Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் ஆட்டோவில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்த நபர் மீது வழக்கு பதிவு - ஆட்டோ பறிமுதல் திண்டுக்கல், மெங்கிள்ஸ் ரோடு பகுதியில் அனுமதியின்றி ஆட்டோவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகளைக் கட்டி, ஒலிபெருக்கி மூலம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் ஆட்டோவை பறிமுதல் செய்து ஆட்டோ ஓட்டுனர் ராயப்பன்தினகரன்(51) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Natarajan Pitchaimani
திண்டுக்கல்லில் ஆட்டோவில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்த நபர் மீது வழக்கு பதிவு - ஆட்டோ பறிமுதல் திண்டுக்கல், மெங்கிள்ஸ் ரோடு பகுதியில் அனுமதியின்றி ஆட்டோவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகளைக் கட்டி, ஒலிபெருக்கி மூலம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் ஆட்டோவை பறிமுதல் செய்து ஆட்டோ ஓட்டுனர் ராயப்பன்தினகரன்(51) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- Post by பெரியசாமி1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, பிரபல நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறும் போது அமைச்சர் ஈடுபட்ட தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேல் இன்று பெரியகுளம் பகுதிகளா உள்ள தண்டு பாளையம் பட்டாளம்மன் கோவில் அம்பேத்கர் நகர் வள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுவதால் தங்கள் வாக்குகளை பானை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என வாக்கு சேகரித்தார் மேலும் திமுக அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் அவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று (ஏப்.20) காலை அவர் அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது தள்ளுவண்டி கடையில் வடை சுட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குகளை கேட்டார். உடன் திமுக பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டசெயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- சேலம் கோரிமேட்டில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு பாமக தலைவர் அன்புமணி, சேலம் வடக்கு தொகுதியில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரன் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார், கொள்ளையடிப்பவர்களுடன் கூட்டி வைத்துக் கொண்டு கமிஷன் வாங்கி அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுக் கொண்டு உள்ளார். இந்தத் தொகுதி முன்னேற்றத்திற்காக இதுவரை எந்த நன்மையும் செய்யாத அவர், மறுபடியும் தேர்தலில் நிற்பதற்கு உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் அவரை துரத்தி அடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1