Shuru
Apke Nagar Ki App…
கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் 2 லட்சத்து 34ஆயிரம் ரூபாய் பறிமுதல் கும்மிடிப்பூண்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையிட்டனர். 2மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
John Francis
கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் 2 லட்சத்து 34ஆயிரம் ரூபாய் பறிமுதல் கும்மிடிப்பூண்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையிட்டனர். 2மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல அச்சப்படும் பொதுமக்கள். சென்னை ஆர்.கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நாய் ஒன்று அலுவலகம் முழுவதும் சுற்றித் தெரிகிறது. இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு ஆதார் பிறப்பு இறப்பு வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.1
- இசை மழை இரவு வணக்கம் இரவு இன்னிசை இரவு வணக்கம்.........1
- திருச்சியில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ₹5 லட்சம் மதிப்புள்ள பொம்மைகள், பாத்திரங்கள் பறிமுதல்: BIS அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!1
- காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள். *காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்* ------------------------------- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவகால பணியாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும் பணி மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும், கொள்முதல் பணிக்குத் தேவையான சாக்கு உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும், "இன்சார்ஜ்" முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.கூட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டுமென கூறி பணியாளர் மண்டியிட்டு கையேந்தி பிச்சையாக கோரிக்கை வைத்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இக்கூட்டத்தின் மூலம் உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வேண்டி மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் நவகிரக கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் நாக தேவி அவர்கள், நவகிரக கோவிலில் (இன்று ஜூலை 30 )ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- ஆடி 3வது வெள்ளிக்கிழமையை யோட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்த பெண்கள். சென்னை ஆர்.கே நகர் தொகுதி கொருக்குப்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளிக்கின்றது.1