மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் பேரையூர் தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் பேரையூர் தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சிறுதானிய சாகுபடியை விரிவுபடுத்தவும், தொழில்நுட்ப விவரங்கள் அறியவும், துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு அரங்குகளை பார்வையிட்டு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை சார்பில் சிறுதானிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிறுதானியங்கள் நமது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக திகழ்கின்றன. சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் குறைந்த நீர் தேவையுடன் வளரும் Climate Resilient Crops ஆகும். மண் வளத்தை பாதுகாக்கவும், நீர் சேமிப்பை மேம்படுத்தவும், நிலையான வேளாண்மையை உறுதிப்படுத்தவும் இவை பெரிதும் உதவுகின்றன. மதுரை மாவட்டத்தில் 2024–25 ஆம் ஆண்டில் 11,680 எக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு, சராசரி உற்பத்தி எக்டருக்கு 3197 கிலோ என பதிவாகியுள்ளது. 2025–26 ஆம் ஆண்டில் 10,132 எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.6000 வரை மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட சிறுதானியங்களுக்கு கிலோக்கு ரூ.30 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. விதைகள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய Direct Marketing வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் SHGs மற்றும் FPOs தயாரித்துள்ள Value Added Millet Products கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது கிராமப்புற தொழில்முனைவோருக்கு வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும். சிறுதானியங்கள் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்களை கட்டுப்படுத்த உதவும் சத்தான உணவு ஆகும். “உணவே மருந்து” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் உணவாக சிறுதானியங்கள் திகழ்கின்றன. சிறுதானியங்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் நாளை முதல் மூன்று வேளை உணவில் ஒரு வேளையாவது சிறுதானிய உணவு உட்கொள்வோம் என உறுதிமொழி எடுத்து ஹோட்டல்களில் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தங்கள் அன்றாட உணவில் சிறு தானியங்களை எடுத்துக்கொண்டு நோய்கள் இல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இயற்கை பஜார் நடத்தப்பட்டது. உணவுத்திருவிழாவில் அங்கன்வாடி ஊழியர்கள் சிறுதானியங்களை கொண்டு லட்டு, ஐஸ்கிரீம் போன்றவை தயாரித்தார்கள். அப்பொழுதுதான் சிறுதானியங்களில் இவையெல்லாம் செய்ய முடியும் என தெரிய வந்து விழிப்புணர்வு ஏற்பட்டது. எனவே, விவசாயிகள் அனைவரும் அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சிறுதானிய சாகுபடியை விரிவுபடுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.முருகேசன் அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்) திருமதி இராணி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) திருமதி மேரி ஜரின் ஆக்னிட்டா அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) திருமதி.மெர்ஸி ஜெயராணி அவர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பிரபா அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி சாந்தி அவர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் பேரையூர் தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் பேரையூர் தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சிறுதானிய சாகுபடியை விரிவுபடுத்தவும், தொழில்நுட்ப விவரங்கள் அறியவும், துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு அரங்குகளை பார்வையிட்டு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை சார்பில் சிறுதானிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிறுதானியங்கள் நமது பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக திகழ்கின்றன. சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் குறைந்த நீர் தேவையுடன் வளரும் Climate Resilient Crops ஆகும். மண் வளத்தை பாதுகாக்கவும், நீர் சேமிப்பை மேம்படுத்தவும், நிலையான வேளாண்மையை உறுதிப்படுத்தவும் இவை பெரிதும் உதவுகின்றன. மதுரை மாவட்டத்தில் 2024–25 ஆம் ஆண்டில் 11,680 எக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு, சராசரி உற்பத்தி எக்டருக்கு 3197 கிலோ என பதிவாகியுள்ளது. 2025–26 ஆம் ஆண்டில் 10,132 எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.6000 வரை மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட சிறுதானியங்களுக்கு கிலோக்கு ரூ.30 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. விதைகள் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய Direct Marketing வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் SHGs மற்றும் FPOs தயாரித்துள்ள Value Added Millet Products கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இது கிராமப்புற தொழில்முனைவோருக்கு வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும். சிறுதானியங்கள் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்களை கட்டுப்படுத்த உதவும் சத்தான உணவு ஆகும். “உணவே மருந்து” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும் உணவாக சிறுதானியங்கள் திகழ்கின்றன. சிறுதானியங்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் நாளை முதல் மூன்று வேளை உணவில் ஒரு வேளையாவது சிறுதானிய உணவு உட்கொள்வோம் என உறுதிமொழி எடுத்து ஹோட்டல்களில் பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடாமல் தங்கள் அன்றாட உணவில் சிறு தானியங்களை எடுத்துக்கொண்டு நோய்கள் இல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இயற்கை பஜார் நடத்தப்பட்டது. உணவுத்திருவிழாவில் அங்கன்வாடி ஊழியர்கள் சிறுதானியங்களை கொண்டு லட்டு, ஐஸ்கிரீம் போன்றவை தயாரித்தார்கள். அப்பொழுதுதான் சிறுதானியங்களில் இவையெல்லாம் செய்ய முடியும் என தெரிய வந்து விழிப்புணர்வு ஏற்பட்டது. எனவே, விவசாயிகள் அனைவரும் அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சிறுதானிய சாகுபடியை விரிவுபடுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.முருகேசன் அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்) திருமதி இராணி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) திருமதி மேரி ஜரின் ஆக்னிட்டா அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) திருமதி.மெர்ஸி ஜெயராணி அவர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பிரபா அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி சாந்தி அவர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.2
- Post by Saba Saba1
- தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுவதாகூறபட்டிருந்ததால்குழம்பும்சூழல் இருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் திறந்தால் மது பிரியர்கள் மகிழ்ச்சி1
- திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்… அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்… இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்… தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மெயின் பாதை பூட்டப்பட்டதால் பரபரப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயின் பாதையினை அடைத்து தடுப்பு வேலிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்3
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...1
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.3