logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகோஜன அள்ளி புதிய பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா. தே.மதியழகன் எம்.எல்.ஏ, திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜன அள்ளியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். அதணைத் தொடர்ந்து வேலம்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்தார். முன்னதாக நாகோஜன அள்ளியில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், பேருராட்சி துணைத் தலைவர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள், பர்கூர் சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, பழனியம்மாள், காஞ்சனா, அம்பிகா, ரமணி, சுமித்ரா, விஜயலட்சுமி, கடல் வேந்தன், ரமேஷ், சுமித்ரா, கிருஷ்ணன், பிரியதர்ஷினி, மயில்வாகனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இளங்கோ, ரவிக்குமார், வனிதா உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

12 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
12 hrs ago

நாகோஜன அள்ளி புதிய பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா. தே.மதியழகன் எம்.எல்.ஏ, திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜன அள்ளியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். அதணைத் தொடர்ந்து வேலம்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்தார். முன்னதாக நாகோஜன அள்ளியில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், பேருராட்சி துணைத் தலைவர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள், பர்கூர் சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, பழனியம்மாள், காஞ்சனா, அம்பிகா, ரமணி, சுமித்ரா, விஜயலட்சுமி, கடல் வேந்தன், ரமேஷ், சுமித்ரா, கிருஷ்ணன், பிரியதர்ஷினி, மயில்வாகனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இளங்கோ, ரவிக்குமார், வனிதா உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்.போராட்டம் நடைபெற்றது
    1
    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்.போராட்டம் நடைபெற்றது
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கலசபாடி மலை கிராமத்திற்கு முதன்முறையாக மினி பேருந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகிழ்ச்சியில் திகைத்த மலைவாழ் மக்கள். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடி. அரசநத்தம். நைனாவளைவு. புளியமரத்து வளைவு. கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி. ஆகிய மலை கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று 78 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு வேலாண்மைதுறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தார்சாலையை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து இன்று அரூர் முதல் கலசப்பாடி மலைகிராமம் வரை போக்குவருத்துக்காக இரண்டு சிற்றுந்துகளை (மினி பேருந்து) மாவட்ட ஆட்சியர் சதிஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் சிற்றுந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிற்றுந்துகளில் கலசப்பாடி மலையடிவாரத்தின் சாலை தொடக்கத்தில் இருந்து கலசப்பாடி மலை கிராமம் வரை பேருந்தில் பயணித்தினர். கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்ததால் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் முதன் முறையாக தங்கள் கிராமங்களுக்கு சிற்றுந்துகளில் பயனித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கலசபாடி மலை கிராமத்திற்கு முதன்முறையாக மினி பேருந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகிழ்ச்சியில் திகைத்த மலைவாழ்  மக்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட  கலசப்பாடி. அரசநத்தம். நைனாவளைவு. புளியமரத்து வளைவு. கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு,  ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி. ஆகிய மலை கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று 78 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு வேலாண்மைதுறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தார்சாலையை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து இன்று அரூர் முதல் கலசப்பாடி மலைகிராமம் வரை போக்குவருத்துக்காக இரண்டு சிற்றுந்துகளை (மினி பேருந்து) மாவட்ட ஆட்சியர் சதிஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் சிற்றுந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிற்றுந்துகளில்  கலசப்பாடி மலையடிவாரத்தின் சாலை தொடக்கத்தில் இருந்து கலசப்பாடி மலை கிராமம் வரை பேருந்தில் பயணித்தினர்.
கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்ததால் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் முதன் முறையாக தங்கள் கிராமங்களுக்கு சிற்றுந்துகளில் பயனித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழகம் முழுவதும் 42000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும்  மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. 25ம் தேதிபுதன்கிழமை முதல் மாவட்டத் தலைநகர்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில்  9 வது நாளான . இன்று மாவட்ட தலைவர் துரைவேல் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்
    1
    தமிழகம் முழுவதும் 42000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும்  மாநிலம் தழுவிய
காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது.
25ம் தேதிபுதன்கிழமை முதல்
மாவட்டத் தலைநகர்களில்
தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில்  9 வது நாளான . இன்று மாவட்ட தலைவர் துரைவேல் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    19 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மூட்டைகள் சேலைகள் மட்டன் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம்  காமாட்சி அம்மன் சன்னதி  பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு , நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சேலைகள் ,அரிசி மூட்டைகள் மற்றும் பல்வேறு வகையான அன்னதானங்கள் வழங்கினார். __________ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  காஞ்சிபுரம்  மாநகர 6 வது வட்ட கழக செயலாளர் வி.முருகன் அவர்கள் ஏற்பாட்டில் ,  மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் தலைமையில் ,  காஞ்சிபுரம்  காமாட்சி அம்மன் சன்னதி 6 வது வார்டு பகுதியில்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம்  அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்  அரிசி மூட்டைகள், சேலைகள்  மற்றும் சுமார் 500 நபர்களுக்கு, இடியாப்பம், இட்லி , மட்டன் ,சிக்கன் உள்ளிட்ட உணவு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பாஸ்கர் , அம்மா பேரவை வட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மூட்டைகள் சேலைகள் மட்டன் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்  காமாட்சி அம்மன் சன்னதி  பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு , நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சேலைகள் ,அரிசி மூட்டைகள் மற்றும் பல்வேறு வகையான அன்னதானங்கள் வழங்கினார்.
__________
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 
காஞ்சிபுரம்  மாநகர 6 வது வட்ட கழக செயலாளர் வி.முருகன் அவர்கள் ஏற்பாட்டில் , 
மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் தலைமையில் , 
காஞ்சிபுரம்  காமாட்சி அம்மன் சன்னதி 6 வது வார்டு பகுதியில்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம்  அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்  அரிசி மூட்டைகள், சேலைகள்  மற்றும் சுமார் 500 நபர்களுக்கு, இடியாப்பம், இட்லி , மட்டன் ,சிக்கன் உள்ளிட்ட உணவு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பாஸ்கர் , அம்மா பேரவை வட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    1
    குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். 
அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா,  நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    17 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் கொளகத்தூர் பே மாரியப்பன் கோவில் கொட்டாய் 120 ஆம் ஆண்டு ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பெரியாண்டவர் திருவிழா 15 ஊர் பங்காளிகள் கலந்துகொண்டு  துரைசாமி, நடேசன், பெரியசாமி, குஞ்சி கவுண்டர்,நாகப்பன் முன்னாள் தலைவர்கள் தெய்வ திருவாளர்கள் வழிகாட்டுதலின்படி கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதல், கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று ஆரவள்ளி சூரவள்ளி நாடகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை பெரிய ஆண்டவர் பூஜை நடைபெற்றது காலை 7:00 மணி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். கணேசன் தர்மகர்த்தா, சாம்ராஜ், மோகன் ஹாலோபிரிக்ஸ், நாகப்ப கவுண்டர் உதவி தர்மகர்த்தா, பழனி, மாதையன் ஊர் கவுண்டர்  மற்றும் 15 ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் கொளகத்தூர் பே மாரியப்பன் கோவில் கொட்டாய் 120 ஆம் ஆண்டு ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பெரியாண்டவர் திருவிழா 15 ஊர் பங்காளிகள் கலந்துகொண்டு  துரைசாமி, நடேசன், பெரியசாமி, குஞ்சி கவுண்டர்,நாகப்பன் முன்னாள் தலைவர்கள் தெய்வ திருவாளர்கள் வழிகாட்டுதலின்படி கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதல், கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று ஆரவள்ளி சூரவள்ளி நாடகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை பெரிய ஆண்டவர் பூஜை நடைபெற்றது காலை 7:00 மணி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். கணேசன் தர்மகர்த்தா, சாம்ராஜ், மோகன் ஹாலோபிரிக்ஸ், நாகப்ப கவுண்டர் உதவி தர்மகர்த்தா, பழனி, மாதையன் ஊர் கவுண்டர்  மற்றும் 15 ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    20 hrs ago
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு தர்மபுரி மாவட்டத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ குற்றச்சாட்டு தர்மபுரி நகரில் நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் அதிமுகவினரை திமுகவினர் தாக்கியது அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அனுமதிக்கப்பட்டனர் இவர்களை இன்று அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார் தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நியூஸ் தமிழ் தேர்தல் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் பேரில் கலந்து கொண்டேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடி ஆகிய மூன்று பேரும் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தின் முழு வளர்ச்சி என்பது தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும் ஐந்தாண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்று வாக்குவாதம் நடந்தபோது திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினராக மணி விவாதித்து பங்கேற்று பேசும்போது அவர்கள் பேசுவதை கவனித்து உள்வாங்கி அதற்கு பதிலுரை கொடுக்க நினைத்தபோது அந்த பதில் சொல்லும் போது நான் சொல்லுவதை வரிக்கு வரி சொல்ல விடாமல் தடுத்து அந்த நிகழ்ச்சி நடைபெற கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு அந்தக் கூட்டத்தை கலைத்து விட்டார்கள். தர்மபுரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக ஒரு சிலவற்றை கோடிடாடு காட்ட விரும்புகின்றேன். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினராக மணி கலந்துகொண்டு விவாதத்தில் பேசும் பொழுது சட்டியில் இருந்தால் தான் அளப்பியில் வரும் என்பதைப் போல சட்டியில் ஒண்ணுமே இல்ல ஐந்தாண்டு காலம் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழக அரசு எதுவுமே செய்யவில்லை. அதனால்தான் விவாதத்தில் அவர்களால் எதையுமே சொல்ல முடியவில்லை. எனக்கு விவாதத்தில் வாய்ப்பு கொடுத்த நேரத்தில் சொல்லி யபோது. புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் நமது தர்மபுரி மாவட்டத்திற்கு செய்த நல்ல திட்டங்களை கோடிட்டு காட்டினேன் அப்போது. இன்று டிகிரி படித்து முடித்த மாணவ மாணவியர் தருமபுரி மாவட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பின்பு அவர்கள் முதுநிலை பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னால் சேலத்திற்கு செல்ல வேண்டும் எவ்வாறு செல்ல மாவட்டம் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானது எடுத்து புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களிடமோ கோரிக்கை வைத்ததின் பேரில் பெரியார் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சி மையம் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தற்பொழுது அங்கு மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர் இது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் களையில் மாபெரும் சாதனையாகும். அதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 10 கோடி ரூபாயில் கற்றும் கட்டப்பட்டு ஒதுக்கியவர்பு ரசித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள். அதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பதற்கு வசதியாக உள்ளது. அதேபோல அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் செய்த வளர்ச்சி திட்ட பணிகளை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதியமான் கோட்டம் நான் அமைச்சராக இருந்த பொழுது நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதற்கு நிதியை ஒதுக்கி தந்து இந்தக் கட்டடப் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணி முடிந்த பிறகு அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் திமுகவினர். அதேபோன்று தர்மபுரி அரசு