Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு..! திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐபி செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்து வெளியே வந்தவுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
CHANDRA SEKAR AYYANAR
திண்டுக்கல்லில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு..! திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐபி செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்து வெளியே வந்தவுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
More news from Karur and nearby areas
- குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் கரூர் மாவட்டம் குளித்தலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் இன்று குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்1
- तमिल अभिनेत्री सुभाषिनी बालसुब्रमण्यम का निधन, चेन्नई स्थित घर में मिला शव; सुसाइड की आशंका चेन्नई: दक्षिण भारतीय टेलीविजन उद्योग से एक बेहद चौंकाने वाली और दुखद खबर सामने आई है। लोकप्रिय तमिल टीवी अभिनेत्री सुभाषिनी बालसुब्रमण्यम (Subashini Balasubramaniyam) सोमवार, 6 अप्रैल 2026 को चेन्नई स्थित अपने आवास पर मृत पाई गईं। संदिग्ध परिस्थितियों में मिला शव अभिनेत्री का शव उनके अय्यप्पनथंगल (Ayyappanthangal) स्थित घर में संदिग्ध परिस्थितियों में मिला है। प्रारंभिक पुलिस जांच और मीडिया रिपोर्ट्स के अनुसार, यह मामला प्रथम दृष्टया आत्महत्या (Suicide) का लग रहा है। पुलिस ने घटनास्थल पर पहुँचकर शव को कब्जे में ले लिया है और पोस्टमार्टम के लिए श्री रामचंद्र मेडिकल कॉलेज एवं अस्पताल भेजकर मामले की गहन तफ्तीश शुरू कर दी है। 'कयल' सीरियल से मिली थी घर-घर में पहचान सुभाषिनी की असामयिक मौत ने उनके प्रशंसकों और सहकर्मियों को गहरे सदमे में डाल दिया है। विशेष रूप से लोकप्रिय तमिल सीरियल 'कयल' (Kayal) में उनकी भूमिका के लिए उन्हें दर्शकों का भरपूर प्यार मिला था। मूल रूप से श्रीलंका की रहने वाली सुभाषिनी पिछले कई वर्षों से चेन्नई में रहकर अपने अभिनय करियर को संवार रही थीं। उन्होंने साल 2012 में फिल्म 'इनी अवन' (Ini Avan) से अपने सफर की शुरुआत की थी और बाद में कई शॉर्ट फिल्मों और सामाजिक जागरूकता से जुड़े प्रोजेक्ट्स का हिस्सा रहीं। जन्मदिन और सालगिरह से पहले मातम इस घटना की सबसे हृदयविदारक बात यह है कि सुभाषिनी का जन्मदिन 12 अप्रैल को आने वाला था और इसी महीने उनकी शादी की दूसरी सालगिरह भी थी। खुशियों के इन बड़े मौकों से ठीक पहले अभिनेत्री द्वारा उठाए गए इस कथित आत्मघाती कदम ने कई गंभीर सवाल खड़े कर दिए हैं। क्या करियर का तनाव या कोई निजी कारण इस कदम के पीछे था? पुलिस अब इन सभी पहलुओं की जांच कर रही है। इंडस्ट्री में शोक की लहर सोशल मीडिया पर उनके सह-कलाकार और चाहने वाले लगातार उन्हें श्रद्धांजलि दे रहे हैं। कई कलाकारों ने सुभाषिनी को एक हंसमुख और प्रतिभावान अभिनेत्री के रूप में याद किया है। फिलहाल पुलिस सुभाषिनी के परिवार और दोस्तों से पूछताछ कर रही है ताकि इस कठोर कदम के पीछे की असली वजह का पता लगाया जा सके।1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சரளபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, காளியாபுரம் சோமநாதபுரம் பிரிவு, எட்டிதுரை, KPM காலனி மற்றும் நரிக்கல்பதி பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது!#BJP#ADMK#1
- Post by Rajalakshmi sivasangaran2
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சப்தஸ்தான பெருவிழா தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர்கள் சுவாமி அம்மன் எழுந்தருளி வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோவில், இழுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து, கைலாய வாந்தியங்கள் முழங்க, சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது. அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது. கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சி தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ போட்டது. வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வினை 18-கிராமங்களை சேர்ந்த சுமார் 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாகப் பசுவந்தனைக்கு இன்று காலை ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தைச் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வில்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் மணிமுத்து (55) ஓட்டி வந்தார். நடத்துனராக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணியாற்றி வந்தார். சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்து, இன்று காலை 8:15 மணியளவில் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மறவன்மடம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடின்றிச் சென்ற பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதோடு, அங்கிருந்த ஒரு பனைமரத்தின் மீதும் மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் சுமார் 100 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்தக் கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மணிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- *பெண்களுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு* *திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் தொகை 2000 ஆகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 ரூபாய் கூப்பன் மூலம் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொள்ளாம என கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம்* போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சராகிய ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார் முதல் கட்டமாக போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட ஆதிபட்டி, பூதிபுரம், மஞ்சுநாயக்கன்பட்டி, வலையப்பட்டி, கோடாங்கி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்றனர் தொடர்ந்து பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி இருக்கிறார் பெண்களை முன்னிலைப்படுத்தி திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்கள், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார், அதுமட்டுமல்லாமல் குடும்பத்திற்கு 8000 ரூபாய் கூப்பன் அறிவித்துள்ளார்கள் அதன் மூலம் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கடந்த தேர்தலில் நான் எம்.எல்.ஏ வாக இருந்த போது உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் 100க்கு 99 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என்று தெரிவித்த அவர் உங்களது வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் செலுத்தி என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோளா விடுத்தார்1
- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்ந்துறை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தாளியாம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர் பின்பு கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை தங்களது கைகளாலே அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர்1
- Post by மா.கணேஷ்1