ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மூட்டைகள் சேலைகள் மட்டன் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு , நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சேலைகள் ,அரிசி மூட்டைகள் மற்றும் பல்வேறு வகையான அன்னதானங்கள் வழங்கினார். __________ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் மாநகர 6 வது வட்ட கழக செயலாளர் வி.முருகன் அவர்கள் ஏற்பாட்டில் , மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் தலைமையில் , காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி 6 வது வார்டு பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மூட்டைகள், சேலைகள் மற்றும் சுமார் 500 நபர்களுக்கு, இடியாப்பம், இட்லி , மட்டன் ,சிக்கன் உள்ளிட்ட உணவு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பாஸ்கர் , அம்மா பேரவை வட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மூட்டைகள் சேலைகள் மட்டன் சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு , நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சேலைகள் ,அரிசி மூட்டைகள் மற்றும் பல்வேறு வகையான அன்னதானங்கள் வழங்கினார். __________ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் மாநகர 6 வது வட்ட கழக செயலாளர் வி.முருகன் அவர்கள் ஏற்பாட்டில் , மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் தலைமையில் , காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி 6 வது வார்டு பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரிசி மூட்டைகள், சேலைகள் மற்றும் சுமார் 500 நபர்களுக்கு, இடியாப்பம், இட்லி , மட்டன் ,சிக்கன் உள்ளிட்ட உணவு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் பாஸ்கர் , அம்மா பேரவை வட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 2353 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் தீயில் எரிப்பு. செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் 2353 கிலோ எடை கொண்ட குட்கா எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையில் செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் காவலர்கள் இனைந்து 2353 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை தீயில் எரித்து அழிக்கப்பட்டது.1
- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்.போராட்டம் நடைபெற்றது1
- தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கலசபாடி மலை கிராமத்திற்கு முதன்முறையாக மினி பேருந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகிழ்ச்சியில் திகைத்த மலைவாழ் மக்கள். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடி. அரசநத்தம். நைனாவளைவு. புளியமரத்து வளைவு. கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி. ஆகிய மலை கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று 78 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு வேலாண்மைதுறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தார்சாலையை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து இன்று அரூர் முதல் கலசப்பாடி மலைகிராமம் வரை போக்குவருத்துக்காக இரண்டு சிற்றுந்துகளை (மினி பேருந்து) மாவட்ட ஆட்சியர் சதிஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் சிற்றுந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிற்றுந்துகளில் கலசப்பாடி மலையடிவாரத்தின் சாலை தொடக்கத்தில் இருந்து கலசப்பாடி மலை கிராமம் வரை பேருந்தில் பயணித்தினர். கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்ததால் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் முதன் முறையாக தங்கள் கிராமங்களுக்கு சிற்றுந்துகளில் பயனித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் சக்தி வாய்ந்த பழமையான ஓங்காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனது ஐந்து ஊர் மக்களுக்கு பொதுவானது ஆலமரத்தூர் பெத்தானூர் பூத நாயக்கன்பட்டி சோழி கவுண்டனூர் சாணாரப்பட்டி ரோனி பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான கோவில் இந்த கோயிலில் தை மாத இறுதியில் கொலு வைத்து தொடங்கிய விழாவானது 15 நாட்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகாவதி ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் சக்தி கரகம் பூ கிரகம் அலவு குத்துதல் பம்பை மேல தாளங்கள் முழுங்க ஊர்வலமாக வந்தனர் பிறகு ஓங்காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட இருந்த 16 அடி நீளம் கொண்ட தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர் பிறகு பில்லி சூனியம் கண் திருஷ்டி செய்வினை உடல் நலம் சரியில்லாத இருப்பவர்கள் வேண்டிக்கொண்டு தீ குண்டத்தில் உப்பு தெளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை ஐந்து ஊர் கிராம மக்கள் சிவன் காளி புலி கரடி உள்ளிட்ட வேடம் அணிந்தும் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அலங்காரத்தில் மின்னிய ஓங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- சேலம் அஸ்தம்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நேற்று இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. காய்ந்த சருகுகளில் தீ வேகமாகப் பரவி, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் உடனடியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். அவர்களின் துரித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலயம் அமைந்துள்ளது. முற்றிலுமாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி, அர்த்த மண்டம், அம்பாள் சன்னதி, விமானம், விநாயகர், சன்டிகேஸ்வரர் சன்னதிகள் புதிதாக அமைக்கப்பெற்று 400 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைப்பெற்றது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 2 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓதி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் உத்தரேசமுடையார், குதம்பை நாயகி அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தமிழகம் முழுவதும் 42000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. 25ம் தேதிபுதன்கிழமை முதல் மாவட்டத் தலைநகர்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் 9 வது நாளான . இன்று மாவட்ட தலைவர் துரைவேல் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்1
- தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் நெல் மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டையூர் கிழார் திருவாரூருக்கு உணவு பண்டங்கள் அனுப்பி வந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்ட போது நெல்மலை ஒன்றை, இறைவன் தந்து மறைந்துள்ளார். தொடர்ந்து அந்த நெல் மலையை திருவாரூருக்கு பூதகணங்கள் உதவியோடு கொண்டு செல்லும் ஐதீக விழா நெல் மகோற்சவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த பிப் 28 ம் தேதி துவங்கியது. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ந்து ஸ்ரீ கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை திருவாரூர் (ஆரூரில் ) சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில்,நெல் மலையோடு பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.1