்பிற்குப் பிறகு தலைமைச் செயலகத்திலிருந்து அவர்கள் புறப்பட்டனர்.1
- குமிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எஸ். விஜயகுமார், இன்று முதன்முறையாக தனது அலுவலகத்திற்கு வருகை தந்தார். தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். பல துறை அதிகாரிகளும் எம்எல்ஏவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எம்எல்ஏ அருண்ராஜ், மக்களின் குறைகளைக் களைய தனது அலுவலகத்தில் புகார்ப் பெட்டி மற்றும் வாட்ஸ்அப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம், மக்கள் தங்கள் புகார்களை 96779 70099 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பதிவு செய்யலாம். இது மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு காண உதவும்.1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள பழமையான திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா மற்றும் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் துரியோதனன் படுகளம் சடங்குடன், காப்புக் கட்டிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வர, சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.1
- தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில், காலநிலை மாற்றத்தால் உருவாகும் எல்நினோ விளைவுகளை எதிர்கொள்வது குறித்து ஆட்சியர் சதீஷ் ஆலோசனை நடத்தினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.1
- கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தின் 15 மாணவர்கள் ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச யோகாசனப் போட்டியில் 12 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இன்று கும்மிடிப்பூண்டி திரும்பியவர்களுக்கு மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சியாளருக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன.1