மறுத்துக் கல்லூரி மருத்துவமனையில் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தந்து கட்டடம் திருவிழா காண போது அதற்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டினார்கள் ஆக அதிமுக ஆட்சியில் எதுவெல்லாம் கொண்டுவந்து நல்ல திட்டங்கள் செய்யப்பட்டதோ அதற்கு திமுக ஒட்டினார் கள். இதேபோன்று பெண்ணாகரம் சட்டமன்ற தொகுதியில் ஏரியூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கழக ஆட்சியில் கட்டப்பட்டது அதற்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டினர். இதேபோன்று பெண்ணாகரம் பேருந்து நிலையம் எடப்பாடி யார் நிதி ஒதுக்கி கட்டப்பட்டது அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியது திமுக. அதேபோன்று பாப்பாரப்பட்டி பேரூராட்சி புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கழக ஆட்சியில் திறக்கப்பட்டது. இவ்வாறு தர்மபுரி மாவட்டத்தில் பல வளர்ச்சிப் பணிகளை தொலைநோக்கு பார்வையுடன் செய்து கொடுத்தது புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சி காலத்தில் புரட்சித் தமிழர் எடப்பாடி அவர்கள். பென்னாகரம் தொகுதியில் மத்தளப் பள்ளம் ஏரிய அணை கட்ட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதயதையும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருக்கும் பொழுது 14 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி மத்தள பள்ளம் ஒரு அணை கட்டப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதி மக்கள் தர்மபுரி மாவட்டத்திற்கு வர 50 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டும் சாலையை சப்பனிட வேண்டுமென்று கோரிக்கை எடுத்து உடன் ஊட்டமலை வழியாக சாலை அமைக்க நிதி ஒதுக்கி தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டம் இணைக்கப்பட்டது புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான். அதனுடைய தொடர்ச்சியாக கே. ரெட்டிலிலிருந்து பென்னாகரம் வரவேண்டும் என்றால் 24 கிலோமீட்டர் எந்த வழியாக சென்று வந்தாலும் 60 கிலோ மீட்டருக்கு மேல் ஆகும். எதற்காக 8.15 கோடி நிதிபதிக்கு வனத்துறை வழியாக போடுர் வந்து சேர்கிறது தற்பொழுது அந்த சாலை பழுதாகி உள்ளது அந்த சாவியை புதுப்பிக்க வராமத்து செய்ய வக்கில்லாதவர்கள் திமுகவினர் அதேபோன்று ஏரியூர் எமனூர் அருகே சாலை அமைக்க இணைப்பதற்காக சட்டமன்றத்தில் மு க ஸ்டாலின் அறிவித்தார் 150 கோடியில் பாலம் கட்டப்படும் என்று ஆகிவிட்டதா ஆனால் இதுவரை அது கட்டப்படவில்லை கிடப்பில் போடப்பட்டது. இதை விவாதத்திற்கு கூறினால் அவர்களுக்கு கோபம் வருகிறது. பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் சும்மா ஒரு பகுதி மட்டும் தான் நான் உங்களுக்கு கூறியுள்ளேன். தர்மபுரியில் ஒரு இடத்தில் அடுக்கு மோடி குடியிருப்பு பென்னாகரம் காரிமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இதே போன்று அரூரில் இரண்டு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு பாப்பிரெட்டிப்பட்டியில் மூன்று இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முழுமையான நிதி ஒதுக்கி தந்தவர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள். இது மக்கள் பயன்பாட்டிற்கு வேண்டும் என்பதற்காக இந்த நல்ல திட்டங்கள் செய்யப்பட்டது. பாப்பாரப்பட்டி பகுதி எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பகுதி விவசாய மக்கள் பயன் பெறு வேண்டும் என்பதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விவசாய பெருங்குடி மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக குளிர் பதன கிடங்கு வசதி செய்து , இதேபோன்று பாலக்கோட்டில் தக்காளி 20 கோடி ரூபாய் மதிப்பில் தக்காளி குளிர் பதன கிடங்கு 18 புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் நிதி ஒதுக்கி கட்டப்பட்டது. ஏசி மாட்டின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் அதற்குள் ஆட்சி மாற்றம் வந்தது ஆனால் அதை கூட திமுகவினர் ஏசி மாட்டி மக்கள் கொடுக்க வக்கில்லாதவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீர் மேலாண்மை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது புரட்சித்தமிழர் எடப்பாடி யார் ஆட்சிக்காலத்தில். நீர் மேலாண்மை திட்டத்தில் அலியாளம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டியருக்கு தண்ணீர் கொண்டு வருவது அந்த தூள் சிட்டி ஏரியில் தான் இந்நாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கட்டிவைத்து புகார் மனுக்களைப் பற்றி நான் ஆட்சிக்கு வந்தவுடன் தண்ணீர் கொண்டு வந்து விடுவேன் என்று கூறினார். 13 2 2021 இல் இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டது நிலம் கையகப்படுத்த சட்டமும் போடப்பட்டு விட்டது. ஜெருதல கால்வாய் 5000 மீட்டரில் இருந்து புலிகளை ஏரி வரை , 16 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது இதேபோன்று என்னைக் கல் புதூரில் இருந்து தும்மல் அல்லி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் நீர் மேலாண்மை திட்டங்கள். இது அனைத்தும் டெண்டர் விடப்பட்ட பணிகள் இதைக் கூட ஐந்தாண்டு காலத்தில் செய்ய வக்கில்லாத தால தான் திமுகவிற்கு கோபம் வருகிறது. டெண்டர் பணிகள் 16 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும். இது ஏன் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு கோவம் வருகிறது திண்டல் ஏரி திட்டத்தில் பதிவேட்டில் 34 ஏரிகள் என இருக்கும் எதைப் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார். தொடர்ச்சியாக பாலக்கோட்டில் கொண்ட சாமானல்லி வரை அங்கே பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீர் திட்டம் அந்த உபரி நீரானது மாரண்டஅள்ளி அணைக்கட்டுக்கு வந்து அங்கிருந்து செங்கல் பஸ் தாவ் ஏரிக்கு செல்கிறது. சிங்கிள் பஸ்த்தாவில் இருந்து. அங்கிருந்து ஜெர்தலாவ் கடகத்தூர் உள்ளிட்ட பல ஏரிகளுக்கு