Shuru
Apke Nagar Ki App…
திருச்செந்தூர்: உடன்குடி மேற்கு பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு! திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று உடன்குடி மேற்குப் பகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு வீதி வீதியாகச் சென்ற அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி வெற்றியை உறுதி செய்யுமாறு தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
திருச்செந்தூர்: உடன்குடி மேற்கு பகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு! திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று உடன்குடி மேற்குப் பகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு வீதி வீதியாகச் சென்ற அவருக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்தி வெற்றியை உறுதி செய்யுமாறு தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by மா.சுடலைமணி1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- Post by மா.கணேஷ்1
- கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,4
- 7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்...தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நம்பிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் 7வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமைச்சர் தென்னரசுவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை தான் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.7
- கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். விழாவில் அவர் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வந்த ரோஜாவிற்கு விழா குழுவினர் சிறந்த முறையில் வரவேற்ப்பளித்தனர்.1
- சங்கரன்கோவில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது1
- Post by மா.கணேஷ்1