logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோவை மாணவி பாலியல் கொடுமை — தூத்துக்குடியில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை கண்டித்து, தமிழகமெங்கும் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியினர் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பாக, தமிழ்ச்சாலையில் உள்ள விவிடி சிக்னல் அருகில் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்கள் எழுப்பினர். மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் தேன்மொழி பேசுகையில், “இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மது, போதைப்பொருள் போன்றவற்றில் சிக்கிக்கொள்வதால்தான் இத்தகைய அருவருப்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் பழக்கவழக்கங்களை விட்டு விலகி, நல்ல குடிமக்களாக உருவாக வேண்டும். சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் தடுக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தக்ஷனா, மகளிர் அணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், வடக்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் ஜமுனா, பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன், வாரியார் முத்துராமலிங்கம், மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் விவேகம், ரமேஷ், ராஜா, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

on 6 November
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukudi, Tamil Nadu•
on 6 November

கோவை மாணவி பாலியல் கொடுமை — தூத்துக்குடியில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை கண்டித்து, தமிழகமெங்கும் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணியினர் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பாக, தமிழ்ச்சாலையில் உள்ள விவிடி சிக்னல் அருகில் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்கள் எழுப்பினர். மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் தேன்மொழி பேசுகையில், “இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மது, போதைப்பொருள் போன்றவற்றில் சிக்கிக்கொள்வதால்தான் இத்தகைய அருவருப்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கும் பழக்கவழக்கங்களை விட்டு விலகி, நல்ல குடிமக்களாக உருவாக வேண்டும். சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் தடுக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தக்ஷனா, மகளிர் அணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், வடக்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் ஜமுனா, பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் சிவராமன், வாரியார் முத்துராமலிங்கம், மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் விவேகம், ரமேஷ், ராஜா, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • user_Senthur Pandian
    Senthur Pandian
    Ottapidaram, Tuticorin
    சசிகலாபுஷ்வாவைகானும். இந்தடீமைஅப்படியேமணிபூர்அனப்பலாம
    on 12 November
  • user_Mariye valga travels NAGARAJ
    Mariye valga travels NAGARAJ
    Vedasandur, Dindigul
    👏
    on 9 November
  • user_Muthu Bhuvan
    Muthu Bhuvan
    Gobichettipalayam, Erode
    🙏
    on 8 November
  • user_User10774
    User10774
    Kumbakonam, Thanjavur
    💣
    on 7 November
  • user_User8400
    User8400
    Palakkodu, Dharmapuri
    😤
    on 7 November
More news from தமிழ்நாடு and nearby areas
  • பாஜக இணையதளத்தில் திமுக பற்றி விமர்சனம் வீடியோ மூன்றாவதாக
    1
    பாஜக இணையதளத்தில் திமுக பற்றி விமர்சனம் வீடியோ மூன்றாவதாக
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தூத்துக்குடி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் பேச்சு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் களம் இறக்கப்பட்டுள்ளார் இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் கூறும் பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர் இதுவரை தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் நான்காவது பைப் லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வந்தது அதிமுக காலத்தில் அதே போன்று திருச்செந்தூர் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அமைத்தது தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஆனால் தற்பொழுது திமுக விண்கார்ந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் உதயநிதி சபரீசன் உள்ளிட்டவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்த வருகின்றனர் அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் நேதாஜிவன் மேயர் ஜெகன், கனிமொழி அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்து வரு என்றனர் என்ற அவர் மத்தியில் உள்ள பிஜேபி அரசு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சாலை வசதிகள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது தொழிற்சாலைகள் பெரியதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தியுள்ளது ஆனால் இதில் எதையுமே செய்யாத திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக கூறி வருகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தெருவோரங்களில் வட இந்தியர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளதை கடுமையாக சாடிய அவர் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைந்தத பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உறுதி கூறினார்
    1
    தூத்துக்குடி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் பேச்சு
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் களம் இறக்கப்பட்டுள்ளார் இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் கூறும் பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர் இதுவரை தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் நான்காவது பைப் லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வந்தது அதிமுக காலத்தில் அதே போன்று திருச்செந்தூர் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அமைத்தது தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஆனால் தற்பொழுது திமுக விண்கார்ந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் உதயநிதி சபரீசன் உள்ளிட்டவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்த வருகின்றனர் அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் நேதாஜிவன் மேயர் ஜெகன், கனிமொழி அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்து வரு என்றனர் என்ற அவர் மத்தியில் உள்ள பிஜேபி அரசு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சாலை வசதிகள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது தொழிற்சாலைகள் பெரியதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தியுள்ளது ஆனால் இதில் எதையுமே செய்யாத திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக கூறி வருகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தெருவோரங்களில் வட இந்தியர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளதை கடுமையாக சாடிய அவர் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைந்தத பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உறுதி கூறினார்
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 min ago
  • கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    4
    கயத்தாறு யூனியனைச் சேர்ந்த  செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை முன்பாக இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் தருகின்றன. இவை சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று சண்டையை இடுவதால் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை முன்பாக இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் தருகின்றன. இவை சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று சண்டையை இடுவதால்  இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    2
    வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    user_SATHISHKUMAR SK
    SATHISHKUMAR SK
    Video editing service சங்கரன்கோவில், தென்காசி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்
    1
    தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ
    1
    இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.