சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இந்த காலகட்டத்தில் அம்மன் தானாகவே கடும் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களுக்காக தன்னை வருத்திக்கொள்வது மரபு. இந்நாட்களில் அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே அம்மனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இவ்விழாவின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை அணிந்து, கடும் விரதம் இருந்து பயணம் செய்கின்றனர். கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி, அலகு குத்துதல், காவடி எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றை எடுத்து வந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இதன் தொடர்ச்சியாக சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும் அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் ஒலிக்க, மாரியம்மன் படம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். இரவில் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் 'வையாளி கண்டருளும்' நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (14.04.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. மேல் அம்மன் தேரில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஆடி அசைந்து வரும் மாரியம்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தேருக்கு முன்னால் பக்தர்கள் கரகம், முளைப்பாரி, அலகு குத்துதல், பறவைக் காவடி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் திரளாக குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோயில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இந்த காலகட்டத்தில் அம்மன் தானாகவே கடும் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களுக்காக தன்னை வருத்திக்கொள்வது மரபு. இந்நாட்களில் அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே அம்மனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இவ்விழாவின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை அணிந்து, கடும் விரதம் இருந்து பயணம் செய்கின்றனர். கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி, அலகு குத்துதல், காவடி எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றை எடுத்து வந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இதன் தொடர்ச்சியாக சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும் அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் ஒலிக்க, மாரியம்மன் படம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். இரவில் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் 'வையாளி கண்டருளும்' நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (14.04.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. மேல் அம்மன் தேரில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஆடி அசைந்து வரும் மாரியம்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தேருக்கு முன்னால் பக்தர்கள் கரகம், முளைப்பாரி, அலகு குத்துதல், பறவைக் காவடி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் திரளாக குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோயில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
- மணப்பாறை அருகே வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று, மின்சார வாரிய அனுமதி பெறாமல் தானாக மின் மாற்றியில் பீஸ் போட ஏறியவர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி பலி. திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி (50) இவரது மனைவி சகாயமேரி என்பவருடன் திருமணம் ஆகி சுமார் 25 ஆம் ஆண்டு நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகி அவர் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இறந்து போன இன்னாசி N பூலாம்பட்டி மனைவியுடன் தனியாக வசித்துக் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று தனது வீட்டில் மின்சாரம் வரவில்லை என்று, தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள N.பூலாம்பட்டி SS no:1 -மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் . இறந்தவரின் உடல் உடல் கூராய்வு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தொட்டியப்பட்டியில் பாம்பாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாம்பாளம்மன் அருளை பெற்று சென்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.1
- திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.3
- *திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 3006 விளக்குகள் இயற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.*1
- Post by Natarajan Pitchaimani1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் அருகே பொன் முச்சந்தியில் அருள்மிகு திருமுக்தீஸவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முக்தீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.1