ஆசிரியர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் அதிரடி உத்தரவு கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்டாலின், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .பிரதாப். தலைமையாசிரியர்களிடையே பேசுகையில்- பள்ளிகளில் ஏதேனும் அல்லது பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால், ஆசிரியர்கள் அவற்றை உடனடியாக மாவட்ட நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் அல்லது காவல் துறைக்கு (நிமிர் குழு/காவல் நிலையம்) தகவல் தெரிவிக்க வேண்டும். பிரச்சனைகளை ஆசிரியர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் கையாள முயலாமல், உரிய அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனைகள் மற்றும் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும்.என்று கூறினார்.
ஆசிரியர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் அதிரடி உத்தரவு கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்டாலின், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .பிரதாப். தலைமையாசிரியர்களிடையே பேசுகையில்- பள்ளிகளில் ஏதேனும் அல்லது பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால், ஆசிரியர்கள் அவற்றை உடனடியாக மாவட்ட நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் அல்லது காவல் துறைக்கு (நிமிர் குழு/காவல் நிலையம்) தகவல் தெரிவிக்க வேண்டும். பிரச்சனைகளை ஆசிரியர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் கையாள முயலாமல், உரிய அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனைகள் மற்றும் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும்.என்று கூறினார்.
- அணுக்கனிம சுரங்க அனுமதி நீட்டிப்பு ரத்து செய்யப்படுமா ?ஆஸ்டின் எம்எல்ஏ கேள்வி தமிழக சட்டமன்றத்தில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை திமுக அரசு நிறுத்தி வைத்திருந்தது ஆனால் தற்போது புதிதாக பதவி ஏற்று உள்ள அரசு ஓர் ஆண்டு காலத்திற்கு அந்த அனுமதியை நீட்டித்து வழங்கி உள்ளது.இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த அனுமதி ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.1
- த.வெ.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. தமிழக வெற்றி கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் சமபந்தி விருந்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களோடு சேர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது த.வெ.க நிர்வாகி பால்ராஜ் முன்னிலையில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் நலத்திட்டங்களை வழங்கினார். தூய்மை பணியாளர்கள் அனைவரும் சமபந்தி விருந்து அளித்த த.வெ.க வினரை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.1
- இருதயத்தில் உள்ள இரத்த அடைப்பை மாற்ற இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்1
- திருச்செந்தூர் அருகே பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். பெருங்குளம் குளத்தில் குவியும் உள்நாட்டு பறவைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயிலும், வறட்சியும் நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து பிரியும் கீழக்கால்வாயின் கடைசி குளமாக பெருங்குளம் அமைந்துள்ளது. சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிகளவில் இருப்பதால், ஏராளமான உள்நாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக நத்தை கொத்தி நாரை, கருப்புகோட்டான், கரண்டிவாயன், அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, ஜம்பு நாரை, சாம்பல் நாரை, மூக்குழிப்பான், பாம்பு தாரா, கூழைக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் பெருங்குளத்தில் முகாமிட்டுள்ளன. இதுதவிர வெள்ளைக் கொக்கு, பெரிய கொக்கு, சாம்பல் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான கொக்குகளும் காணப்படுகின்றன. தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பெருங்குளம் குளத்தில் முகாமிட்டுள்ளது. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக குளத்தில் இறங்கும் பறவைகள், அங்குள்ள மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் பெருங்குளம் குளத்தில் காணப்படும் உள்நாட்டு பறவைகளை பார்வையிட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் வருகை தந்தார். வருகை தந்த அவர் பைனாகுலர் கொண்டு குளத்தில் காணப்படும் பறவைகளை பார்வையிட்டு அங்கு நின்ற மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து பறவைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.1
- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஆலோசனை கூட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து இன்று வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகள் சம்பந்தமாக எடுக்கப்பட்டு வரும் திட்டப் பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.1
- *தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோலாண்டனூர் 7,வது வார்டு ஊராட்சி அலுவலகத்திற்கு கீழ்புரம் ஒரு வருடத்திற்கு முன் போடப்பட்ட புதிய சிமிண்ட் சாலையில் வாறுகாலில் அமைக்காததால் வீடுகளில் உபயோகப்படுத்தும் கழிவுநீரை பைப்பு மூலம் பொது தெரிவில் விடுவதனால் சாலை பழுதாகுவதோடு சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள், மற்றும் புளுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விசக்காய்சல் பரவி வருவதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்க்கு விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரி உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது இங்கு சூரியன் உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியும் இதன் காரணமாக விடுமுறை தினங்களில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் ஓணம் விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர் அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர் கன்னியாகுமரியில் இயற்கை அழகை கண்டு ரசித்த அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள நினைவகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர் இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது1
- குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் அம்ரேலி கிடங்கில் தானிய மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்து அம்ரேலி சிவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.1