செல்லும். ஜெருதலவ் 5600 மீட்டரில் பாப்பாரப்பட்டிக்கு செல்லும திட்டம். பஞ்சப்பள்ளி அணையில் இருந்து போதிய நீர் செங்கல் பஸ்த்தாவிற்கு அன்றைய காலகட்டத்தில் தண்ணீர் வரவில்லை என்ற தால், புதிதாக ஒரு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று 2016ல் தான் மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கை வைத்த பிறகு தான் அது வேகமாக நடைபெற்றது. அதை வேகமாக செயல்படுத்திய காரணத்தினால் தான் 2021 இல் அது டெண்டர் விடப்பட்டது. ஒரு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். அதன் பிறகு ஒரு ஏரி தான் தூள் செட்டி தண்ணீர் வரவேண்டும். அதை செயல்படுத்த திமுகவினர் செயல்படுத்தவில்லை. நீர் மேலாண்மை திட்டம் எடுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது புரட்சித்தலைவி அம்மா புரட்சித் தமிழர் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் தான். கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாவில் இருந்து உபரிநீர் கொண்டு வந்து கேசகுளி அல்ல அணையில் விட்டு மற்ற ஏரிகளுக்கும் நீர் பாசனத்திற்கும் வழிபாடு செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்திற்காக கழக அரசு அதிக அளவு செய்துள்ளது. அதை விவாதத்தில் எடுத்துச் சொல்வதற்கு திமுகவினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதோடு மட்டுமல்ல குமரன் அணைக்கட்டு நாலு கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அந்த அணைக்கட்டு பூஜை போடப்பட்டது. சட்டமன்றத்தில் 10 சதவீதம் முடிந்து விட்டது. 20% முடிந்துவிட்டது என மாணவி கோரிக்கையின் போது பொதுப்பணி துறையினரால் பதில் வந்து கொண்டிருக்கும் ஆனால் அந்த வேலை கிடைத்தல் போடப்பட்டுள்ளது இன்னும் அந்த வேலை செய்யப்படவில்லை. நீர் மேலாண்மை திட்டத்தை பற்றி பேசுவதற்கு திமுகவினருக்கு அருகதை கிடையாது. ஆகவே அதனால் தான் விவாதத்தில் கழகத்தின் சார்பில் பேச சென்ற எண்ணெய் பேச விடாமல் தடுத்தனர். கக்கன் அவர்கள் மந்திரியாக இருந்த காலகட்டத்தில் நல்லம்பள்ளி பகுதியில் மாரியம்மன் கோவில் பள்ள ம் ஒரு தடுப்பணை பழுதாகி இருந்தது தடுப்பணையை கட்டினால் ஏழு ஏரிக்கு தண்ணீர் செல்லும் என்று கூறினார்கள். இதுகுறித்து உடனடியாக புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் அதன் பிறகு அது அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததின் பெயரில் அந்த அணை சீர் செய்யப்பட்டு தற்போது விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். நீ மேலாண்மை திட்டத்தைப் பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் தான் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டி இல் அமைந்துள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் கட்டியதும் கழக ஆட்சியில் தான். கட்டியது அனைத்தும் கடக ராசி ஆனால் திறப்பு விழாக்கள் வைத்தது ஸ்டிக்கர் ஒட்டுனது திமுக. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இட நெருக்கடி காரணமாக அங்கு இயங்கிய மருத்துவமனையை பள்ளிக்கு மாற்றி கொடுத்தது புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கொடுமையாக கட்டி முடிக்கப்பட்டது கழக ஆட்சி. பென்னாகரம் பாலக்கோடு காரிமங்கலம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி கூடுதலாக என்னென்ன நீதிமன்றங்கள் தேவை என்று கூறினார்களோ அத்தனைக்கும் அனுமதி கொடுத்தவர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள். அதற்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது கழகஅரசு. நீதிபதிகளுக்கு குடியிருப்பு வகைகள் வேண்டும் என்று கேட்டவுடன் அதற்கும் விதி ஒதுக்கி கட்டிக் கொடுக்கப்பட்டது நான்கு மாவட்டங்கள் சேர்ந்ததுமண்டல கல்லூரி இணை இயக்குனர் அலுவலகம் ஒதுக்கீடு செய்து அதற்குண்டான இடத்தை தேர்வு செய்து கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்தது கழக அரசு. அதேபோன்று புதிய மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் ஓசூருக்கு சென்று கொண்டிருந்த தர்மபுரி மக்களுக்கு தர்மபுரியில் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. அதேபோன்று ஆவின் அலுவலகம், இப்படி பல்வேறு வகையில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு கழக அரசு கொடுத்தது. கல்வி மாவட்டம் தர்மபுரி மட்டுமே இருந்தது இதை அரூர் கல்வி மாவட்டமாகவும், பாலக்கோடு கல்வி மாவட்டம் என இரண்டு கல்வி மாவட்டம் ஒரே ஆண்டில் கொடுக்கப்பட்டது ஆனால் பாலகோடு கல்வி மாவட்டத்தில் காலி செய்தது திமுக அரசு. தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழக வளர்ச்சிக்கு கடந்த நான்கரை ஆண்ட காலம் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள் உழைத்திருக்கிறார். டிப்ளமோ ஆர்ட்டிகல்ச்சர் மற்றும் டிப்ளமோ அக்ரிகல்சர் தர்மபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. 2021 22 இல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு போடப்பட்டது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அந்தக் கல்லூரிக்கு 38.4 எக்டேர்.95 ஏக்கர். அதற்கு வழி ஏற்படுத்த இரண்டு ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த மாணவர் சேர்க்கையில் கூட அரசியல் செய்து விட்டார்கள். தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதியிலும் திமுக இல்லை ஆகவே இவர்களுக்கு எதற்கு கல்லூரி வழங்க வேண்டும் அப்படி என்ற எண்ணத்தில் கல்லூரியை கேன்சல் செய்து விட்டனர். பெரியாம்பட்டி திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்டது மண்டல அலுவலகத்திற்கு அதுக்கு 4.15 கோடி ரூபாய் ஒதுக்கி தொந்தரவு விடப்பட்டது அந்த பணியில் நடைபெறும் போது அந்த ஒப்பந்ததாரரை மிரட்டி அதை கேன்சல் செய்துவிட்டனர். இப்படி தருமபுரி மாவட்டத்திற்கு வரவேண்டிய பல நல்ல திட்டங்களை தடுத்தது திமுகவினர். போலீசாருக்கு தடய அறிவியல் ஆய்வகம் கொண்டு வந்தது. வத்தல்மலை மக்கள் பயன்பெறும் நோக்கில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 18.50 கோடி, சாலை அமைக்கப்பட்டது அது பழுதான பிறகு 10 கோடி ஒதுக்கி அதை சரி செய்யப்பட்டது அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் வத்தல் மலைக்கு மட்டும் ஒரு மேல்நிலைப் பள்ளியை வழங்கியது.