உடன்குடி அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை இரண்டு சிறுவர்கள் கொண்ட மூன்று பேர் கைது ஏப்.01- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சாத்தர்கோன் விளையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த 3பேர் கொண்ட கும்பல் வேல்முருகனை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலசேகரப்பட்டணம் காவல் நிலையப் போலீசார், வேலமுருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சாத்தரகோன விளை சிவன் மகன் கோவிந்தன் (22) மற்றும் 2 சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து உடன்குடி பஜார் சாலையில் நடந்த கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
உடன்குடி அருகே பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை இரண்டு சிறுவர்கள் கொண்ட மூன்று பேர் கைது ஏப்.01- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சாத்தர்கோன் விளையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த 3பேர் கொண்ட கும்பல் வேல்முருகனை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலசேகரப்பட்டணம் காவல் நிலையப் போலீசார், வேலமுருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சாத்தரகோன விளை சிவன் மகன் கோவிந்தன் (22) மற்றும் 2 சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து உடன்குடி பஜார் சாலையில் நடந்த கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
- Post by மா.கணேஷ்1
- பாஜக இணையதளத்தில் திமுக பற்றி விமர்சனம் வீடியோ மூன்றாவதாக1
- தூத்துக்குடி: அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரப்படும் தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி த செல்லப்பாண்டியன் பேச்சு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குபதிவு வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக சி.த. செல்லப்பாண்டியன் களம் இறக்கப்பட்டுள்ளார் இன்று தூத்துக்குடி மூன்றாவது மயில் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அவர் கூறும் பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர் இதுவரை தூத்துக்குடி தொகுதியை முன்னேற்றுவதற்கு எதுவும் செய்யவில்லை அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் நான்காவது பைப் லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வந்தது அதிமுக காலத்தில் அதே போன்று திருச்செந்தூர் செல்வதற்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய வழித்தடங்களுக்கான திட்டங்களை அமைத்தது தான் அமைச்சராக இருந்த காலத்தில் ஆனால் தற்பொழுது திமுக விண்கார்ந்த திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகின்றனர் முதல்வர் மு க ஸ்டாலின் உதயநிதி சபரீசன் உள்ளிட்டவர்கள் கொள்ளை கொள்ளையாக சம்பாதித்த வருகின்றனர் அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் நேதாஜிவன் மேயர் ஜெகன், கனிமொழி அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்து வரு என்றனர் என்ற அவர் மத்தியில் உள்ள பிஜேபி அரசு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு சாலை வசதிகள் பிரிவு படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ளது தொழிற்சாலைகள் பெரியதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தியுள்ளது ஆனால் இதில் எதையுமே செய்யாத திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தான் செய்ததாக கூறி வருகிறது என்று குற்றம் சாட்டினார் மேலும் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தெருவோரங்களில் வட இந்தியர்களுக்கு கடைகள் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி கொடுத்துள்ளதை கடுமையாக சாடிய அவர் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைந்தத பின்னர் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வருவோம் என்று உறுதி கூறினார்1
- கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சாலையில் தனியார் மருத்துவமனை முன்பாக இரவு நேரங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் தருகின்றன. இவை சாலையின் நடுவே ஒன்றோடு ஒன்று சண்டையை இடுவதால் இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கால்நடைகளை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்2
- தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்1
- Post by மா.கணேஷ்1