logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு "பாராட்டு சான்றிதழை " இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியிடம் கலெக்டர் க.இளம் பகவத் வழங்கி பாராட்டினார் **************************************** தமிழகத்தில் முதன் முதலில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும். என திட்டமிட்டு தொடர்ந்து பனை விதைகளை விதைத்து வரும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் சேவையை பாராட்டி "பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டு பரிசினையும்" இயக்குனர் டாக்டர் எஸ். ஜே. கென்னடியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம் பகவத் இ.ஆ.ப. வழங்கி பாராட்டினார். தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனைமரம் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்துள்ளது. ஆனால் அவைகள் செங்கல் சூளைகளுக்காகவும், விறகிற்காகவும் மேலும் பல்வேறு காரணங்களுக்கா வெட்டி அளிக்கப்பட்டுள்ளது . தற்போது சுமார் ஒரு கோடிக்கும் குறைவான பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் கடற்கரையில் மண்ணரீப்பு, புயல், சூறாவளி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இயற்கை சீற்றங்களினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இயற்கையை பாதிக்கக்கூடிய சீற்றங்களை தடுக்க வேண்டும், இயற்கையை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளோடு, சேவை மனப்பான்மையோடு, சமூக அக்கறையோடு , எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி தமிழகத்தில் முதன் முதலில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும். என்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க, மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க தாமிரபரணி ஆற்றங்கரை உட்பட நீர்நிலைகளின் கரைகள் உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆற்றங்கரை, குளத்தாங்கரை, வாய்க்காங்கரை, போன்ற நீர் நிலைகளிலும், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க கடற்கரை ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், தொடர்ந்து ஒரு கோடி பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். தற்போது வரை சுமார் 76 லட்சம் பனைமர விதைகளை விதைத்துள்ளார்கள். சில இடங்களில் விதைக்கப்பட்டு வளர்ந்து வரும் பனைமர கன்றுகளை (வடலி) பராமரித்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும், இளைஞர் மன்றங்களை சார்ந்த இளைஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பனை பாதுகாப்பு மற்றும் பனைப் பொருட்களின் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு, கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய , புதிய அமைப்புகளை உருவாக்கி பலரும் பனை விதைகளை வைத்து வருகிறார்கள். மதர் சமூக சேவை நிறுவனத்தின் விழிப்புணர்வால் தமிழகத்தில் மக்களிடத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களிடத்தில்பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 2025-2026 ஒரு ஆண்டில் ஆண்டில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கடம்பா குளம் மறுகால் ஓடை, கடற்கரைப் பகுதிகளிலும் , குளம் ஏரி போன்ற நீர் நீர் நிலைகளின் கரையோரங்களில் 5,00,000 பனை மர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. இச் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக சான்றித வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் மு. இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி வன அலுவலர் பெ. முனியப்பன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம் பகவத் இ.ஆ.ப. மதர் சமூக சேவை நிறுவனத்தின் சேவையை பாராட்டி இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியிடம் பாராட்டு சான்றிதழையும், பாராட்டு பரிசினையும் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் லீடு டிரஸ்ட் இயக்குனர் எஸ் பானுமதி உட்பட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

7 hrs ago
user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
7 hrs ago
5b959d20-6fe9-4332-a033-9af892fe28cb

சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் மதர் சமூக சேவை நிறுவனத்திற்கு "பாராட்டு சான்றிதழை " இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியிடம் கலெக்டர் க.இளம் பகவத் வழங்கி பாராட்டினார் **************************************** தமிழகத்தில் முதன் முதலில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும். என திட்டமிட்டு தொடர்ந்து பனை விதைகளை விதைத்து வரும் மதர் சமூக சேவை நிறுவனத்தின் சேவையை பாராட்டி "பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டு பரிசினையும்" இயக்குனர் டாக்டர் எஸ். ஜே. கென்னடியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம் பகவத் இ.ஆ.ப. வழங்கி பாராட்டினார். தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனைமரம் தூத்துக்குடி மாவட்டத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்துள்ளது. ஆனால் அவைகள் செங்கல் சூளைகளுக்காகவும், விறகிற்காகவும் மேலும் பல்வேறு காரணங்களுக்கா வெட்டி அளிக்கப்பட்டுள்ளது . தற்போது சுமார் ஒரு கோடிக்கும் குறைவான பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் கடற்கரையில் மண்ணரீப்பு, புயல், சூறாவளி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. இயற்கை சீற்றங்களினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இயற்கையை பாதிக்கக்கூடிய சீற்றங்களை தடுக்க வேண்டும், இயற்கையை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மதர் சமூக சேவை நிறுவனம் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளோடு, சேவை மனப்பான்மையோடு,

1a5036ce-d819-45d8-837e-f4b31d87efbe

சமூக அக்கறையோடு , எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி தமிழகத்தில் முதன் முதலில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க வேண்டும். என்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க, மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க தாமிரபரணி ஆற்றங்கரை உட்பட நீர்நிலைகளின் கரைகள் உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆற்றங்கரை, குளத்தாங்கரை, வாய்க்காங்கரை, போன்ற நீர் நிலைகளிலும், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் தடுக்க கடற்கரை ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், தொடர்ந்து ஒரு கோடி பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள். தற்போது வரை சுமார் 76 லட்சம் பனைமர விதைகளை விதைத்துள்ளார்கள். சில இடங்களில் விதைக்கப்பட்டு வளர்ந்து வரும் பனைமர கன்றுகளை (வடலி) பராமரித்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும், இளைஞர் மன்றங்களை சார்ந்த இளைஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் பனை பாதுகாப்பு மற்றும் பனைப் பொருட்களின் மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு, கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய , புதிய அமைப்புகளை உருவாக்கி பலரும் பனை