பு ரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள், இதேபோன்று ஊட்டமலை, புள்ளி விவரங்களோடு பள்ளிகள் திறக்கப்பட்டது விவாதத்தில் கூறும் போது திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவருடைய திமுக ஆட்சி காலத்தில் 2022ல் ஒரே ஒரு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒரே ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. வேறு எதுவுமே கிடையாது. திமுகவினர் எவ்வாறு கல்வியில் புரட்சி செய்ய முடியும். சித்தேரி மலை மண்ணூரில் இருந்து 11 கிலோமீட்டர் சாலை அமைத்தது புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் . சித்தேரி முதல் நொச்சி குட்டைக்கு சாலை அமைத்தது.மல்லூரில் கோவிந்தன் காடு அம்மா பாளையத்தில் இருந்து 29 கோடி ரூபாய் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட்டது. இன்று கலசப்பாடிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள். வன உரிமை சட்டப்படி சாலை போட உரிமையில்லை கலசப்பாடி சாலை அமைக்க அனைத்து கொடுத்தது அதிமுக அரசு. வனத்துறை எடுக்கப்பட்ட நிலத்தை கம்மம்பட்டி அருகே 1:2 எந்த கணக்கு நாம் கொடுக்கப்பட்டுள்ளோம். ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி 310 கோடி மதிப்பில் திட்டம் ஒதுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது திமுக வந்து நான் அதைக் கிடப்பில் போட்டு விட்டன கிடப்பில் போடுவது விட்டார்கள் என்றாலே அவர்களுக்கு பிபி ஏறுது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது அன்றைய மதிப்பீடு ரூபாய் 101 கோடி. அதன் பிறகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் 640 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது அதன்பிறகு நான் அந்த துறையில் அமைச்சராக இருந்தபோது தர்மபுரி கிருஷ்ணகிரி ஆக இரண்டு மாவட்டத்திற்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1005 கொடி முன்மொழிவு அனுப்பப்பட்டது.1034 கோடியாக மாறியது. இந்த பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்ற புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். வனத்துறை ஏற்கனவே நமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அதன்படியாக இவர் திட்டத்தை நிறைவேற்ற முடியும் இதை நேற்று பேசும் பொழுது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வனத்துறை இடம் அனுமதி வாங்க முடியாது என்று கூறுகிறார் வனத்துறை இடம் அனுமதி வாங்க கால தாமதம் ஆனாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியோடு புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் 2026 முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுவதை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் தடுக்க முடியாது. 2026 இல் கழக ஆட்சி அமைந்த உடன் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும். ஒகேனக்கல் உபரணியர் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் நிறைவேற்றி தரும் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் முதலமைச்சராவது உறுதி. அவர் முதலமைச்சர் ஆனவுடன் இந்த உபரி நீர் திட்டம் நிறைவேற்றுப்படும். என தெரிவித்தார் உடன் மாநில விவசாய பிரிவு தலைவர் டி ஆர் அன்பழகன் ஓபிஎஸ் அணியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அரங்கநாதன் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பொன்வேல் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் பழனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
    1
    கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு தர்மபுரி மாவட்டத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ குற்றச்சாட்டு 
தர்மபுரி நகரில் நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் அதிமுகவினரை திமுகவினர் தாக்கியது அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அனுமதிக்கப்பட்டனர் இவர்களை இன்று அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார் தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் 
நியூஸ் தமிழ் தேர்தல் பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் பேரில் கலந்து கொண்டேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடி ஆகிய மூன்று பேரும் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தின் முழு வளர்ச்சி என்பது தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும்  ஐந்தாண்டு கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எந்தவித வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்று வாக்குவாதம் நடந்தபோது  திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினராக மணி விவாதித்து பங்கேற்று பேசும்போது அவர்கள் பேசுவதை கவனித்து உள்வாங்கி அதற்கு பதிலுரை கொடுக்க நினைத்தபோது  அந்த பதில் சொல்லும் போது நான் சொல்லுவதை வரிக்கு வரி சொல்ல விடாமல் தடுத்து  அந்த நிகழ்ச்சி நடைபெற கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு அந்தக் கூட்டத்தை கலைத்து விட்டார்கள். தர்மபுரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக ஒரு சிலவற்றை கோடிடாடு காட்ட விரும்புகின்றேன். