logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக அர்ச்சனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 hr ago
user_P.G.m Paintings
P.G.m Paintings
திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
1 hr ago

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக அர்ச்சனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக அர்ச்சனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக அர்ச்சனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்களுக்கு ஏற்றம் தருமா அல்லது ஏமாற்றம் தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 18 அன்று அவர் வெளியிட்ட வீடியோவில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள், அரசு வாக்குறுதிகளைத் தள்ளுபடி செய்துவிடுமோ என்று கவலையுடன் இருப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
    1
    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்களுக்கு ஏற்றம் தருமா அல்லது ஏமாற்றம் தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 18 அன்று அவர் வெளியிட்ட வீடியோவில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள், அரசு வாக்குறுதிகளைத் தள்ளுபடி செய்துவிடுமோ என்று கவலையுடன் இருப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையப் பிரிவு வரையிலான சாலை, பாரதியார் பள்ளிக்குச் செல்லும் சாலை, மற்றும் ரெங்ககிருஷ்ணா பள்ளிக்குச் செல்லும் சாலைகள் நீண்ட நாட்களாக மோசமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. தற்போது இந்தச் சாலைகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இரவு நேரத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக, தரமற்ற முறையில் இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டால் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அமைக்கப்படும் புதிய சாலையை ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையப் பிரிவு வரையிலான சாலை, பாரதியார் பள்ளிக்குச் செல்லும் சாலை, மற்றும் ரெங்ககிருஷ்ணா பள்ளிக்குச் செல்லும் சாலைகள் நீண்ட நாட்களாக மோசமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

தற்போது இந்தச் சாலைகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இரவு நேரத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக, தரமற்ற முறையில் இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டால் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அமைக்கப்படும் புதிய சாலையை ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டும் என வலியுறுத்தி தேக்கடியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை நீரை நம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 14,707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் பெரியாறு அணை நீரையே சார்ந்துள்ளன. இந்த நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், தண்ணீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய பருவமழை ஏமாற்றி வருவதால், முதல் போகத்திற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.55 அடியாக உள்ளது. இதன் காரணமாக, தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் ஷட்டர் பகுதியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து மழை வேண்டி மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். அங்குள்ள ஜெயதுர்க்கை கோவிலில் இந்து மதத்தினர் வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து, பூஜை செய்யப்பட்ட கலச நீரை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரும் தேக்கடியிலுள்ள ஷட்டர் பகுதியில் பெரியாற்று நீரில் கலந்தனர். இதேபோல், கிறிஸ்தவ மதத்தினரும் இஸ்லாமிய மதத்தினரும் ஷட்டர் அருகே தங்கள் முறைப்படி மழை வேண்டி பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் மும்மதக் குருமார்கள் கலந்து கொண்டனர்.
    1
    தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டும் என வலியுறுத்தி தேக்கடியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை நீரை நம்பி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள 14,707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் பெரியாறு அணை நீரையே சார்ந்துள்ளன. இந்த நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், தண்ணீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய பருவமழை ஏமாற்றி வருவதால், முதல் போகத்திற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.55 அடியாக உள்ளது.

இதன் காரணமாக, தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் ஷட்டர் பகுதியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் மேலூர் பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து மழை வேண்டி மும்மதப் பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். அங்குள்ள ஜெயதுர்க்கை கோவிலில் இந்து மதத்தினர் வருண பகவானுக்கு சிறப்பு பூஜை செய்து, பூஜை செய்யப்பட்ட கலச நீரை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வரும் தேக்கடியிலுள்ள ஷட்டர் பகுதியில் பெரியாற்று நீரில் கலந்தனர். இதேபோல், கிறிஸ்தவ மதத்தினரும் இஸ்லாமிய மதத்தினரும் ஷட்டர் அருகே தங்கள் முறைப்படி மழை வேண்டி பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் மும்மதக் குருமார்கள் கலந்து கொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகேயுள்ள நத்தம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 23ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை நான்கு வழிச்சாலையில் நத்தம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை போக்குவரத்து விதிகளின்படி, ஒரு சுங்கச்சாவடிக்கும் அடுத்த சுங்கச்சாவடிக்கும் இடையே 60 கி.மீ தூரம் இருக்க வேண்டும். ஆனால், மதுரை மாவட்டம் கப்பலூரில் இருந்து 48 கி.மீ தூரத்திலேயே இந்த இரண்டாவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அதிகாரிகள் வடுகப்பட்டியிலிருந்து ராஜபாளையம் வரையிலான சாலைக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பதாக கூறியுள்ள நிலையில், இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையே 35 கி.மீ மட்டுமே இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், அண்ணா தொழிற்சங்கம், தொமுச தொழிற்சங்கம், சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், முரம்பு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம், தென்காசி, நெல்லை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சட்ட விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை அகற்றி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுங்கச்சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
    1
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகேயுள்ள நத்தம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 23ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை நான்கு வழிச்சாலையில் நத்தம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை போக்குவரத்து விதிகளின்படி, ஒரு சுங்கச்சாவடிக்கும் அடுத்த சுங்கச்சாவடிக்கும் இடையே 60 கி.மீ தூரம் இருக்க வேண்டும். ஆனால், மதுரை மாவட்டம் கப்பலூரில் இருந்து 48 கி.மீ தூரத்திலேயே இந்த இரண்டாவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அதிகாரிகள் வடுகப்பட்டியிலிருந்து ராஜபாளையம் வரையிலான சாலைக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பதாக கூறியுள்ள நிலையில், இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையே 35 கி.மீ மட்டுமே இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், அண்ணா தொழிற்சங்கம், தொமுச தொழிற்சங்கம், சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், முரம்பு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம், தென்காசி, நெல்லை மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சட்ட விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை அகற்றி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுங்கச்சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    8 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சியில் உள்ள கதிர் நாயக்கன்பட்டி செம்பட்டி – வத்தலகுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை எண் 3313-ஐ மூடக் கோரி பொதுமக்கள் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சியில் உள்ள கதிர் நாயக்கன்பட்டி செம்பட்டி – வத்தலகுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை எண் 3313-ஐ மூடக் கோரி பொதுமக்கள் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • மதுரை அருகே கப்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணெய் சேமிப்பு கிடங்கிற்குப் பின்புறம் இருந்த காலி இடத்தில் இன்று (ஜூன் 17) திடீரென குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இந்த தீவிபத்தின்போது, கன்னியாகுமரி நோக்கிச் சென்ற ரயில் ஒன்று அப்பகுதியைக் கடந்து சென்றதால், ரயிலில் பயணித்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் தாமதமாக வந்ததாகவும், அதற்குள்ளாகவே தீ தானாக அணைந்துவிட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். நல்லவேளையாக, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    1
    மதுரை அருகே கப்பலூர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணெய் சேமிப்பு கிடங்கிற்குப் பின்புறம் இருந்த காலி இடத்தில் இன்று (ஜூன் 17) திடீரென குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

இந்த தீவிபத்தின்போது, கன்னியாகுமரி நோக்கிச் சென்ற ரயில் ஒன்று அப்பகுதியைக் கடந்து சென்றதால், ரயிலில் பயணித்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் தாமதமாக வந்ததாகவும், அதற்குள்ளாகவே தீ தானாக அணைந்துவிட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். நல்லவேளையாக, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.