Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Tamil Nadu and nearby areas
- 2353 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் தீயில் எரிப்பு. செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் 2353 கிலோ எடை கொண்ட குட்கா எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையில் செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் காவலர்கள் இனைந்து 2353 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை தீயில் எரித்து அழிக்கப்பட்டது.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லண்டன்பேட்டை, BSNL அலுவலகம் அருகில், அமைக்கப்பட்டுள்ள ரூ-37,50,000/- (முப்பத்தி ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்பிலான உழைப்பாளர் நலக் கூடத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்அவர்கள்குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.1
- பாப்பாரப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள் விழா ; பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டியின் பரிசளிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவானது அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் கேசவன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதிமுக மாநில விவசாயப்பிரிவு தலைவர் T.R. அன்பழகன், பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர கழக செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு கோலம் போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கேக்வெட்டி கொண்டாடினார், அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை, சுந்தரம், குட்டி, கேசவன், சௌந்தர், புஷ்பராஜ், ராஜி,பாபு ,அப்புசாமி, மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.1
- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் சக்தி வாய்ந்த பழமையான ஓங்காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனது ஐந்து ஊர் மக்களுக்கு பொதுவானது ஆலமரத்தூர் பெத்தானூர் பூத நாயக்கன்பட்டி சோழி கவுண்டனூர் சாணாரப்பட்டி ரோனி பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான கோவில் இந்த கோயிலில் தை மாத இறுதியில் கொலு வைத்து தொடங்கிய விழாவானது 15 நாட்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகாவதி ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் சக்தி கரகம் பூ கிரகம் அலவு குத்துதல் பம்பை மேல தாளங்கள் முழுங்க ஊர்வலமாக வந்தனர் பிறகு ஓங்காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட இருந்த 16 அடி நீளம் கொண்ட தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர் பிறகு பில்லி சூனியம் கண் திருஷ்டி செய்வினை உடல் நலம் சரியில்லாத இருப்பவர்கள் வேண்டிக்கொண்டு தீ குண்டத்தில் உப்பு தெளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை ஐந்து ஊர் கிராம மக்கள் சிவன் காளி புலி கரடி உள்ளிட்ட வேடம் அணிந்தும் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அலங்காரத்தில் மின்னிய ஓங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- சேலம் அஸ்தம்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நேற்று இரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. காய்ந்த சருகுகளில் தீ வேகமாகப் பரவி, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் உடனடியாகத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். அவர்களின் துரித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கலசபாடி மலை கிராமத்திற்கு முதன்முறையாக மினி பேருந்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மகிழ்ச்சியில் திகைத்த மலைவாழ் மக்கள். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடி. அரசநத்தம். நைனாவளைவு. புளியமரத்து வளைவு. கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி. ஆகிய மலை கிராமங்களுக்கு சுதந்திரம் பெற்று 78 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் மாண்புமிகு வேலாண்மைதுறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தார்சாலையை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து இன்று அரூர் முதல் கலசப்பாடி மலைகிராமம் வரை போக்குவருத்துக்காக இரண்டு சிற்றுந்துகளை (மினி பேருந்து) மாவட்ட ஆட்சியர் சதிஷ்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் சிற்றுந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிற்றுந்துகளில் கலசப்பாடி மலையடிவாரத்தின் சாலை தொடக்கத்தில் இருந்து கலசப்பாடி மலை கிராமம் வரை பேருந்தில் பயணித்தினர். கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடைத்ததால் மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் முதன் முறையாக தங்கள் கிராமங்களுக்கு சிற்றுந்துகளில் பயனித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- தமிழகம் முழுவதும் 42000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று நடைபெற்றது. 25ம் தேதிபுதன்கிழமை முதல் மாவட்டத் தலைநகர்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் 9 வது நாளான . இன்று மாவட்ட தலைவர் துரைவேல் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்1