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினராக மணி கலந்துகொண்டு விவாதத்தில் பேசும் பொழுது சட்டியில் இருந்தால் தான் அளப்பியில் வரும் என்பதைப் போல சட்டியில் ஒண்ணுமே இல்ல ஐந்தாண்டு காலம் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழக அரசு எதுவுமே செய்யவில்லை. அதனால்தான் விவாதத்தில் அவர்களால் எதையுமே சொல்ல முடியவில்லை. எனக்கு விவாதத்தில் வாய்ப்பு கொடுத்த நேரத்தில் சொல்லி யபோது. புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் நமது தர்மபுரி மாவட்டத்திற்கு செய்த நல்ல திட்டங்களை கோடிட்டு காட்டினேன் அப்போது. இன்று டிகிரி படித்து முடித்த மாணவ மாணவியர் தருமபுரி மாவட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பின்பு அவர்கள் முதுநிலை பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னால் சேலத்திற்கு செல்ல வேண்டும் எவ்வாறு செல்ல மாவட்டம் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானது எடுத்து புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களிடமோ கோரிக்கை வைத்ததின் பேரில் பெரியார் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சி மையம் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தற்பொழுது அங்கு மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர் இது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் களையில் மாபெரும் சாதனையாகும். அதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 10 கோடி ரூபாயில் கற்றும் கட்டப்பட்டு ஒதுக்கியவர்பு ரசித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள். அதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள நமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படிப்பதற்கு வசதியாக உள்ளது. அதேபோல அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் செய்த வளர்ச்சி திட்ட பணிகளை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதியமான் கோட்டம் நான் அமைச்சராக இருந்த பொழுது நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதற்கு நிதியை ஒதுக்கி தந்து இந்தக் கட்டடப் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணி முடிந்த பிறகு அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் திமுகவினர். அதேபோன்று தர்மபுரி அரசு மறுத்துக் கல்லூரி மருத்துவமனையில் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தந்து கட்டடம் திருவிழா காண போது அதற்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டினார்கள் ஆக அதிமுக ஆட்சியில் எதுவெல்லாம் கொண்டுவந்து நல்ல திட்டங்கள் செய்யப்பட்டதோ அதற்கு திமுக ஒட்டினார் கள். இதேபோன்று பெண்ணாகரம் சட்டமன்ற தொகுதியில் ஏரியூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கழக ஆட்சியில் கட்டப்பட்டது அதற்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டினர். இதேபோன்று பெண்ணாகரம் பேருந்து நிலையம் எடப்பாடி யார் நிதி ஒதுக்கி கட்டப்பட்டது அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியது திமுக. அதேபோன்று பாப்பாரப்பட்டி பேரூராட்சி புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கழக ஆட்சியில் திறக்கப்பட்டது. இவ்வாறு தர்மபுரி மாவட்டத்தில் பல வளர்ச்சிப் பணிகளை தொலைநோக்கு பார்வையுடன் செய்து கொடுத்தது புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சி காலத்தில் புரட்சித் தமிழர் எடப்பாடி அவர்கள். பென்னாகரம் தொகுதியில் மத்தளப் பள்ளம் ஏரிய அணை கட்ட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதயதையும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருக்கும் பொழுது 14 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி மத்தள பள்ளம் ஒரு அணை கட்டப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதி மக்கள் தர்மபுரி மாவட்டத்திற்கு வர 50 கிலோமீட்டர் சுற்றி வர வேண்டும் சாலையை சப்பனிட வேண்டுமென்று கோரிக்கை எடுத்து உடன் ஊட்டமலை வழியாக சாலை அமைக்க நிதி ஒதுக்கி தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டம் இணைக்கப்பட்டது புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான். அதனுடைய தொடர்ச்சியாக கே. ரெட்டிலிலிருந்து பென்னாகரம் வரவேண்டும் என்றால் 24 கிலோமீட்டர் எந்த வழியாக சென்று வந்தாலும் 60 கிலோ மீட்டருக்கு மேல் ஆகும். எதற்காக 8.15 கோடி நிதிபதிக்கு வனத்துறை வழியாக போடுர் வந்து சேர்கிறது தற்பொழுது அந்த சாலை பழுதாகி உள்ளது அந்த சாவியை புதுப்பிக்க வராமத்து செய்ய வக்கில்லாதவர்கள் திமுகவினர் அதேபோன்று 
ஏரியூர் எமனூர் அருகே சாலை அமைக்க இணைப்பதற்காக சட்டமன்றத்தில் மு க ஸ்டாலின் அறிவித்தார் 150 கோடியில் பாலம் கட்டப்படும் என்று ஆகிவிட்டதா ஆனால் இதுவரை அது கட்டப்படவில்லை கிடப்பில் போடப்பட்டது. இதை விவாதத்திற்கு கூறினால் அவர்களுக்கு கோபம் வருகிறது. பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் சும்மா ஒரு பகுதி மட்டும் தான் நான் உங்களுக்கு கூறியுள்ளேன். தர்மபுரியில் ஒரு இடத்தில் அடுக்கு மோடி குடியிருப்பு பென்னாகரம் காரிமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இதே போன்று அரூரில் இரண்டு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு பாப்பிரெட்டிப்பட்டியில் மூன்று இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முழுமையான நிதி ஒதுக்கி தந்தவர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள். இது மக்கள் பயன்பாட்டிற்கு வேண்டும் என்பதற்காக இந்த நல்ல திட்டங்கள் செய்யப்பட்டது. பாப்பாரப்பட்டி பகுதி எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பகுதி விவசாய மக்கள் பயன் பெறு வேண்டும் என்பதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விவசாய பெருங்குடி மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக குளிர் பதன கிடங்கு வசதி செய்து , இதேபோன்று பாலக்கோட்டில் தக்காளி 20 கோடி ரூபாய் மதிப்பில் தக்காளி குளிர் பதன கிடங்கு 18 புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் நிதி ஒதுக்கி கட்டப்பட்டது. ஏசி மாட்டின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும் அதற்குள் ஆட்சி மாற்றம் வந்தது ஆனால் அதை கூட திமுகவினர் ஏசி மாட்டி மக்கள் கொடுக்க வக்கில்லாதவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீர் மேலாண்மை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது புரட்சித்தமிழர் எடப்பாடி யார் ஆட்சிக்காலத்தில். நீர் மேலாண்மை திட்டத்தில் அலியாளம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டியருக்கு தண்ணீர் கொண்டு வருவது அந்த தூள் சிட்டி ஏரியில் தான் இந்நாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கட்டிவைத்து புகார் மனுக்களைப் பற்றி நான் ஆட்சிக்கு வந்தவுடன் தண்ணீர் கொண்டு வந்து விடுவேன் என்று கூறினார். 