logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இந்தத் தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா்; மக்களவைத் தோ்தலில் ராகுல் பிரதமா் ஆவாா் இந்தத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். அடுத்து நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமாா் ஆவாா் என கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.கே.கோபிநாத் தெரிவித்தாா்.தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதி. திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா வெற்றிபெற்றால் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். மேலும், ஒசூா் - பெங்களூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம், ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டம், ஒசூா் விமான நிலையம் போன்றவற்றுக்கு மத்திய அரசு தடைவிதித்து வருகிறது. எனவே, ஆளும்கட்சி எம்எல்ஏவாக எஸ்.ஏ.சத்யா சட்டப் பேரவைக்கு செல்லும்போது ஒசூா் தொகுதி மேலும் வளா்ச்சிபெறும். இந்த தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். 2029-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமா் ஆவாா் என்றாா்.இறுதிகட்ட பிரசாரத்தை பேரிகை, பாகலூரில் நிறைவுசெய்தாா். அவருடன் ஒன்றியச் செயலாளா் நாகேஷ், மணி, சுமன், காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

16 hrs ago
user_USHA INDU
USHA INDU
Awning supplier ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
16 hrs ago
2efa5900-b9b5-4483-bc33-609ba76fc9a2

இந்தத் தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா்; மக்களவைத் தோ்தலில் ராகுல் பிரதமா் ஆவாா் இந்தத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். அடுத்து நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமாா் ஆவாா் என கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.கே.கோபிநாத் தெரிவித்தாா்.தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதி. திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா வெற்றிபெற்றால் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். மேலும், ஒசூா் - பெங்களூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம், ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டம், ஒசூா் விமான நிலையம் போன்றவற்றுக்கு மத்திய அரசு தடைவிதித்து வருகிறது. எனவே, ஆளும்கட்சி எம்எல்ஏவாக எஸ்.ஏ.சத்யா சட்டப் பேரவைக்கு செல்லும்போது ஒசூா் தொகுதி மேலும் வளா்ச்சிபெறும். இந்த தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். 2029-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி பிரதமா் ஆவாா் என்றாா்.இறுதிகட்ட பிரசாரத்தை பேரிகை, பாகலூரில் நிறைவுசெய்தாா். அவருடன் ஒன்றியச் செயலாளா் நாகேஷ், மணி, சுமன், காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள 1, 2, 3 ஆகிய வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு, ஒழுங்காக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை உணர்வுடன் நிறைவேற்றி வருகின்றனர். எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறது. மக்களின் ஒத்துழைப்பும், தேர்தல் பணியாளர்களின் ஒருங்கிணைப்பும் காரணமாக, ஏலகிரி பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள 1, 2, 3 ஆகிய வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது.
வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு, ஒழுங்காக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை உணர்வுடன் நிறைவேற்றி வருகின்றனர். எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறது.
மக்களின் ஒத்துழைப்பும், தேர்தல் பணியாளர்களின் ஒருங்கிணைப்பும் காரணமாக, ஏலகிரி பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ‌‌முனைவர் சௌமியா அன்புமணி வாக்குச்சாவடி மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தகவல். தமிழகம் முழுவதும இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கடந்த 15 தினங்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் தொடர்ந்து இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவு குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியிலும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் தெரிவித்தார். பேட்டி - சௌமியா அன்புமணி - பாமக வேட்பாளர்
    1
    தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ‌‌முனைவர் சௌமியா அன்புமணி வாக்குச்சாவடி மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தகவல்.
தமிழகம் முழுவதும இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கடந்த 15 தினங்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் தொடர்ந்து இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவு குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியிலும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
பேட்டி - சௌமியா அன்புமணி - பாமக வேட்பாளர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    23 min ago
  • பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்களித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
    1
    பர்கூர் சட்டமன்றத் தொகுதி  திமுக வேட்பாளர் தே.மதியழகன்  தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்களித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர்  கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில்  நின்று  தனது வாக்கினை பதிவு செய்தார்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    3 hrs ago
  • எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் மகன் மிதுன் மற்றும் மனைவி ராதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    1
    எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் மகன் மிதுன் மற்றும் மனைவி ராதா ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எதனை மனதில் வைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம். தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு  அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் (இன்று ஏப்ரல் 23 காலை) ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சியில் 42 - பூத்து பகுதியில் வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார் என தெரிய பூத்து சுவற்றில் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் பெயர் சின்னம் உள்ளது
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் (இன்று ஏப்ரல் 23 காலை) ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சியில் 42 - பூத்து பகுதியில் வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார் என தெரிய பூத்து சுவற்றில் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் பெயர் சின்னம் உள்ளது
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் காங்கிரஸ் கமிட்டியில் மாநில துணைத்தலைவருமான கே.ஐ மணிரத்தினம் அவர்களுடன் மற்றும் அவரது மூத்த மகன் கமல் மணிரத்தினம் உள்ளிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் காங்கிரஸ் கமிட்டியில் மாநில துணைத்தலைவருமான கே.ஐ மணிரத்தினம் அவர்களுடன் மற்றும் அவரது மூத்த மகன் கமல் மணிரத்தினம் உள்ளிப்போர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் சென்று சேர்ந்தது. இன்று அதிகாலை முதலே வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எர்ரப்படி வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான சதீஷ் தனது வாக்கினை பதிவு செய்தார். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 12,52,019 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,29,980 ஆண் வாக்காளர்களும், 6,21,887 பெண் வாக்காளர்களும், 152 மூன்றாம் பாலினத்தாவரும் உள்ளனர். இவர்கள் வாக்காளிக்க 957 இடங்களில் மொத்தம் 1596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 150 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    1
    தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 
நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் சென்று சேர்ந்தது.
இன்று அதிகாலை முதலே வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டது. 
தர்மபுரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எர்ரப்படி வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான சதீஷ் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.
மாவட்டத்தில் மொத்தம் 12,52,019 வாக்காளர்கள் உள்ளனர்.  இவர்களில் 6,29,980 ஆண் வாக்காளர்களும்,  6,21,887 பெண் வாக்காளர்களும்,
152 மூன்றாம் பாலினத்தாவரும் உள்ளனர்.
இவர்கள் வாக்காளிக்க 957 இடங்களில் மொத்தம் 1596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 150 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.