பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6-ஆம் தேதி இரவு முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த 10-ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. கம்பம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு பால், பன்னீா், மஞ்சள் நீா் ஊற்றி வழிபாட்டு வருகின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாசித் திருவிழா கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாரியம்மன், சிம்ம வாகனம், பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு கொடிபூஜை நடைபெற்றது. பின்னா், கொடி கோயிலை வலம்வர செய்யப்பட்டு தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடிக் கம்பத்துக்கு தா்ப்பை, மாலைகள், மாவிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு புனித நீரால் கழுவப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கம்பத்தடிக்கு சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய மாரியம்மனுக்கும், கொடி மரத்துக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் முன்புள்ள திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தீச்சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் பழனிக் கோயில் உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, காணியாளா்கள் நரேந்திரன், பண்ணாடி ராஜா, ஒப்பந்தகாரா் நேரு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். வருகிற 25-ஆம் தேதி மாசித் தேரோட்டமும், 26-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் கங்கையில் சோ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் திண்டுக்கல் மாவட்டம், பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6-ஆம் தேதி இரவு முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த 10-ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. கம்பம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு பால், பன்னீா், மஞ்சள் நீா் ஊற்றி வழிபாட்டு வருகின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மாசித் திருவிழா கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாரியம்மன், சிம்ம வாகனம், பூஜை பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு கொடிபூஜை நடைபெற்றது. பின்னா்,
கொடி கோயிலை வலம்வர செய்யப்பட்டு தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடிக் கம்பத்துக்கு தா்ப்பை, மாலைகள், மாவிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு புனித நீரால் கழுவப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கம்பத்தடிக்கு சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய மாரியம்மனுக்கும், கொடி மரத்துக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் முன்புள்ள திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் தீச்சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் பழனிக் கோயில் உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, காணியாளா்கள் நரேந்திரன், பண்ணாடி ராஜா, ஒப்பந்தகாரா் நேரு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். வருகிற 25-ஆம் தேதி மாசித் தேரோட்டமும், 26-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் கங்கையில் சோ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
- திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்1
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைமாடும் படியுடன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது இதில் 3ோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழாக்காக காத்திருக்கிறது.1
- வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்1
- திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்… அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்… இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்… தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…1
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...1