வையம்பட்டியில் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் பலி மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வைரம்பட்டியை சேர்ந்த ராஜலெட்சுமி (50). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் இவர் வையம்பட்டி கடைவீதியில் உள்ள கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வையம்பட்டி கடை வீதியில் சாலையோரங்களில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று (17.02.2026 ) அதிகாலை சுமார் 03:30 மணிக்கு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சவேரியார் புரம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முகம் கை கால்கள் சிதைந்து இறந்த நிலையில் இருந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவகிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
வையம்பட்டியில் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் பலி மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வைரம்பட்டியை சேர்ந்த ராஜலெட்சுமி (50). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் இவர் வையம்பட்டி கடைவீதியில் உள்ள கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வையம்பட்டி கடை வீதியில் சாலையோரங்களில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று (17.02.2026 ) அதிகாலை சுமார் 03:30 மணிக்கு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சவேரியார் புரம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முகம் கை கால்கள் சிதைந்து இறந்த நிலையில் இருந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவகிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.1
- அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல் அனைத்தனர். அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து திடிரென தீ பிடித்தது. இதில் மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது1
- இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா2
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் எ. சித்தூர் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சர்வ மங்கள ரூபிணி சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் பெண்கள் பொங்கல் வைக்கும் விழா பெண்களுக்கு சீர்வரிசை வழங்கும் திருவிழா அன்னதானமும் வெகு விமர்சையாக நடைபெற்றது இக்கோயிலில் சுற்று வட்டார ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் வெகு விமர்சையாக திருவிழா நடைபெற்றது1
- ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் தீமிதி விழா !! கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் திருநங்கை மாருளாளி வினோதினி தலைமையில் அங்காள பரமேஸ்வரி கோவில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் கரகம் பாலித்து, விரதம் இருந்த பக்தர்கள் அலகுகுத்தியும், தீமிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். திருநங்கைகள் வழிபடும் இக்கோவிலில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- ஒட்டன்சத்திரம் மற்றும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள மாணவர்கள், மாணவியர்கள் ஒட்டன்சத்திரம் நகரில் வந்து கல்வி கற்று சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறனர். இந்நிலையில் பள்ளி விடும் நேரத்தில் அரசு சார்பில் ஊதிய பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் நீண்ட நேரம் காத்திருந்து தாருங்கள் பேருந்து தங்களுடைய ஊருக்கு செல்ல வேண்டியதாக மாணவியர்கள் குற்றம் சாட்டி வருகிறனர். மேலும் பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க பள்ளி மாணவியர்கள் கோரிக்கை.1
- சுப்பராபட்டி கிராமம்1