f0d328c7-aae1-4de0-89be-7cb2ea1e895f

விதைகளை வைத்து வருகிறார்கள். மதர் சமூக சேவை நிறுவனத்தின் விழிப்புணர்வால் தமிழகத்தில் மக்களிடத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களிடத்தில்பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 2025-2026 ஒரு ஆண்டில் ஆண்டில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம், கடம்பா குளம் மறுகால் ஓடை, கடற்கரைப் பகுதிகளிலும் , குளம் ஏரி போன்ற நீர் நீர் நிலைகளின் கரையோரங்களில் 5,00,000 பனை மர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. இச் சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக சான்றித வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் மு. இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி வன அலுவலர் பெ. முனியப்பன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம் பகவத் இ.ஆ.ப. மதர் சமூக சேவை நிறுவனத்தின் சேவையை பாராட்டி இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியிடம் பாராட்டு சான்றிதழையும், பாராட்டு பரிசினையும் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் லீடு டிரஸ்ட் இயக்குனர் எஸ் பானுமதி உட்பட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • நட்சத்திர தொகுதி காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்... #KPK #சென்னைபுறநகர்மாவட்டம் #சோழிங்கநல்லூர்
    1
    நட்சத்திர தொகுதி 
காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்...
#KPK
#சென்னைபுறநகர்மாவட்டம் 
#சோழிங்கநல்லூர்
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    33 min ago
  • தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    1
    தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.
    user_AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    AMUTHAM TV அமுதம் TV வாஞ்சியார
    Newspaper advertising department தாம்பரம், செங்கல்பட்டு, தமிழ்நாடு•
    15 min ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.
    1
    ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி  பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    58 min ago
  • பட்டு நெசவு செய்ய முக்கிய பொருளான ஜரிகைகட்டையை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில கைத்தறி தந்தை தோழர் கே எஸ்  .பார்த்தசாரதி கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் __________ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை செயலாளர் ஜெ கமலநாதன் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாக ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல் படுத்ததாதால் தமிழ்நாடு முழுவதும் பட்டு நெசவு தொழில் நலிவடைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலமாகவும் பட்டு சேலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, அது மட்டும் இன்றி, ஒரு ஆண்டுகாலமாக பட்டு கைத்தறி நெசவுத் தொழிலுக்கு தேவையான முக்கிய மூல பொருளான ஜரிகை, வெள்ளி, தங்கம் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து கொண்டே போவதால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் உற்பத்தியாளர்களும், பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான ஜரிகை கொள்முதல் செய்ய இயலாமல், நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் எனப் பேசினார். திமுக ஆட்சியில், நெசவாளர் குடும்பங்கள் பட்டினி சாவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என நெசவாளர் தரப்பில் கூறப்பட்டது. நெசவு தொழிலை பாதுகாத்திட கோரி கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கே.எஸ். பார்த்தசாரதி கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முக்கிய கோரிக்கையாக, பட்டு நெசவுக்கு தேவையான ஜரிகை விலையை குறைக்கவும் , தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை ரத்துசெய்யவும், கோறாவிற்கு மான்யம் வழங்குவது போல்  ஜரிகைக்கும் மான்யம் வழங்கிடவும், தொடர்ந்து உயரும் கோறா விலையை கட்டுபடுத்தவும், குடிசை தொழிலாக விளங்கும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு GST வரியில் இருந்து விலக்கு அளித்திடவும், ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல்படுத்திடவும்,  உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.  இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மாநில கைத்தறி தந்தை தோழர். K.S. பார்த்தசாரதி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேட்டி ஜெ.கமலநாதன் துணைச் செயலாளர் கைத்தறி சங்கம்
    2
    பட்டு நெசவு செய்ய முக்கிய பொருளான ஜரிகைகட்டையை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில கைத்தறி தந்தை தோழர் கே எஸ் 
.பார்த்தசாரதி கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
__________
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை செயலாளர் ஜெ
கமலநாதன் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாக ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல் படுத்ததாதால் தமிழ்நாடு முழுவதும் பட்டு நெசவு தொழில் நலிவடைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலமாகவும் பட்டு சேலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, அது மட்டும் இன்றி, ஒரு ஆண்டுகாலமாக பட்டு கைத்தறி நெசவுத் தொழிலுக்கு தேவையான முக்கிய மூல பொருளான ஜரிகை, வெள்ளி, தங்கம் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து கொண்டே போவதால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் உற்பத்தியாளர்களும், பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான ஜரிகை கொள்முதல் செய்ய இயலாமல், நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் எனப் பேசினார்.
திமுக ஆட்சியில், நெசவாளர் குடும்பங்கள் பட்டினி சாவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என நெசவாளர் தரப்பில் கூறப்பட்டது.
நெசவு தொழிலை பாதுகாத்திட கோரி கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கே.எஸ். பார்த்தசாரதி கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் முக்கிய கோரிக்கையாக, பட்டு நெசவுக்கு தேவையான ஜரிகை விலையை குறைக்கவும் , தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை ரத்துசெய்யவும், கோறாவிற்கு மான்யம் வழங்குவது போல்  ஜரிகைக்கும் மான்யம் வழங்கிடவும், தொடர்ந்து உயரும் கோறா விலையை கட்டுபடுத்தவும், குடிசை தொழிலாக விளங்கும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு GST வரியில் இருந்து
விலக்கு அளித்திடவும், ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல்படுத்திடவும்,  உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 
இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மாநில கைத்தறி தந்தை
தோழர். K.S. பார்த்தசாரதி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வேட்டி ஜெ.கமலநாதன் துணைச் செயலாளர் கைத்தறி சங்கம்
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।
    1
    कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल।
वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई।
वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।
    user_Shankar sahay
    Shankar sahay
    Kallakkurichi, Kallakurichi•
    23 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.