Shuru
Apke Nagar Ki App…
புல்வயல் அரசுப்பள்ளியில் கண் கண்ணாடி வழங்கல் புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கண்ணொளி திட்டத்தில் கீழ் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார். இதில் கண்ணொளித்திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு பார்வை குறைபாடு கண்டறியப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரம்பூர் ஆரம்ப சுகாதார கண் மருத்துவ உதவியாளர் கருப்பையா கண் கண்ணாடிகளை வழங்கினார் இதில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Batcha
புல்வயல் அரசுப்பள்ளியில் கண் கண்ணாடி வழங்கல் புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கண்ணொளி திட்டத்தில் கீழ் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார். இதில் கண்ணொளித்திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு பார்வை குறைபாடு கண்டறியப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரம்பூர் ஆரம்ப சுகாதார கண் மருத்துவ உதவியாளர் கருப்பையா கண் கண்ணாடிகளை வழங்கினார் இதில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல் அனைத்தனர். அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து திடிரென தீ பிடித்தது. இதில் மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது1
- இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா2
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.1
- *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை1
- சுப்பராபட்டி கிராமம்1