logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் அனைத்து வட்டங்களிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த வருவாய் தீர்வாயம் கடந்த 18.06.2026 அன்று தொடங்கி, இன்றும் (23.06.2026) தொடர்ந்து நடைபெற்றது. இன்று, அனைத்து வட்டங்களிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். வருவாய் தீர்வாயத்தின் இரண்டாம் நாளான இன்று, வாலாஜாபாத் வட்டத்தில் 152 மனுக்களும், குன்றத்தூர் வட்டத்தில் 118 மனுக்களும், காஞ்சிபுரம் வட்டத்தில் 72 மனுக்களும், திருப்பெரும்புதூர் வட்டத்தில் 330 மனுக்களும், உத்திரமேரூர் வட்டத்தில் 183 மனுக்களும் என மொத்தம் 855 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை (24.06.2026), காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டத்தில் தொள்ளாழி, உள்ளாவூர், வில்லிவலம், வாலாஜாபாத், வல்லப்பாக்கம், நத்தாநல்லூர், சீயமங்கலம் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும்; குன்றத்தூர் வட்டத்தில் மாங்காடு உள்வட்டத்தைச் சேர்ந்த மலையம்பாக்கம், கொழுமணிவாக்கம், மாங்காடு பி-பிளாக், மாங்காடு ஏ-பிளாக், கோவூர், தண்டலம் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படவுள்ளன. மேலும், காஞ்சிபுரம் வட்டத்தில் பரந்தூர் உள்வட்டத்தைச் சேர்ந்த காரை, சீயட்டி, சிறுவள்ளுர், சிறுவாக்கம், நெல்வாய், தண்டலம், பரந்தூர் அ, பரந்தூர் ஆ, கூத்திரம்பாக்கம், வளத்தூர் அ, வளத்தூர் ஆ, தண்டலம், வேடல், பொடவூர் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும்; திருப்பெரும்புதூர் வட்டத்தில் தண்டலம் உள்வட்டத்தைச் சேர்ந்த செங்காடு, மண்ணூர், நெமிலி ஏ-பிளாக், நெமிலி பி-பிளாக், காட்ரம்பாக்கம் ஏ-பிளாக், காட்ரம்பாக்கம் பி-பிளாக், தண்டலம், கொண்டவாக்கம், மேவளுர்குப்பம் ஏ-பிளாக், மேவளுர்குப்பம் பி-பிளாக், இருங்காட்டுக்கோட்டை ஏ-பிளாக், இருங்காட்டுக்கோட்டை பி-பிளாக் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும்; உத்திரமேரூர் வட்டத்தில் அரும்புலியூர் உள்வட்டத்தைச் சேர்ந்த திருமுக்கூடல், அருங்குன்றம், பினாயூர், சீத்தணஞ்சேரி, கரும்பாக்கம், அரும்புலியூர், முளகினிமேனி, களியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, புல்லம்பாக்கம் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படும். இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மனுக்களை அளித்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

3 hrs ago
user_காஞ்சி குமார்
காஞ்சி குமார்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
3 hrs ago
72716b9d-4d4b-4569-ac58-b1c8aa1cda4c

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் அனைத்து வட்டங்களிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த வருவாய் தீர்வாயம் கடந்த 18.06.2026 அன்று தொடங்கி, இன்றும் (23.06.2026) தொடர்ந்து நடைபெற்றது. இன்று, அனைத்து வட்டங்களிலும் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். வருவாய் தீர்வாயத்தின் இரண்டாம் நாளான இன்று, வாலாஜாபாத் வட்டத்தில் 152 மனுக்களும், குன்றத்தூர் வட்டத்தில் 118 மனுக்களும், காஞ்சிபுரம் வட்டத்தில் 72 மனுக்களும், திருப்பெரும்புதூர் வட்டத்தில் 330 மனுக்களும், உத்திரமேரூர் வட்டத்தில் 183 மனுக்களும் என மொத்தம் 855 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை (24.06.2026), காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டத்தில் தொள்ளாழி, உள்ளாவூர், வில்லிவலம், வாலாஜாபாத், வல்லப்பாக்கம், நத்தாநல்லூர், சீயமங்கலம் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும்; குன்றத்தூர் வட்டத்தில் மாங்காடு உள்வட்டத்தைச் சேர்ந்த மலையம்பாக்கம், கொழுமணிவாக்கம், மாங்காடு பி-பிளாக், மாங்காடு ஏ-பிளாக், கோவூர், தண்டலம் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படவுள்ளன. மேலும், காஞ்சிபுரம் வட்டத்தில் பரந்தூர் உள்வட்டத்தைச் சேர்ந்த காரை, சீயட்டி, சிறுவள்ளுர், சிறுவாக்கம், நெல்வாய், தண்டலம், பரந்தூர் அ, பரந்தூர் ஆ, கூத்திரம்பாக்கம், வளத்தூர் அ, வளத்தூர் ஆ, தண்டலம், வேடல், பொடவூர் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும்; திருப்பெரும்புதூர் வட்டத்தில் தண்டலம் உள்வட்டத்தைச் சேர்ந்த செங்காடு, மண்ணூர், நெமிலி ஏ-பிளாக், நெமிலி பி-பிளாக், காட்ரம்பாக்கம் ஏ-பிளாக், காட்ரம்பாக்கம் பி-பிளாக், தண்டலம், கொண்டவாக்கம், மேவளுர்குப்பம் ஏ-பிளாக், மேவளுர்குப்பம் பி-பிளாக், இருங்காட்டுக்கோட்டை ஏ-பிளாக், இருங்காட்டுக்கோட்டை பி-பிளாக் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும்; உத்திரமேரூர் வட்டத்தில் அரும்புலியூர் உள்வட்டத்தைச் சேர்ந்த திருமுக்கூடல், அருங்குன்றம், பினாயூர், சீத்தணஞ்சேரி, கரும்பாக்கம், அரும்புலியூர், முளகினிமேனி, களியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, புல்லம்பாக்கம் ஆகிய கிராமங்கள் மற்றும் அதன் துணை கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படும். இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மனுக்களை அளித்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொறுப்பாளராக சி. விநாயகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொறுப்பாளராக சி. விநாயகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Real Estate Agent வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சென்னை புறநகர் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் பகுதி ஈஞ்சம்பாக்கம், இ.சி.ஆர், அம்மா உணவகம் எதிரில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பகுதி செயலாளர் தனசேகரன் தலைமையில், 194 - மேற்கு வட்டச் செயலாளர் கோபி முன்னிலையில் கேக் வெட்டி தொடங்கினர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 194 - மேற்கு வட்டத்தைச் சேர்ந்த கே.பாக்யராஜ் மற்றும் வி.தாமஸ் ஆகியோர் இணைந்து 2052 நபர்களுக்கு அருஞ்சுவை சிக்கன் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்து வழங்கினர். தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கம் அட்வென்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் பயிலும் 300 மாணவ, மாணவிகளுக்கும் கேக் மற்றும் சுவையான சிக்கன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டு, பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த மாபெரும் அன்னதான நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இது தமிழக வெற்றி கழகத்தின் ஈஞ்சம்பாக்கம் 194 -வது மேற்கு வட்டம் சார்பில், முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் நிகழ்வாகும்.
