logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அய்யலூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து, ஒருவர் பலி, தீப்பிடித்து எரிந்த பைக் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வண்டி கருப்பணசாமி கோவில் எதிரே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பைக் சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. பைக்கில் வந்த புத்தாநத்தம், சவுத் இடையபட்டியை சேர்ந்த ஞானசுந்தரம்(42) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடமதுரை போலீசார் ஞானசுந்தரத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

3 hrs ago
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
3 hrs ago

அய்யலூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து, ஒருவர் பலி, தீப்பிடித்து எரிந்த பைக் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வண்டி கருப்பணசாமி கோவில் எதிரே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பைக் சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. பைக்கில் வந்த புத்தாநத்தம், சவுத் இடையபட்டியை சேர்ந்த ஞானசுந்தரம்(42) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடமதுரை போலீசார் ஞானசுந்தரத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    2
    திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் புனித ரமலான் மாதத்தையொட்டி நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், ஜமாத்தார்கள், உலமாக்கள், இஸ்லாமிய பெருமக்கள், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மணலூர் ஜெயராஜ், சொக்கலிங்கபுரம் சசிகுமார் மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபிக், நகரச் செயலாளர் சக்திவேல் பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, துணை தலைவர் ஜாகிர் உசேன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டி, தியாகு என்ற முத்துக்குமார் பேரூராட்சி பகுதி முக்கிய நிர்வாகிகள் பஷீர் அகமது, அலாவுதீன், சையது அல்தாப்,சேடப்பட்டி முத்து மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், முன்னணி தொண்டர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் புனித ரமலான் மாதத்தையொட்டி நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்  
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். 
மேலும், 
ஜமாத்தார்கள், உலமாக்கள், இஸ்லாமிய பெருமக்கள்,
திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மணலூர் ஜெயராஜ், சொக்கலிங்கபுரம் சசிகுமார் 
மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபிக், நகரச் செயலாளர் சக்திவேல் 
பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, துணை தலைவர் ஜாகிர் உசேன் 
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டி, தியாகு என்ற முத்துக்குமார் 
பேரூராட்சி பகுதி முக்கிய நிர்வாகிகள் பஷீர் அகமது, அலாவுதீன், சையது அல்தாப்,சேடப்பட்டி முத்து 
மேலும்,
மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், முன்னணி தொண்டர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • *சித்தையன் கோட்டை வடக்கு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கேற்பு* திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ‌.பெரியசாமி நோன்பு திறந்தார். தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய பின்னர் சித்தையன் கோட்டை பகுதி பள்ளிவாசலில் பணிபுரியும் இமாம்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார், இந்நிகழ்வில் உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், சித்தையன் கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், நகர செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் அலாப்தீன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபிக், வக்கீல் செல்ல மரைக்காயர், சேக் தாவூத், உதுமான் அலி, ரபிக் மைதீன் உட்பட திமுக மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பைசூர் ரகுமான், அங்குச்சாமி, அப்துல் ரகுமான் மற்றும்சித்தையன் கோட்டை ஜமாத்தார்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
    1
    *சித்தையன் கோட்டை வடக்கு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கேற்பு*
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ‌.பெரியசாமி  நோன்பு திறந்தார். தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய பின்னர் சித்தையன் கோட்டை பகுதி பள்ளிவாசலில் பணிபுரியும்  இமாம்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார், இந்நிகழ்வில் உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், சித்தையன் கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், நகர செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் அலாப்தீன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபிக், வக்கீல் செல்ல மரைக்காயர், சேக் தாவூத், உதுமான் அலி, ரபிக் மைதீன் உட்பட திமுக மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பைசூர் ரகுமான், அங்குச்சாமி, அப்துல் ரகுமான் மற்றும்சித்தையன் கோட்டை ஜமாத்தார்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இஸ்லாமிய பெருமக்கள் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இஸ்லாமிய பெருமக்கள்  மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். மதுரை, மார். 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் : அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர். மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
    2
    அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்.
மதுரை, மார். 11-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது.
பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தலைவர்கள் :
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது.
இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர்.
மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே.12 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ராட்டின ஏலத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.க வினர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலகத்தை போலீஸ் அனுமதி இன்றி 2 தினங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
    1
    வீரபாண்டி  கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே.12 முதல் 19 வரை  நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ராட்டின ஏலத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.க வினர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலகத்தை போலீஸ் அனுமதி இன்றி 2 தினங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி அருகே சமதர்மபுரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஶ்ரீ ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி மகா தீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்துச் சென்றனர்
    1
    தேனி அருகே சமதர்மபுரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக  நடைபெற்றது 
முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஶ்ரீ ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம்  நடத்தி மகா தீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் இன்று மத்திய அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்காததை கண்டித்தும், சிலிண்டர் விலைவாசியை உயர்வதை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
    1
    திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் இன்று மத்திய அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்காததை கண்டித்தும், சிலிண்டர் விலைவாசியை உயர்வதை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.