13 2 2021 இல் இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டது நிலம் கையகப்படுத்த சட்டமும் போடப்பட்டு விட்டது. ஜெருதல கால்வாய் 5000 மீட்டரில் இருந்து புலிகளை ஏரி வரை , 16 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது இதேபோன்று என்னைக் கல் புதூரில் இருந்து தும்மல் அல்லி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் நீர் மேலாண்மை திட்டங்கள். இது அனைத்தும் டெண்டர் விடப்பட்ட பணிகள் இதைக் கூட ஐந்தாண்டு காலத்தில் செய்ய வக்கில்லாத தால தான் திமுகவிற்கு கோபம் வருகிறது. டெண்டர் பணிகள் 16 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும். இது ஏன் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு கோவம் வருகிறது  திண்டல் ஏரி திட்டத்தில் பதிவேட்டில் 34 ஏரிகள் என இருக்கும் எதைப் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார். தொடர்ச்சியாக பாலக்கோட்டில் கொண்ட சாமானல்லி வரை அங்கே பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீர் திட்டம் அந்த உபரி நீரானது மாரண்டஅள்ளி அணைக்கட்டுக்கு வந்து அங்கிருந்து செங்கல் பஸ் தாவ் ஏரிக்கு செல்கிறது. சிங்கிள் பஸ்த்தாவில் இருந்து. அங்கிருந்து ஜெர்தலாவ் கடகத்தூர் உள்ளிட்ட பல ஏரிகளுக்கு செல்லும். ஜெருதலவ் 5600 மீட்டரில் பாப்பாரப்பட்டிக்கு செல்லும திட்டம். பஞ்சப்பள்ளி அணையில் இருந்து போதிய நீர் செங்கல் பஸ்த்தாவிற்கு அன்றைய காலகட்டத்தில் தண்ணீர் வரவில்லை என்ற தால், புதிதாக ஒரு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று 2016ல் தான் மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கை வைத்த பிறகு தான் அது வேகமாக நடைபெற்றது. அதை வேகமாக செயல்படுத்திய காரணத்தினால் தான் 2021 இல் அது டெண்டர் விடப்பட்டது. ஒரு திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். அதன் பிறகு ஒரு ஏரி தான் தூள் செட்டி தண்ணீர் வரவேண்டும். அதை செயல்படுத்த திமுகவினர்  செயல்படுத்தவில்லை. நீர் மேலாண்மை திட்டம் எடுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது புரட்சித்தலைவி அம்மா புரட்சித் தமிழர் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் தான். கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாவில் இருந்து உபரிநீர் கொண்டு வந்து கேசகுளி அல்ல அணையில் விட்டு மற்ற ஏரிகளுக்கும் நீர் பாசனத்திற்கும் வழிபாடு செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்திற்காக கழக அரசு அதிக அளவு செய்துள்ளது. அதை விவாதத்தில் எடுத்துச் சொல்வதற்கு திமுகவினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதோடு மட்டுமல்ல குமரன் அணைக்கட்டு நாலு கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அந்த அணைக்கட்டு பூஜை போடப்பட்டது. சட்டமன்றத்தில் 10 சதவீதம் முடிந்து விட்டது. 20% முடிந்துவிட்டது என மாணவி கோரிக்கையின் போது பொதுப்பணி துறையினரால் பதில் வந்து கொண்டிருக்கும் ஆனால் அந்த வேலை கிடைத்தல் போடப்பட்டுள்ளது இன்னும் அந்த வேலை செய்யப்படவில்லை. நீர் மேலாண்மை திட்டத்தை பற்றி பேசுவதற்கு திமுகவினருக்கு அருகதை கிடையாது. ஆகவே அதனால் தான் விவாதத்தில் கழகத்தின் சார்பில் பேச சென்ற எண்ணெய் பேச விடாமல் தடுத்தனர். கக்கன் அவர்கள் மந்திரியாக இருந்த காலகட்டத்தில் நல்லம்பள்ளி பகுதியில் மாரியம்மன் கோவில் பள்ள ம் ஒரு தடுப்பணை பழுதாகி இருந்தது தடுப்பணையை கட்டினால் ஏழு ஏரிக்கு தண்ணீர் செல்லும் என்று கூறினார்கள். இதுகுறித்து உடனடியாக புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் அதன் பிறகு அது அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததின் பெயரில் அந்த அணை சீர் செய்யப்பட்டு தற்போது விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். நீ மேலாண்மை திட்டத்தைப் பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் தான் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டி இல் அமைந்துள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் கட்டியதும் கழக ஆட்சியில் தான். கட்டியது அனைத்தும் கடக ராசி ஆனால் திறப்பு விழாக்கள் வைத்தது ஸ்டிக்கர் ஒட்டுனது திமுக. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இட நெருக்கடி காரணமாக அங்கு இயங்கிய மருத்துவமனையை பள்ளிக்கு மாற்றி கொடுத்தது புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கொடுமையாக கட்டி முடிக்கப்பட்டது கழக ஆட்சி. பென்னாகரம் பாலக்கோடு காரிமங்கலம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி கூடுதலாக என்னென்ன நீதிமன்றங்கள் தேவை என்று கூறினார்களோ அத்தனைக்கும் அனுமதி கொடுத்தவர் புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள். அதற்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது கழகஅரசு.
நீதிபதிகளுக்கு குடியிருப்பு வகைகள் வேண்டும் என்று கேட்டவுடன் அதற்கும் விதி ஒதுக்கி கட்டிக் கொடுக்கப்பட்டது 
நான்கு மாவட்டங்கள் சேர்ந்ததுமண்டல கல்லூரி இணை இயக்குனர் அலுவலகம் ஒதுக்கீடு செய்து அதற்குண்டான இடத்தை தேர்வு செய்து கட்டிடத்தையும் கட்டிக் கொடுத்தது கழக அரசு. 
