Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரியில் உழைப்பாளர் நலக் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லண்டன்பேட்டை, BSNL அலுவலகம் அருகில், அமைக்கப்பட்டுள்ள ரூ-37,50,000/- (முப்பத்தி ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்பிலான உழைப்பாளர் நலக் கூடத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்அவர்கள்குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
FAYAZ
கிருஷ்ணகிரியில் உழைப்பாளர் நலக் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லண்டன்பேட்டை, BSNL அலுவலகம் அருகில், அமைக்கப்பட்டுள்ள ரூ-37,50,000/- (முப்பத்தி ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்பிலான உழைப்பாளர் நலக் கூடத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்அவர்கள்குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
More news from Tamil Nadu and nearby areas
- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜன அள்ளியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேருரை ஆற்றினார். அதணைத் தொடர்ந்து வேலம்பட்டியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழல் கூடம் திறந்து வைத்தார். முன்னதாக நாகோஜன அள்ளியில் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜ், பேருராட்சி துணைத் தலைவர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பெருமாள், பர்கூர் சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் கிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, பழனியம்மாள், காஞ்சனா, அம்பிகா, ரமணி, சுமித்ரா, விஜயலட்சுமி, கடல் வேந்தன், ரமேஷ், சுமித்ரா, கிருஷ்ணன், பிரியதர்ஷினி, மயில்வாகனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இளங்கோ, ரவிக்குமார், வனிதா உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லண்டன்பேட்டை, BSNL அலுவலகம் அருகில், அமைக்கப்பட்டுள்ள ரூ-37,50,000/- (முப்பத்தி ஏழு லட்சத்து ஐம்பதாயிரம்) மதிப்பிலான உழைப்பாளர் நலக் கூடத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்அவர்கள்குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.1
- பாப்பாரப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள் விழா ; பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டியின் பரிசளிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவானது அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் கேசவன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதிமுக மாநில விவசாயப்பிரிவு தலைவர் T.R. அன்பழகன், பென்னாகரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி, நகர கழக செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக விருந்தினராக முன்னாள் அமைச்சர் பாலகோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு கோலம் போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். முன்னதாக ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கேக்வெட்டி கொண்டாடினார், அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை, சுந்தரம், குட்டி, கேசவன், சௌந்தர், புஷ்பராஜ், ராஜி,பாபு ,அப்புசாமி, மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.1
- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் சக்தி வாய்ந்த பழமையான ஓங்காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனது ஐந்து ஊர் மக்களுக்கு பொதுவானது ஆலமரத்தூர் பெத்தானூர் பூத நாயக்கன்பட்டி சோழி கவுண்டனூர் சாணாரப்பட்டி ரோனி பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான கோவில் இந்த கோயிலில் தை மாத இறுதியில் கொலு வைத்து தொடங்கிய விழாவானது 15 நாட்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று நாகாவதி ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் சக்தி கரகம் பூ கிரகம் அலவு குத்துதல் பம்பை மேல தாளங்கள் முழுங்க ஊர்வலமாக வந்தனர் பிறகு ஓங்காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட இருந்த 16 அடி நீளம் கொண்ட தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர் பிறகு பில்லி சூனியம் கண் திருஷ்டி செய்வினை உடல் நலம் சரியில்லாத இருப்பவர்கள் வேண்டிக்கொண்டு தீ குண்டத்தில் உப்பு தெளித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை ஐந்து ஊர் கிராம மக்கள் சிவன் காளி புலி கரடி உள்ளிட்ட வேடம் அணிந்தும் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அலங்காரத்தில் மின்னிய ஓங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்1
- சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 3 வார்டில் இன்று தமிழக அரசின் சார்பில் 46 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மக்களுக்கு பூங்கா அமைக்கப்பட்டு இன்று காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன், குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிங்கபுரம் நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் பவித்ரா மற்றும் நகர துணை செயலாளர் பிரகாஷ் நகர பொருளாளர் இளவரசு வார்டு செயலாளர் அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம் சாலமன் ,,கண்ணண், ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- 2353 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் தீயில் எரிப்பு. செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் 2353 கிலோ எடை கொண்ட குட்கா எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையில் செட்டிபாளையம் காவல் ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் காவலர்கள் இனைந்து 2353 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை தீயில் எரித்து அழிக்கப்பட்டது.1