logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மறவமங்கலம் மின்வாரியம் சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்

12 hrs ago
user_A.poovan
A.poovan
காளையார்கோவில், சிவகங்கை, தமிழ்நாடு•
12 hrs ago
e3282bb2-f77d-48d0-9df9-ff6e7aa801d1

மறவமங்கலம் மின்வாரியம் சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி  இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா
    1
    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா
    user_Aravinth
    Aravinth
    Tour Guide மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை. மதுரை, மார். 10 - சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு.  அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு இந்த அச்சநிலையைத் தொடர்ந்து கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில், “சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார். மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு. மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500  ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார். கருப்புச் சந்தை குற்றச்சாட்டு சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம். வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம் மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர். பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெ. பொன்மாறன்.
    2
    வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை.
மதுரை, மார். 10 -
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென
உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு. 
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு
இந்த அச்சநிலையைத் தொடர்ந்து
கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில்,
“சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார்.
மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு.
மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன.  இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன.
வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில்,
“சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500  ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
கருப்புச் சந்தை குற்றச்சாட்டு
சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம்.
வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம்
மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை
சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது.
போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும்
எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெ. பொன்மாறன்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    36 min ago
  • மதுரை : ​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    1
    மதுரை :
​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர்.
​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று  (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
  • திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    1
    திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    1
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • திருச்சி: ​திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)
    1
    திருச்சி:
​திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.