அதேபோன்று புதிய மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் ஓசூருக்கு சென்று கொண்டிருந்த தர்மபுரி மக்களுக்கு தர்மபுரியில் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. அதேபோன்று ஆவின் அலுவலகம், இப்படி பல்வேறு வகையில் தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு கழக அரசு  கொடுத்தது. கல்வி மாவட்டம் தர்மபுரி மட்டுமே இருந்தது இதை அரூர் கல்வி மாவட்டமாகவும், பாலக்கோடு கல்வி மாவட்டம் என இரண்டு கல்வி மாவட்டம் ஒரே ஆண்டில் கொடுக்கப்பட்டது ஆனால் பாலகோடு  கல்வி மாவட்டத்தில் காலி செய்தது திமுக அரசு. தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழக வளர்ச்சிக்கு கடந்த நான்கரை ஆண்ட காலம் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்கள் உழைத்திருக்கிறார்.
டிப்ளமோ ஆர்ட்டிகல்ச்சர் மற்றும் டிப்ளமோ அக்ரிகல்சர் தர்மபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. 2021 22 இல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு போடப்பட்டது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அந்தக் கல்லூரிக்கு 38.4 எக்டேர்.95 ஏக்கர்.
அதற்கு வழி ஏற்படுத்த இரண்டு ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த மாணவர் சேர்க்கையில் கூட அரசியல் செய்து விட்டார்கள். 
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதியிலும் திமுக இல்லை ஆகவே இவர்களுக்கு எதற்கு கல்லூரி வழங்க வேண்டும் அப்படி என்ற எண்ணத்தில் கல்லூரியை கேன்சல் செய்து விட்டனர். 
பெரியாம்பட்டி திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்டது மண்டல அலுவலகத்திற்கு அதுக்கு 4.15 கோடி ரூபாய் ஒதுக்கி தொந்தரவு விடப்பட்டது அந்த பணியில் நடைபெறும் போது அந்த ஒப்பந்ததாரரை மிரட்டி அதை கேன்சல் செய்துவிட்டனர். இப்படி தருமபுரி மாவட்டத்திற்கு வரவேண்டிய பல நல்ல திட்டங்களை தடுத்தது திமுகவினர். போலீசாருக்கு தடய அறிவியல் ஆய்வகம் கொண்டு வந்தது. வத்தல்மலை மக்கள் பயன்பெறும் நோக்கில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 18.50  கோடி, சாலை அமைக்கப்பட்டது அது பழுதான பிறகு 10 கோடி ஒதுக்கி அதை சரி செய்யப்பட்டது அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் வத்தல் மலைக்கு மட்டும் ஒரு மேல்நிலைப் பள்ளியை வழங்கியது.பு ரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள், இதேபோன்று ஊட்டமலை, புள்ளி விவரங்களோடு பள்ளிகள் திறக்கப்பட்டது விவாதத்தில் கூறும் போது திமுகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை 
அவருடைய திமுக ஆட்சி காலத்தில் 2022ல் ஒரே ஒரு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒரே ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. வேறு எதுவுமே கிடையாது. திமுகவினர் எவ்வாறு கல்வியில் புரட்சி செய்ய முடியும். சித்தேரி மலை மண்ணூரில் இருந்து 11 கிலோமீட்டர் சாலை அமைத்தது புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் . சித்தேரி முதல் நொச்சி குட்டைக்கு சாலை அமைத்தது.மல்லூரில் கோவிந்தன் காடு அம்மா பாளையத்தில் இருந்து 29 கோடி ரூபாய் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட்டது. 
இன்று கலசப்பாடிக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள். வன உரிமை சட்டப்படி சாலை போட உரிமையில்லை கலசப்பாடி சாலை அமைக்க அனைத்து கொடுத்தது அதிமுக அரசு. வனத்துறை எடுக்கப்பட்ட நிலத்தை கம்மம்பட்டி அருகே 1:2 எந்த கணக்கு நாம் கொடுக்கப்பட்டுள்ளோம். ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி 310 கோடி மதிப்பில் திட்டம் ஒதுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது திமுக வந்து நான் அதைக் கிடப்பில் போட்டு விட்டன கிடப்பில் போடுவது விட்டார்கள் என்றாலே அவர்களுக்கு பிபி ஏறுது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது அன்றைய மதிப்பீடு ரூபாய் 101 கோடி. அதன் பிறகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் 640 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது அதன்பிறகு நான் அந்த துறையில் அமைச்சராக இருந்தபோது தர்மபுரி கிருஷ்ணகிரி ஆக இரண்டு மாவட்டத்திற்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1005 கொடி முன்மொழிவு அனுப்பப்பட்டது.1034 கோடியாக மாறியது. இந்த பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்ற புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். வனத்துறை ஏற்கனவே நமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அதன்படியாக இவர் திட்டத்தை நிறைவேற்ற முடியும் இதை நேற்று பேசும் பொழுது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வனத்துறை இடம் அனுமதி வாங்க முடியாது என்று கூறுகிறார் வனத்துறை இடம் அனுமதி வாங்க கால தாமதம் ஆனாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருள் ஆசியோடு புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் 2026 முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றுவதை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் தடுக்க முடியாது. 2026 இல் கழக ஆட்சி அமைந்த உடன் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும். ஒகேனக்கல் உபரணியர் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தான் நிறைவேற்றி தரும் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்கள் முதலமைச்சராவது உறுதி. அவர் முதலமைச்சர் ஆனவுடன் இந்த உபரி நீர் திட்டம் நிறைவேற்றுப்படும். என தெரிவித்தார்
உடன் மாநில விவசாய பிரிவு தலைவர் டி ஆர் அன்பழகன் ஓபிஎஸ் அணியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அரங்கநாதன் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பொன்வேல் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் பழனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.