    1
    சென்னை புறநகர் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் பகுதி ஈஞ்சம்பாக்கம், இ.சி.ஆர், அம்மா உணவகம் எதிரில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பகுதி செயலாளர் தனசேகரன் தலைமையில், 194 - மேற்கு வட்டச் செயலாளர் கோபி முன்னிலையில் கேக் வெட்டி தொடங்கினர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 194 - மேற்கு வட்டத்தைச் சேர்ந்த கே.பாக்யராஜ் மற்றும் வி.தாமஸ் ஆகியோர் இணைந்து 2052 நபர்களுக்கு அருஞ்சுவை சிக்கன் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்து வழங்கினர். தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கம் அட்வென்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் பயிலும் 300 மாணவ, மாணவிகளுக்கும் கேக் மற்றும் சுவையான சிக்கன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டு, பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த மாபெரும் அன்னதான நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இது தமிழக வெற்றி கழகத்தின் ஈஞ்சம்பாக்கம் 194 -வது மேற்கு வட்டம் சார்பில், முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் நிகழ்வாகும்.
    user_Venmanna
    Venmanna
    Chengalpattu, Tamil Nadu•
    10 hrs ago
  • முதல்வர் விஜய், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தாய்மாமன் தங்க மோதிரம் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
    1
    முதல்வர் விஜய், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தாய்மாமன் தங்க மோதிரம் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சபாநாயகர், மின்சாரத்துறை அமைச்சர் பேசிய சில வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கையால் மின்சாரத்துறை அமைச்சர் உரை தொடர்பான குறிப்பிட்ட பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது.
    1
    சபாநாயகர், மின்சாரத்துறை அமைச்சர் பேசிய சில வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கையால் மின்சாரத்துறை அமைச்சர் உரை தொடர்பான குறிப்பிட்ட பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது.
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சென்னை எழில் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடை எண் -7, அங்கு பார் வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. மதுபான பிரியர்கள் சாலையிலேயே நின்று மது அருந்துவதோடு, ஒருவருக்கொருவர் சாவுகாசமாக பேசிக்கொண்டு வாக்குவாதத்திலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    சென்னை எழில் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடை எண் -7, அங்கு பார் வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. மதுபான பிரியர்கள் சாலையிலேயே நின்று மது அருந்துவதோடு, ஒருவருக்கொருவர் சாவுகாசமாக பேசிக்கொண்டு வாக்குவாதத்திலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வழக்கமாக ஆட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி, இன்று (23) நடைபெற்ற சந்தைக்கு திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக ஆடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த சந்தையில் ஆடுகள் குறைந்தபட்சம் ₹2,000 முதல் அதிகபட்சமாக ₹25,000 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நிம்மியம்பட்டு ஆட்டுச்சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்குக் குவிந்தன.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வழக்கமாக ஆட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி, இன்று (23) நடைபெற்ற சந்தைக்கு திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக ஆடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த சந்தையில் ஆடுகள் குறைந்தபட்சம் ₹2,000 முதல் அதிகபட்சமாக ₹25,000 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நிம்மியம்பட்டு ஆட்டுச்சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்குக் குவிந்தன.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    12 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. கல்வராயன் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் விஜயின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, பெரிய கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது மிக வேகமாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் பலர் இந்த காட்சிகளைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விழா கல்வராயன் மலைப் பகுதியில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. கல்வராயன் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் விஜயின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, பெரிய கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது மிக வேகமாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் பலர் இந்த காட்சிகளைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விழா கல்வராயன் மலைப் பகுதியில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சேலத்தில் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில், உறுதிமொழி உரையில் பிழை இருந்ததால், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வாசிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பின்னர், அந்தப் பிழையைத் திருத்தி, அனைவரும் மீண்டும் உறுதிமொழி ஏற்றனர்.
    1
    சேலத்தில் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில், உறுதிமொழி உரையில் பிழை இருந்ததால், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வாசிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பின்னர், அந்தப் பிழையைத் திருத்தி, அனைவரும் மீண்டும் உறுதிமொழி ஏற்றனர்.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.