logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசான மழை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பரவலான இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கினர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

2 days ago
user_நம்ம ஊரு புதுக்கோட்டை
நம்ம ஊரு புதுக்கோட்டை
Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
2 days ago

புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசான மழை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பரவலான இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டின் உள்ளேயே முடங்கினர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியநாராயணமூர்த்தி தலைமையில் பொங்கல் விழா கோலாகலம்.
    1
    ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சத்தியநாராயணமூர்த்தி தலைமையில் பொங்கல் விழா கோலாகலம்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • *சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ.க, மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.க,வினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.க வினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.ஆர்.தவமணி தலைமையில் தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
    1
    *சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ.க, மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.க,வினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.க வினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் தமிழக பாஜக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் டி.ஆர்.தவமணி தலைமையில் தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மணப்பாறை வழியாக அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
    1
    மணப்பாறை வழியாக
அடாத மழையிலும் விடாமல் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
தை மாதம் தொடங்கும் முன்னர் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பழனி முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து பின்னர் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதே போல் இன்னும் சில தினங்களில் தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பலரும் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதன்படி இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை வழியாக திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அதிக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களின் பாதயாத்திரையில் கவனம் செலுத்தி முருகனை காண பக்தி பரவசத்துடன் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். அதிக அளவிலானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்
    1
    ஆத்தூர்: அய்யம்பாளையத்தல் இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகள் 
வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13-ம் ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தையம் நடைபெற்றது, இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன பரிசுகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில் குமார் வழங்கினார்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது
    1
    திண்டுக்கல் 12/01/26  வானிலை மேகமூட்டத்துடன் லேசான  வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது
    1
    வேடசந்தூர்  பூதிபுரம் பஞ்சாயத்து  மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால்  பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு  சார்பாகவும்  கோரிக்கை வைக்கப்படுகிறது
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    7 hrs ago
  • நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை. அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது. தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது. மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி நிறைந்து வழிந்து ஓடும் சோத்துப்பாறை அணை.
அணை நிறைந்து மீண்டும் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு  நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 125 அடியாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 123 அடியிலிருந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வழிந்து ஓடுகிறது.
தற்பொழுது அணையின் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ள நிலையில் அனைத்து நீர் வரத்து 25 கனஅடியாகவும் அணையில் இருந்து  நீர் வெளியேற்றம் 25 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடி உள்ளது.
மீண்டும் அணைக்கு நீர் வரத்து தொடங்கி சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணையிலிருந்து நீர் வழிந்தோடி கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து துவங்கியதால் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சிறப்பு பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர் பள்ளி மாணவர்கள் சிரமத்தைபோக்கும் வகையில், தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி, இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்தனை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை எஸ். ரகுபதி துவக்கி வைத்து சிறப்பித்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
    1
    சிறப்பு பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்
பள்ளி மாணவர்கள் சிரமத்தைபோக்கும் வகையில், தமிழ்நாடு முதலைமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி, இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்தனை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை எஸ். ரகுபதி துவக்கி வைத்து சிறப்பித்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.