காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025...! கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டி னென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள கார் மற்றும் மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வமுள்ள வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இந்த ஆண்டு ஜேகே டயரின் பந்தய நாட்காட்டியில் அறிமுகப்படுத் தப்பட்ட லெவிடாஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் கோவையை சேர்ந்த ஜெய் பிரசாந்த் வெங்கட், மாருதி இக்னிஸ் மாடல் காரை தன்னால் தன்னம்பிக்கையுடன் கையாள முடியும் என்பதை வெளிப்படுத்தினார், இப்போட்டியில் ஜெய் பிரசாந்த் 10 சுற்றுகளாக நடந்த 2.3 கிமீ தூரத்தை 14:38,492 நேரத்தில் கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிகழ்வில் கார்பந்தய வீரர்கள், மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள், ரேஸ் பிரியர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ரேசைக்கண்டு மகிழ்ந்தனர். 📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455
காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025...! கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற ஜேகே டயர் ரேசிங் சீசன் 2025-ன் 2வது சுற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜேகே டயர் லெவிடாஸ் கோப்பை, ராயல் என்பீல்ட் கான்டி னென்டல் ஜிடி கோப்பை மற்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள கார் மற்றும் மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வமுள்ள வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இந்த
ஆண்டு ஜேகே டயரின் பந்தய நாட்காட்டியில் அறிமுகப்படுத் தப்பட்ட லெவிடாஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் கோவையை சேர்ந்த ஜெய் பிரசாந்த் வெங்கட், மாருதி இக்னிஸ் மாடல் காரை தன்னால் தன்னம்பிக்கையுடன் கையாள முடியும் என்பதை வெளிப்படுத்தினார், இப்போட்டியில் ஜெய் பிரசாந்த் 10 சுற்றுகளாக நடந்த 2.3 கிமீ தூரத்தை 14:38,492 நேரத்தில் கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிகழ்வில் கார்பந்தய வீரர்கள், மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள், ரேஸ் பிரியர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ரேசைக்கண்டு மகிழ்ந்தனர். 📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455
- ஊட்டி. கொட்டும் உறைபனி. சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு அதை கண்டு களிக்க.1
- Post by Santhosh Santhosh3
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி மஹாலட்சுமிபுரத்தில் கடந்த 15 வருடமாக குடிதண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வந்தனர் அங்கு மேல் நிலைத் தொட்டி கட்டுவதற்கும் இடமில்லை தற்போது புதியதாக போடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தொட்டி பணியை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.1
- இராசிபுரம் வட்டம் மல்லூர் அருகே உள்ள ப. மேட்டூரில் மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு மார்கழி 4 தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டி கொண்டனர்1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- Post by Manoj Sriveerapathiran1
- இரவின் மடியில்.1